Wednesday, November 19, 2014

கோபுரத்தில் இருக்கும் கலசங்களின் நோக்கம் என்ன?

கோபுரத்தில் இருக்கும் கலசங்களின் நோக்கம் என்ன?
கோபுர கலசங்கள் தெய்வ சக்தியை இழுத்து கோயிலுக்குள்ளேயே செலுத்தும் ஆற்றல் படைத்தவை. "ஆண்டனா' எப்படி ஆற்றலை இழுக்கிறதோ அதுபோல, ஆன்மிக ரீதியாக நிகழும் ஒரு அற்புதம் தான் கோபுர கலசத்தின் வழியாக தெய்வீக சக்தி கருவறையில் இருக்கும் விக்ரகங்களை ஒளி பெறச் செய்கிறது. கலசங்கள், அதனுள் இடப்படும் வரகு தானியம், உச்சரிக்கப்படும் மந்திரங்கள் இவை மூன்றும் இணைவதால் ஏற்படும் வேதியல் உருவாக்கத்தால் கோயிலிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இடி விழாமல் தடுக்கப்படுகிறது. நமது சாஸ்திரத்தில் கூறியுள்ள இந்த விஷயங்களை மேலை நாட்டு ஆராய்ச்சியாளர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment