Sunday, March 9, 2014

பிரயாணத்தில் இருக்கும்போது, அமாவாசை தர்ப்பணம் செய்வது எப்படி?

பிரயாணத்தில் இருக்கும்போது, அமாவாசை தர்ப்பணம் செய்வது எப்படி?
கூடுமானவரை தர்ப்பண நாளில், பிரயாணத்தை அமைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. வெளியூர் கிளம்பும் முன்பே, வீட்டில் தர்ப்பணம் முடித்து, சாப்பிட்டு விட்டு புறப்படலாம். தவிர்க்க முடியாத சூழ்நிலையில், நீண்ட தூர பயணத்தின் நடுவில் அமாவாசை வந்து விட்டால், ரயில் பயணமாக இருந்தால் அதிலேயே குளித்து விட்டு தர்ப்பணம் செய்ய வேண்டும். விமானப்
பயணமாக இருந்தால், ஏதாவது ஒரு இடத்தில் நின்று மாறும் இடத்தில் குளித்து தர்ப்பணம் முடிக்கலாம். கையில் சிறிது எள்ளும் தண்ணீரும் இருந்தால் போதும். இது போன்ற சமயத்தில், வீட்டில் தயார் செய்த சப்பாத்தி சாப்பிடலாம் எனவும், அதற்கு பழையது தோஷம் இல்லை எனவும் காஞ்சிப்பெரியவர் கூறியுள்ளார்.




மணப்பந்தலில் கட்டிய வாழை மரத்தின் பூ, காய்களை சமையலுக்குப் பயன்படுத்தலாமா?
முகூர்த்தப் பந்தலில் மங்களச் சின்னங்களாகத் தான் வாழை மரம் கட்டப்படுகிறது. இவற்றின் பூ, கா#களைச் சமையலுக்குப் பயன்படுத்தலாம்.

No comments:

Post a Comment