Saturday, May 31, 2014

முருகனுக்கு உகந்ததாகக் கருதப்படும் கந்தரப்பத்தின் செய்முறை

தமிழ் கடவுள் முருகனுக்கு உகந்ததாகக் கருதப்படும் கந்தரப்பத்தின் செய்முறை
என்னென்ன தேவை?
பச்சரிசி - 2 கப், 
புழுங்கல் அரிசி - 1/4 கப், 
உளுத்தம்பருப்பு - 1/4 கப், 
கடலைப்பருப்பு - 1/8 கப், 
வெந்தயம் - 1 டீஸ்பூன், 
வெல்லம் - 2 கப், துருவிய தேங்காய் - 1 கப், 
ஏலக்காய் - 4, 
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
பச்சரிசி, புழுங்கல் அரிசி, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வெந்தயம் எல்லாவற்றையும் கழுவி 2 மணிநேரம் நன்றாக ஊறவைக்கவும். பிறகு நைசாக அரைத்து அதில் வெல்லம், தேங்காய்த் துருவல், ஏலக்காய் சேர்த்து இன்னும் 5 நிமிடம் அரைக்கவும். எண்ணெய் சூடாக்கி, ஒரு கரண்டி மாவை எடுத்து ஊற்றவும். அப்பம் உப்பி மேலே வரும்போது திருப்பி விட்டு வேகவைத்து எடுக்கவும். சூடாகப் பரிமாறவும். மாவை நன்கு அடித்து ஊற்றினால் நன்றாக வரும்

No comments:

Post a Comment