Thursday, February 27, 2014

லிங்கோற்பவ’காலம்

லிங்க உற்பவம்?
சிவராத்திரி அன்று இரவு முழுவதும் கண் விழித்து ஸ்வாமியை தரிசித்து வழிபாடு செய்ய முடியாவிட்டால் கூட, ‘லிங்கோற்பவ’ காலமாகிய இரவு 11:30 மணி முதல் 1 மணி வரை உள்ள காலத்திலாவது சிவ தரிசனம் செய்து வழிபட வேண்டும்.
சிவராத்திரி தோன்றிய திருத்தலம் திருவண்ணாமலை. அதுபோல், பொய் சாட்சி சொன்ன தாழம்பூவை அது அழகும் வாசனையும் நிறைந்ததாக இருந்தாலும் அதை சிவபெருமான் விலக்கி வைத்தார் என்பதும் தெரியும்.
ஆனால், ‘சிவ ராத்திரியன்று ஒரு நாள் மட்டும், அதுவும் இரவுப் பொழுதில் லிங்கோற்பவ கால...த் தில் தாழம்பூவால் என்னை பூஜை செய்யலாம். அலங்கரிக்கலாம்!’ என்று சிவபெருமான் சொன்னார் என்று ஒரு தகவலும் உண்டு. அதற்கு எந்த விதமான ஆதாரமும் கிடையாது.
அடுத்து, லிங்க உற்பவம் மற்றும் லிங்கத்தைப் பற்றிய உண்மையைப் பார்க்கலாம்.
சிவபெருமான் லிங்க வடிவமாகத் தோன்றிய காலம் & லிங்கோற்பவ காலம் எனப்படுகிறது. சிவலிங்கம் பற்றிய உண்மையான விளக்கம், ஞான நூல்களில் தெளிவாக உள்ளது.
சம்ஸ்கிருத மொழியிலுள்ள ஸ்காந்த புராணத்தில் பார்வதி கல்யாணத்தை விவரிக்கும் பகுதியில் லிங்கத்தைப் பற்றிய உண்மையான தகவல் இருக்கிறது. தமிழில் திரு மந்திரத்தில் சிவலிங்கத்தைப் பற்றிய உண்மையான தகவலைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார் திருமூலர்.

No comments:

Post a Comment