Monday, October 20, 2014

விநாயகப் பெருமான்--4 விதமாக அதிசய– அற்புத திருவடிவை கொண்டவர்

 விநாயகப் பெருமான்– மனித கண்கள், யானை முகம், பேழை வயிறு, தேவ அம்சம் என 4 விதமாக அதிசய– அற்புத திருவடிவை கொண்டவர். விநாயகப் பெருமான் ‘ஓம்’ என்னும் பிரணவ வடிவமாகவும், ‘கம்’ என்னும் பீஜ மந்திரமாகவும் காட்சி தருபவர்.

அருகம்புல், எருக்கம்பூ, வன்னி இலை போன்றவை விநாயகருக்கு பிடித்தமானவை. இதனைக் கொண்டு அவருக்கு அர்ச்சித்து வழிபட்டால் சகல நன்மைகளும் வந்து சேரும், கிரக பீடைகள் அகன்றோடும்.

* இதிகாசங்களிலும், ஆகம விதிகளிலும், விநாயகப் புராணத்திலும், விநாயகருக்கு 32 வடிவங்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளன. அவை. பால கணபதி, தருண கணபதி, வீர கணபதி, சக்தி கணபதி, துவஜ கணபதி, சித்தி கணபதி, உச்சிஷ்ட கணபதி, ஷிப்ர கணபதி,

விக்ன கணபதி, ஹேரம்ப கணபதி, லட்சுமி கணபதி, மகா கணபதி, விஜய கணபதி, நிருத்த கணபதி, ஊர்த்துவ கணபதி, ஏகாட்சர கணபதி, வர கணபதி, திரயஷ்ர கணபதி, ஷிப்ரப் பிரசாத கணபதி, பக்தி சக்தி, ஹரித்துர கணபதி, ஏகநந்தக் கணபதி,

சிருஷ்டி கணபதி, உத்தண்டக் கணபதி, ருணமோஷன கணபதி, துண்டிக் கணபதி, துவிமுகக் கணபதி, திரிமுகக் கணபதி, சிங்க கணபதி, யோகக் கணபதி, துர்க்கா கணபதி, சங்கடஹர கணபதி.

No comments:

Post a Comment