Tuesday, November 18, 2014

அனைத்து கிரக தோஷங்களும் பொடிப்பொடியாக ஆகவேண்டுமா?

அனைத்து கிரக தோஷங்களும் பொடிப்பொடியாக ஆகவேண்டுமா? எந்த செலவும் இல்லாமல்.
இதை பாருங்கள்.
எந்த ஒரு வீட்டில் ,ஒரு பெண் கண்ணீர் சிந்தாமல் இருக்கிறார்களோ ,எந்த பெண் எப்போதும் மங்களகரமான பொருட்களை உபயோகப்படுத்துகிறார்களோ, வீட்டு வாசல்படியில் அமராமல் இருக்கிறார்களோ,அடிக்கடி வீட்டை விட்டு வெளியில் சுட்ராமல் இருக்கிறார்களோ, அங்கே கிரகங்களால் ஒன்றும் செய்ய இயலாது.
கணவனை தெய்வமாக மதிக்கவேண்டும். மனைவியை கை நீட்டி அடிக்ககூடாது .நொந்த வார்த்தைகளை உபயோகப்படுத்தாமல் இருக்கவேண்டும். அதிகாலையிலே எழுந்துவிடவேண்டும் வீட்டில் அனைவரும். யாரும் அதிகமாக தூங்கிக்கொண்டே இருக்ககூடாது.
எப்போது பார்த்தாலும் சாப்பிட்டுக்கொண்டே இருக்கக்கூடாது. எல்லாமே ஒரு அளவுதான்.
எந்த பெண்ணையும் கண்ணீர் சிந்தாமல் பாதுகாக்கவேண்டும். எந்த பெண்ணும் கணவனை மதித்து நடக்க்கவேண்டும்.
காலில் வெள்ளியில் மெட்டியும், கழுத்தில், மஞ்சள் சரடும் அவசியம் வேண்டும். தங்கத்தில் திருமாங்கல்யத்தை அணிந்துகொண்டு, சரட்டை விட்டுவிடக்கூடாது

No comments:

Post a Comment