Monday, September 1, 2014

புற்று உள்ள இடத்தில் வீடு கட்டலாமா?

காலி இடம் அல்லது வீட்டின் அருகில் பாம்பு புற்று இருந்தால் சிலர் வீடு கட்டுவதற்குத் தயங்குவார்கள். இவர்கள் முதலில் தெளிவாக  ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். புற்றை பாம்புகள் உருவாக்குவதில்லை. எறும்புகள் உருவாக்கிய புற்றில்தான் பாம்புகள்  வசிக்கின்றன. எனவே புற்று உள்ள இடங்களில் தாராளமாக வீடுகட்டலாம்.

புற்றை இடிக்கும் முன் முதலில் புற்றைச் சுற்றிலும் இனிப்பு கலந்த பால் ஊற்றவும். மறுநாள் மஞ்சள் கலந்த உடைந்த அரிசியை  புற்றைச் சுற்றி தெளிக்கவும். பின்னர் நாட்டுச் சர்க்கரையையும் அவ்வாறே தெளிக்கவும். இரண்டு நாள் கழித்து பாம்பாட்டியை அழைத்து  வந்து, பாம்பு இருந்தால் பிடித்து செல்ல ஏற்பாடு செய்யவும். பின்னர் அந்தப் புற்றை அகற்றிவிட்டு அந்த இடத்தில் வீடுகட்டிக்  கொள்ளலாம். தோஷம் எதுவும் உண்டாகாது

No comments:

Post a Comment