Thursday, November 13, 2014

ஆண்டுதோறும் கோயிலில் திருக்கல்யாணம் நடத்துவது ஏன்?

** ஆண்டுதோறும் கோயிலில் திருக்கல்யாணம் நடத்துவது ஏன்?
பெற்றோருக்கு மணிவிழா, சதாபிஷேகம் போன்றவை செய்து பார்த்து மகிழ்வது போல் இறைவனுக்கு திருக் கல்யாணத்தை ஒரு வழிபாடாகச் செய்து வருகிறோம். இதனால், இறைவன் மிக்க மகிழ்ச்சிஅடைந்து, ""லோக கல்யாணம் அருள்கிறார்'' என்பது சாஸ்திரம். அதாவது சுவாமிக்கு திருக்கல்யாணம் செய்வித்தால் பக்தர்களின் இல்லங்களில் நித்ய கல்யாணம் போல் மகிழ்ச்சியாக இருக்கும். எனவே, ஆண்டுக்கொரு முறையாவது செய்ய வேண்டும் என்பதால் உற்ஸவ காலங்களில் நிகழ்த்தப்படுகிறது. திருப்பதி வெங்கடாசலபதிக்கு பக்தர்களின் வேண்டுதலுக்காக நித்ய கல்யாணமாக தினமும் சிறப்பாக நடக்கிறது

No comments:

Post a Comment