Saturday, February 22, 2014

எங்கே குளித்தால் புண்ணியம் அதிகம்?

 வீட்டில் குளித்தால் வெந்நீரை விட குளிர்ந்த நீரே சிறந்தது.
* மற்றவர்கள் எடுத்து வைத்த நீரைக் குளிப்பதை விட, நீங்களே குழாயிலோ, கிணற்றிலோ, நீர்நிலையிலோ தண்ணீர் எடுத்து வந்து குளிப்பது மிகச்சிறந்தது.
* கிணற்று நீரில் குளிக்கலாம். அதை விட குளத்து நீர் உயர்ந்தது. குளத்தை விட ஆற்றுநீர் இன்னும் பிரமாதம்.
* புண்ணிய நதிகள் இருக்கும் தலங்களுக்கு சென்றால் அவசியம் குளித்து விடுங்கள். உதாரணம் கங்கை, யமுனை, காவிரி, தாமிரபரணி போன்றவை. இந்தக்குளியல் பாவத்தைப் போக்கும்.
* புனித நதிகளை விட கடலில் நீராடுவது இன்னும் புண்ணியம். ஏனெனில், கடலில் எல்லா புண்ணிய நதிகளும் கலக்கின்றன. திருச்செந்தூர், கன்னியாகுமரி, ராமேஸ்வரம், வேதாரண்யம் பக்கம் போனால் அவசியம் கடலில் நீராடுங்கள்.

No comments:

Post a Comment