Sunday, December 21, 2014

மனிதனின் கடன்கள்.

மனிதனின் கடன்கள்.
இந்த சரீரத்தை போஷித்து வளர்த்த மாதா பிதாகளுக்கு நாம் கடன் பட்டவர்கள். நமது பாப புண்ணிய கணக்குகளை கவனித்து நமக்கும் நல்லது கெட்டதுகளை நிர்வஹிக்கும் தேவதைகளுக்கு நாம் வரி கட்ட வேண்டிய கடன்காரர்கள்.
நமக்கு பல வழிகளிலும் உபகாரமாக இருந்து உதவும் பஞ்ச பூதங்களுக்கும் நாம் கடன்காரர்கள். இந்த ஜீவனுக்கு இந்த சரீரம் கடனாக கொடுக்க பட்டிருக்கிறது. இந்த ஜீவனாவது இந்த சரீரத்தின் உதவியால் கர்மபந்தங்களை அறுக்க வேண்டும்.
பாபங்களை போக்கி கொள்ள வேன்டும். அதற்காகத்தான் இந்த சரீரத்தை கடனாக கொடுதிருக்கிறார். நம்மை சுற்றி கடன் மயம். கடனை அடைக்காமல் இருந்தால் கடன் எப்படி தீரும்.
ஒரு தொழிலதிபர் வங்கியில் கடன் வாங்குவது போல் நாம் கடன் வாங்கி வந்து பிறந்து இருக்கிறோம். வங்கி கடனை திருப்பி தராமல் தொழில் அதிபர் தப்பிக்க முடியாது.
இது போல் தான் நாமும் தெய்வதிற்கும், பித்ருக்களுக்கும், தேவதைகளுக்கும் கடன்களை திருப்பி செலுத்தாவிட்டால் தேவதைகள் ஞாபக படுத்துவார்கள், தண்டனையும் கொடுப்பார்கள். கோச்சார ரீதியாக நவகிரகங்கள் ஞாபக படுத்தும்.
குழந்தைகள் உடல் நிலை பாதிக்க படும். ஆபிசில் ப்ரச்சனைகள், , மன கலக்கம், பயம், மனைவியுடன் கோபம், மனஸ்தாபம், படிப்பில் ப்ரச்னை, குழந்தை பிறக்காமல் இருப்பது, பெண்கள் திருமண தாமதம், தேவையில்லாத வெறுப்புகளுக்கு ஆளாவது, சோக ஸம்பங்கள் நிகழ்வது, இம்மாதிரி தொந்தரவு கொடுத்து ஞாபக படுத்தும்..

No comments:

Post a Comment