Friday, February 21, 2014

நான் என்ற உணர்வற்று போதலே சிறந்த வழிபாட்டு நிலை. என்கிறார் புத்தர் பெருமான்.


கீழே போடு..!
=========

ஒரு மனிதர் புத்தருக்குக் காணிக்கை கொடுப்பதற்காக இரண்டு கைகள் நிறைய மலர்களை ஏந்திக் கொண்டு அவரிடம் சென்றார். "புத்தபெருமானே..! நான் உங்களுக்கு மலர்கள் கொண்டு வந்து இருக்கிறேன்" என்றார். 

அவரைப் பார்த்த புத்தர்.., "கீழே போடு..!" என்றார். 

வந்தவருக்கு புத்தரின் வார்த்தைகளை நம்ப முடியவில்லை. ஒருவேளை இடது கையிலும் பூக்கள் இருப்பதால் அது மரியாதைக் குறைவு என்று நினைத்து அவற்றைக் கீழே போடச் சொல்கிறாரோ என்று யோசித்து இடது கையிலிருந்த மலர்களைக் கீழே போட்டார் அவர். 

புத்தர் மீண்டும், "கீழே போடு..!" என்றார். அப்பொழுது, தான் வைத்திருந்த எல்லா மலர்களையும் கீழே போட்டுவிட்டு வெறுங்கையோடு புத்தர் முன்னர் கலக்கத்தோடு நின்றார் அவர். 

புத்தர் மீண்டும், "கீழே போடு..!" என்றார். சென்றவருக்கு ஒரே குழப்பம். "நான் எதைக் கீழே போட வேண்டும்.?" என்று கேட்டார். அதற்கு புத்தர் புன்சிரிப்புடன்.., "கீழே போடச்சொன்னது மலர்களை அல்ல..! அவற்றை கொண்டு வந்து எதுவோ அதைத்தான்..! "என்று சொன்னார்.
 
இங்கே நான் என்ற உணர்வற்று போதலே சிறந்த வழிபாட்டு நிலை. என்கிறார் புத்தர் பெருமான். அறிவாளியால் பிறரையே அறிய முடியும்.. ஞானியால் மட்டுமே தன்னை உணரமுடியும்.
கீழே போடு..!
=========

ஒரு மனிதர் புத்தருக்குக் காணிக்கை கொடுப்பதற்காக இரண்டு கைகள் நிறைய மலர்களை ஏந்திக் கொண்டு அவரிடம் சென்றார். "புத்தபெருமானே..! நான் உங்கள...ுக்கு மலர்கள் கொண்டு வந்து இருக்கிறேன்" என்றார்.

அவரைப் பார்த்த புத்தர்.., "கீழே போடு..!" என்றார்.

வந்தவருக்கு புத்தரின் வார்த்தைகளை நம்ப முடியவில்லை. ஒருவேளை இடது கையிலும் பூக்கள் இருப்பதால் அது மரியாதைக் குறைவு என்று நினைத்து அவற்றைக் கீழே போடச் சொல்கிறாரோ என்று யோசித்து இடது கையிலிருந்த மலர்களைக் கீழே போட்டார் அவர்.

புத்தர் மீண்டும், "கீழே போடு..!" என்றார். அப்பொழுது, தான் வைத்திருந்த எல்லா மலர்களையும் கீழே போட்டுவிட்டு வெறுங்கையோடு புத்தர் முன்னர் கலக்கத்தோடு நின்றார் அவர்.

புத்தர் மீண்டும், "கீழே போடு..!" என்றார். சென்றவருக்கு ஒரே குழப்பம். "நான் எதைக் கீழே போட வேண்டும்.?" என்று கேட்டார். அதற்கு புத்தர் புன்சிரிப்புடன்.., "கீழே போடச்சொன்னது மலர்களை அல்ல..! அவற்றை கொண்டு வந்து எதுவோ அதைத்தான்..! "என்று சொன்னார்.

இங்கே நான் என்ற உணர்வற்று போதலே சிறந்த வழிபாட்டு நிலை. என்கிறார் புத்தர் பெருமான். அறிவாளியால் பிறரையே அறிய முடியும்.. ஞானியால் மட்டுமே தன்னை உணரமுடியும்.

No comments:

Post a Comment