Monday, September 15, 2014

நாலுபேர் மெச்ச வாழணும்' நாலு பேர் போன பாதையில் போ!'

நாலுபேர் மெச்ச வாழணும்' என்ற ஆசை அனைவருக்கும் இருப்பது தான். "உலகம் நம்மை பாராட்டணும்' என்று தான் இதற்கு பொருள் கூறுவார்கள். ஆனால், இதன் உண்மையான அர்த்தமே வேறு. நம்மை பாராட்ட வேண்டிய நாலுபேர் "மாதா, பிதா, குரு, தெய்வம்'. இவர்களின் உள்ளம் குளிர்ந்து பாராட்டும் விதத்தில் நம் வாழ்வு அமைய வேண்டும். அதே போல பெரியவர்கள், "நாலு பேர் போன பாதையில் போ!' என்று இளைய தலைமுறைக்கு வழிகாட்டுவார்கள்.
அந்த நாலு பேரையும் சிவன் கோயிலுக்குச் சென்றால் தரிசிக்கலாம். சமயக்குரவர் என போற்றப்படும் ஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நான்கு அடியவர்களையும் "நால்வர்' என்று சொல்வது மரபு. அந்த நாலு பேர் சென்ற பாதையே நல்ல பாதை. அவர்களைப் போல சிவ சிந்தனையோடு வாழ்ந்தால் வாழ்வு சிறக்கும்.

No comments:

Post a Comment