Thursday, November 13, 2014

அக்னி தீர்த்தம் பெயர்க் காரணம்!

ரிக் வேதத்தில், அக்னி வழிபாடு பற்றிய குறிப்பு இடம் பெற்றுள்ளது. தூய்மையின் அடையாளமான அக்னியை சாட்சியாக வைத்து புதுமண மக்களுக்கு சடங்கு நடத்தப்படுகிறது. எந்த கடவுளுக்கு யாகம், ஹோமம் நடந்தாலும் அதை அந்தக் கடவுளிடம் சேர்ப்பவர் இவரே. புனிதமானது மட்டுமில்லாமல், தன்னைத் தீண்டியவர் யாராக இருந்தாலும் அவர்களையும் தன் வசமாக்கும் சக்தி இவருக்கு உண்டு. கற்பு நெறி தவறாத பெண்களை அக்னியின் பெயரோடு சேர்த்து "கற்புக்கனல்' என்று குறிப்பிடுவர். கனல் என்றால் நெருப்பு. அசோகவனத்தில் இருந்து வந்த போது, கற்புக்கரசியான சீதையை அக்னி சூழ வேண்டி நேர்ந்தது. இதனால் தனக்கு பாவம் ஏற்பட்டதாக கருதிய அக்னி, ராமேஸ்வரம் கடலில் நீராடினார். இதனால், இக்கடலுக்கு "அக்னி தீர்த்தம்' என்று பெயர் ஏற்பட்டது. இங்கு நீராடினால் எத்தகைய கொடிய பாவமும் தீரும் என்பது ஐதீகம்.

No comments:

Post a Comment