Thursday, May 29, 2014

வியாபார ஸ்தலங்களுக்கு ஏற்ற மந்திரம்

வியாபார ஸ்தலங்களில் மகாலட்சுமியின் திருவுரவப் படத்தையோ, சிறு சிலை வடிவத்தையோ வைத்து தினமும் பூஜை செய்த பின்பே, அன்றைய வியாபாரத்தை தொடங்கும் வழக்கம் பெரும்பாலோனோர்களுக்கு  உண்டு. அவ்வாறு மகாலட்சுமி பூஜையைச் செய்வதன் மூலமாகவும், கீழே குறிப்பிட்ட மந்திரத்தை அதனுடன் உச்சாடனம் செய்வதன் மூலமாகவும் பல வகைகளில் வியாபார வளர்ச்சி நிலைகளை எட்டலாம்.  

நமது கடைகள், அலுவலகங்கள், தொழிற்கூடங்கள், உணவகங்கள், நிறுவனங்கள் ஆகிய எந்த வகையான வியாபார ஸ்தலமாக இருந்தாலும், லட்சுமி கடாட்சம் ஏற்பட முக்கியத் தேவை எதுவெனில், அங்கு கடைபிடிக்கப்படும் சுத்தமேயாகும். மனம், வாக்கு, காயம் ஆகிய திரிகரண சுத்தி மட்டுமல்லாமல் நமது இல்லங்கள், வியாபார, மற்றும் தொழில் தலங்கள் ஆகியவற்றிலும் நாம் கடைபிடிக்கும் தூய்மையானது மகாலட்சுமி ஆகர்ஷயத்தை அமைத்து வைக்கும் ஒரு முக்கியமான காரணியாக விளங்குகிறது. அதன் பிறகே பூஜைகளும், மந்திர ஜபங்களும் இளம் பெற்று தத்தமது பலன்களைத் தருகின்றன.  

ஆகவே, நமது வியாபார ஸ்தலங்களில் காலையில் செய்யும் சிறு பூஜையோடு கீழ்வரும் மந்திரத்தையும் பயன்படுத்தி நல்ல பலன்களைக் காணலாம். நெய்யிலோ, நல்லெண்ணெயிலோ தீபம் ஏற்றுவது விசேஷம்.  மந்திரம் கீழ்வருமாறு:-

ஸ்ரீ சுக்லே மஹா நிவாஸே

ஸ்ரீ மஹா லட்சுமி நமோ நம.

No comments:

Post a Comment