Sunday, February 23, 2014

அதர்வ வேத உண்மைகள்:






அதர்வ வேத உண்மைகள்:

* உலகம் கடல் நீரால் சூழப்பட்டுள்ளது; நீர் இரண்டு வாயுக்களின் சேர்க்கை. அதாவது ஒன்று - பிராண வாயு - ஒரு பங்காகவும், மற்றொரு வாயு - ஜலவாயு - இரண்டு பங்காகவும் நீரில் கலந்திருக்கின்றன.

* மின்சாரத்தை வித்யுத் சக்தி என்பர். இது தாமிரத்தில் தடையின்றிச் செல்லும். நீர், தனிமப் பொருட்கள், சூரியன் மற்றும் கடல் இவற்றிலெல்லாம் மின்சாரத்தைப் பெற முடியும்....

* நீர் மின்சாரம், அனல் மின்சாரம் இவற்றை உருவாக்கிய விஞ்ஞானம், சூரிய ஒளி மற்றும் கடல் அலைகளிலிருந்து மின்சாரம் எடுப்பது பற்றிய ஆராய்ச்சியில் தற்போது ஈடுபட்டு வருகிறோம். ஆனால், பல்லாயிரம் வருடங்களுக்கு முந்தைய அதர்வ வேதத்தில் இந்த உண்மை வியக்கத்தக்க விதத்தில் அறுதியிட்டுக் கூறப்பட்டுள்ளது.

* ஒரு குறிப்பிட்ட யாகத்தின்போது ஹோமகுண்டம் சந்திரனின் மண் கொண்டு அமைக்கப்பெற வேண்டும்; முனிவர்கள் உரிய ஒரு மந்திரத்தைச் சொல்லி, சந்திரனிலிருந்து கறுப்பு நிற மண்ணை நேரடியாக வரவழைப்பார்கள் என்றும் அதர்வ வேதம் கூறுகிறது. சந்திரனின் மண் கறுப்பு என்பது சில வருடங்களுக்கு முன்புதான் அறிய வந்த விஞ்ஞான உண்மையாகும்.

வாடா மலர் (பாகம் 1) நூலில் கிருஷ்ணாபுரம் ஆர். சங்கரநாராயணன்

No comments:

Post a Comment