Monday, August 25, 2014

குடும்பப் பெண்களுக்குச் சாஸ்திரம் கூறும் சில விஷயங்கள்

ஒருவருக்கு இலட்சுமி கடாட்சம் நிலைத்திருக்கக் குடும்பப் பெண்களுக்குச் சாஸ்திரம் கூறும் சில விஷயங்கள்
1. சூரியன் உதித்த பிறகும் படுக்கையில் தூங்கிக்கொண்டிருக்கக்கூடாது, 2. பால், தயிர், பச்சைக்கறிகாய்கள், சுண்ணாம்பு, உப்பு, தவிடு, நெருப்பு, தண்ணீர் ஆகியவற்றை இரவில் கடன் கொடுக்கவோ, வாங்கவோ கூடாது 3. பாலைப்பொங்கிவழியவிடக்கூடாது 4. இரவில் குப்பை கூளங்களை வீட்டிற்கு வெளியே கொட்டக்கூடாது, 5. மாலையில் விளக்கு ஏற்றிய உடனே வெளியில் செல்லக்கூடாது, வம்பு பேசக்கூடாது, 6. விளக்கு ஏற்றிய பிறகு தலைவாரிக்கொள்ளுதல்,முகம்கழுவுதல், தயிர் சிலுப்புதல், கறிகாய் நறுக்குதல், அரிசி களைதல், கூட்டுதல் முதலியவற்றைச் செய்யக்கூடாது.

No comments:

Post a Comment