Sunday, December 28, 2014

திறந்த வெளியில் 50, 60 அடி உயரத்திற்கு சிலை வைக்கிறார்களே. சிலை வழிபாட்டுக்குரியவை தானா?

 திறந்த வெளியில் 50, 60 அடி உயரத்திற்கு சிலை வைக்கிறார்களே. சிலை வழிபாட்டுக்குரியவை தானா?
எவ்வளவு அடி உயரத்தில் வேண்டுமானாலும் சிலை வைக்கட்டும். திறந்த வெளியில் இருப்பது தான் உங்கள் கேள்விக்கு இடமளிக்கிறது. திருச்சி உறையூர் வெக்காளிஅம்மன், நாமக்கல் ஆஞ்சநேயர் போன்ற தெய்வச் சிலைகள் திறந்த வெளியில் உள்ளனவே என்று கேட்கிறார்கள். அவை பழமையானவை. திறந்த வெளியில் இருப்பதற்கு அந்தந்தக் கோயிலுக்கென்று சில புராண வரலாறுகள் இருக்கின்றன. எனவே, இத்தலங்களை உதாரணமாகக் கொண்டு புதிதாக திறந்த வெளி சிலைகளை அமைப்பதை ஏற்றுக் கொள்ள இயலாது. இதற்கு மேல் இப்படிச் செய்பவர்கள் தான் விளக்கம் அளிக்க வேண்டும்.

No comments:

Post a Comment