Saturday, February 22, 2014

மயானத்தை ருத்ரபூமி என்கிறார்களே ஏன்?

மயானத்தை ருத்ரபூமி என்கிறார்களே ஏன்?
தேவாரத்தில், "காடுடைய சுடலைப் பொடி பூசி' என்று பாடுகிறார் திருஞானசம்பந்தர். மயானச் சாம்பலைப் பூசிக் கொள்பவர் சிவபெருமான். படைத்தலை பிரம்மாவும், காத்தலை விஷ்ணுவும், அழித்தலை ருத்ரனும் செய்கின்றனர். ஒருவருடைய ஆயுள்காலம் முடிந்ததும், எமன் உயிரைப் பறிக்கிறான். இது ருத்ரனின் கட்டளைப்படியே நடக்கிறது. எனவே, தான் நீண்ட ஆயுள் பெற வேண்டி ருத்ராபிஷேகம், மிருத்யுஞ்ஜய ருத்ரஹோமம் போன்றவற்றை செய்கிறோம். உயிர் பிரிந்த உடல்கள் எரிக்கப்பட்ட பிறகும், உயிர்கள் மீதுள்ள கருணையாலும், அவை நல்வினை பெறுவதற்காகவும், சிவன் சுடுகாட்டுச் சாம்பலைப் பூசிக் கொள்கிறார். உலக நன்மைக்காக மயானத்தில் ருத்ரதாண்டவம் ஆடுகிறார். இதனை மாணிக்கவாசகரும் திருவாசகத்தில், "நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே' என குறிப்பிடுகிறார்.

No comments:

Post a Comment