Saturday, December 20, 2014

சபரிமலை பெயர் வந்த விதம்

சபரி என்பவள் ஒரு வேடர் குல தலைவனின் மகள். இவளுக்கு வேடர் குலத்தில் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்த போது பிராணிகளை வேட்டையாடும் ஒருவரை மணம் முடிக்க மாட்டேன் என்று வெறுத்து விட்டு வீட்டை விட்டு வெளியேறி தபசியாக மாறின.

மதங்க முனிவர் ஆசிரமத்தில் பணிவிடை செய்து தவத்தில் ஈடுபட்டாள். அப்போது அந்த முனிவர் சபரியிடம் என்னிடம் பணி செய்து உன் காலத்தை கடத்தி விட்டாய்.

ஆனால் நான் தியானித்து வரும் திருமால், ஸ்ரீராமன், சீதாதேவி ஆகியோர் சித்திர கூடத்தில் இருக்கிறார்கள். அவர்கள் சிலகாலங்களுக்குள் இங்கு வருவார்கள்.

எனக்கு பதிலாக நீ அவர்களை உபசரிக்க வேண்டும் என்று கூறிய முனிவர் அக்கினியை வளர்த்து தன் பூத உடலை அழித்துக்கொண்டார். முனிவர் சொன்னது போல அந்த வரும் ராமர், சீதாதேவி சபரி ஆகியோரை உபசரித்தாள். அந்த சபரியின் பெயராலேயே இந்த சிறப்பு மிக்க தலம் சபரிமலை ஆயிற்று

No comments:

Post a Comment