Monday, August 25, 2014

எண்ணெய் ஸ்நானம் செய்யத் தகாத நாள்

எண்ணெய் ஸ்நானம் செய்யத் தகாத நாள்

1,உத்தராயண-தக்ஷிணாயன புண்ய காலங்களிலோ
2,துலா விஷு முதலிய காலங்களிலோ
3,செவ்வாய்க் கிழம 4,தேய்பிறையிலோ
-----------------------------------------------------------
(-எண்ணெய் தேய்த்து ஸ்நானம் செய்தல்_)
பானுவாரம் சிஸ்ரவாரம் முடிய எண்ணெய் தேய்த்து ஸ்நானம் செய்தலுக்கான பலன்கள்
1)
ஞாயிற்றுக் கிழமை எண்ணைத் தேய்த்து ஸ்நானம் செய்தால் இதயத்தில் எரிச்சலை உண்டு பண்ணும்.
2)
திங்கட்கிழமை எண்ணை ஸ்நானம் தோலின் பொலிவையும்,சிகப்பு நிறத்தையும்
அளிக்கும்.
3)
செவ்வாய் கிழமை எண்ணை ஸ்நானம் அகால மரணத்தைத்தரும்
4)
புதன் கிழமை எண்ணை ஸ்நானம் செய்தால் பொருள் விருத்தியைத் தரும்
5)
வியாழக்கிழமை எண்ணை ஸ்நானம் ஏழ்மையையும்,பணக் குறைவையும் அளிக்கும்.
6)
வெள்ளிக்கிழமை எண்ணை ஸ்நானம் பல விதங்களில் ஆபத்து விளைவிக்கும்
7) சனிக்கிழமை எண்ணை ஸ்நானம் ஆயுள் விருத்தியையும் மனச் சந்தோஷத்தையும் திருப்தியையும் அளிக்கும்.
(<எண்ணைய் தேய்த்து ஸ்நானம் செய்ய ஏற்ற திதிகள்>)
க) த்விதியை,திரிதியை,பஞ்சமி,சபதமி,தசமி,த்ரையோதசி ஆகிய தினங்கள் பலத்தையும்,பொருளையும் நீண்ட ஆயுளையும்,புத்திரர்களையும் அளிக்கும்
௨) தசமி திதியில் எண்ணெய் தேய்த்து ஸ்நானம் செய்தல் நலம்
௩) தசமி திதிகளில் எண்ணெய் தேய்க்காமல் ஸ்நானம் செய்தால் அது ஆயுள்
புத்திர்க்கூர்மை,புகழ் இவற்றைக் குறைக்கும்
( -தவிர்க்க வேண்டிய திதிகள்_)
பிரதமை, சதுர்த்தி, சஷ்டி,நவமி,சதுர்த்தசி,அமாவசை ஆகியவை வாழ்க்கையில் உள்ள சுகபோகங்களையும் புத்திசாலித்தனத்தையும்,சரீர பலத்தையும்,புகழையும்
குறைக்கும்,ஆகவே அவற்றைத் தவிர்த்தல் நலம்
குறிப்பு:} மேற்கூறிய தினங்கள் எண்ணெய் ஸ்நானம் செய்ய அவசியம் ஏற்பட்டால் கெட்ட பலனைக் குறைக்கு எண்ணெயுடன் நெய்யைச் சேர்த்துக் கலந்து குளித்தால் நல்லது 

No comments:

Post a Comment