Friday, November 21, 2014

விபூதி அல்லது திருநீறு.

நாம் வெளியில் செல்லும் போது,
அங்கு இருக்கும்
அதிர்வுகளை பலவழிகளில் நம் உடல் ஏற்றுக்
கொள்கிறது. இது நம் உடலின் ஏழு சக்கரங்கள்
வழியாக நிகழ்கிறது.
அதனால் தான், நல்ல அதிர்வுகளை நம் உடல்
ஏற்றுக் கொள்ளும் விதமாக திருநீறு இட்டுக்
கொள்ளும் வழக்கம் நம் கலாசாரத்தில்
இருந்து வருகிறது. பசுவின் சாணம்
மற்றும் சில பிரத்யேகப் பொருட்கள் கலந்த
கலவையின் சாம்பல் தான்
விபூதி அல்லது திருநீறு.
இதற்கு அதிர்வுகளை உள்வாங்கும் திறன்
உண்டு. விபூதி இட்டுக் கொள்ளும் போது,
வாழ்வின் உயர்ந்த அம்சங்களை ஈர்த்துக்
கொள்ளலாம். நம்மைச் சுற்றிலும் தெய்வீகத்
தன்மை உண்டாகும். இதனால், தீயவற்றைத்
தவிர்க்க முடியும்.
புருவ மத்தியில் (ஆக்ஞா சக்கரம்)
திருநீறு பூசினால் வாழ்வின்
ஞானத்தை ஈர்த்துக் கொள்ளலாம்.
தொண்டைக்குழியில்(விசுத்தி சக்கரம்)
பூசினால் உடலிலும், மனதிலும்
சக்தி அதிகரிக்கும்.
நெஞ்சுக்கூட்டின் மையப்பகுதியில்
பூசினால் தெய்வீக அன்பைப் பெறலாம்

No comments:

Post a Comment