Thursday, May 29, 2014

கோயில் இல்லாத "இருவர்'

விஷ்ணுவின் பிள்ளைகளான பிரம்மாவுக்கும், மன்மதனுக்கும் வழிபாடு கிடையாது. இவர்கள் லட்சுமியின் சம்பந்தம் இல்லாமல் பிறந்தவர்கள். விஷ்ணுவின் நாபித்தாமரையில் பிறந்ததால் "கமலஜர்' என்று பிரம்மாவுக்கு பெயர். அவர், மன்மதனை மனதால் உண்டாக்கியதால், அவனுக்கு "மனசிஜன்' என்று பெயர். இந்த இருவரும் இல்லா விட்டால், உயிர்கள் மண்ணில் பிறக்க முடியாது. மன்மதனே, மலர்க்கணை தொடுத்து, ஒரு ஜீவனின் உற்பத்திக்கு காரணமாகிறான். அந்த உயிர் புகுவதற்கான உடலைக் கொடுப்பவர் பிரம்மா. ""<இப்படி, உயிர்களை, பிறவிப்பிணியில் சிக்கித் தத்தளிக்க செய்வதால், இவர்களுக்கு வழிபாடு இல்லாமல் போய் விட்டது,'' என்று கூறுகிறார் காஞ்சிப்பெரியவர்

No comments:

Post a Comment