Monday, July 28, 2014

கடவுளுக்கு குணமிருக்குமா

முக்குணங்கள் பற்றி சொல்லும்போதிலிருந்தே பலரும் என்னைக் கடவுளுக்கு குணமிருக்குமா என்றெல்லாம் என்னை வசை பாடினார்கள்!! இன்னமும் பாடிக் கொண்டே இருக்கின்றனர்!!! இன்னொன்று இந்தப் பதிவுத் தொடரில் நான் எங்குமே குறிப்பிடாத நிர்க்குணம் என்கிற பெயரையும் அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள்!! அவ்வாறு சொல்வது ஏன் என்பது அவர்களுக்கே தெரியும்!!!! மும்மூர்த்திகள் நிர்க்குணக் கடவுளர் அல்ல!!! அப்படி ஏதேனும் இருந்தால் ஆதாரத்துடன் நிரூபிக்கலாம்!! மும்மூர்த்திகளும் உலகியலில் தத்தம் கடமைகளை செய்கின்றனர்!! அவ்வளவே!!! குணங்கள் எல்லாமே கடவுளின் படைப்புதான்!! அப்படியிருக்க அவருக்கே அந்தக் குணங்கள் எப்படி இருக்கும் ?? இதில் முக்கிய விஷயம் சிவபெருமானை தமோகுணப் பிரதிநிதியாக சொல்லக் கூடாது என்கிற வாதமே!!! இதன் பொருள் சிவபெருமான் தமோகுணம் உள்ளவர் என்பதல்ல!! அவர் தமோகுணத்தின் மூலமாக மனிதரை ஆட்கொண்டு பிரபஞ்சத்தை இயக்கிச் செல்கிறார் என்பதே!! இதைப் புரிந்து கொள்ளவோ ஏற்கவோ மாட்டேன் என்பவருக்கு நான் இதற்கு மேல் சொல்ல விரும்பவில்லை!! இருப்பினும் கடவுளர் வர்ணனை எந்தக் குணங்களாக இருந்தாலும் ஒரு விஷயம் கவனிக்கத்தக்கது!! முக்குணங்கள் என்பது தனியாக எந்த மனிதரிடத்தும் இருப்பதில்லை!!! எல்லாக் குணங்களும் சேர்ந்துதான் இருக்கும்!! சந்தர்ப்பங்களுக்கு ஏற்றவாறு அது வெளிப்படும்!! உதாரணமாக சாது மிரண்டால் என்று சொல்வது சத்வ குணமே மிகுதியாக இருக்கும் ஒருவன் ஒரு கட்டத்தில் ரஜோ குணத்தை வெளிப்படுத்துவதே!! அதே போல சத்வ குணப் பிரதிநிதியாக சொல்லப்படும் விஷ்ணுவும் கூட நரசிம்ம அவதாரம் எடுக்கும் போது ரஜோகுணம் கொண்டவராக மாறிப் போனார் என்பது நாம் உணரும் உண்மை!! இவ்வாறு குண மாறுபாடுகள் இல்லாமல் மனிதரால் மட்டுமின்றி கடவுளராலும் உலகை இயக்க இயலாது!!!
நரசிம்ம அவதாரம் போல இன்னொரு கதையை இங்கு விளக்க விரும்புகிறேன்!! பஸ்மாசுரன் சிறந்த சிவபக்தன்!! உலகுக்கு தானே கடவுளாக வேண்டுமென்கிற வெறியுள்ள அரக்கன்!! அவன் பல்லாயிரம் ஆண்டுகள் சிவபெருமானை நோக்கித் தவம் செய்த நிலையில் அவனுக்கு பரமேஸ்வரன் காட்சி தந்து வரம் கேட்க சொன்னார்!! அவனோ சாகாவரம் கேட்டான் !! அது இயலாத கதை என்று அப்பன் சொல்லவும் தான் யாரைக் கொல்ல வேண்டுமென்று நினைக்கிறேனோ அவர்கள் இறந்து போக வேண்டும் என்று சொல்ல நினைப்பால் சாகடிக்க இயலாது என்றார் ஈஸ்வரன்!! பின் அவன் பல வகையிலும் கேட்டுப் பார்த்து அப்புறம் ஒரு வழியாக தான் யார் தலை மேல் கைவைக்கிறேனோ அவர்கள் சாக வேண்டும் என்று வரம் கேட்க ஈஸ்வரனும் வழங்கினார் !!
அவனோ அதைப் பெற்றுக் கொண்டு இதை உங்களிடமே பரீட்சை செய்து பார்க்கிறேன் என்று சிவபெருமானின் தலையில் கைவைக்க வந்தான்!! (வரம் கொடுத்தவன் தலையிலேயே கை வைப்பது என்கிற பழமொழி இக்கதையின் அடிப்படையில் வந்ததே!!) சரி சிவபெருமானுக்குத் தெரியாதா தாம் அழியாத கடவுள் என்று??? ஆனால் அந்த ஒரு சிறு கணத்தில் அவரும் மாயைக்கு ஆளானார்!! அவனிடம் இருந்து விலகிப் போனார்!! அவனோ விடாமல் பின்னாலேயே வந்து கொண்டிருந்தான்!! இப்படி ஈரேழு பதினாலு உலகங்களும் சுற்றிய பின்னர் சிவபெருமான் வைகுந்தம் அடைந்தார்!! அங்கு நடப்பதை ஏற்கெனவே அறிந்த நாராயணன் மோகினி அவதாரம் எடுத்து நின்றார்!!
மோகினியைக் கண்ட அசுரன் வந்த வேலையை மறந்தஅவளிடம் மயங்கி அவளுடன் ஆடத் துவங்கினான்!! பல வகைகளிலும் அபிநயம் பிடித்த மோகினி ஒரு நேரம் வேகவேகமாக அபிநயம் செய்கையில் அசுரனும் அதே வேகத்துடன் அபிநயம் பிடித்தான்!! அப்போது மோகினி தன தலையில் தன கையை வைக்க அசுரன் மாயையால் தான் பெற்ற வரத்தை மறந்து தன் தலையிலேயே கையை வைக்க எரிந்து போனான்!!
இந்தக் கதையை வைணவர்கள் பெருமையாக சொல்லிக் கொள்வது உண்டு!! ஆனால் அது அப்படியல்ல!! கடவுளருக்கும் சிற்சில நேரங்களில் மாயாவசம் உண்டாகும் என்பதை சொல்லி நிற்கும் கதை இது அவ்வளவே!!!

No comments:

Post a Comment