Saturday, December 6, 2014

சுமை!

சுமை!
மகாகவி பாரதியார், குள்ளச்சாமி என்னும் ஞானியைச் சந்திப்பது வழக்கம்
. அந்தக் குள்ளச்சாமி எப்போதும் ஓர் அழுக்கு மூட்டையைச் சுமந்துகொண்டு அலைந்து திரிந்து கொண்டிருப்பார்.
அவர் ஞானி என்பதை உணர்ந்துகொண்ட பாரதி, ஒருமுறை அவரிடம், ""ஏன் இந்த அழுக்கு மூட்டையைச் சுமந்துகொண்டு திரிகிறீர்கள்?'' என்று கேட்டார்.
அதற்கு குள்ளச்சாமி ஒரே வாசகத்தைப் பதிலாக உதிர்த்தார்: ""நான் குப்பையை வெளியே சுமக்கிறேன். நீங்களெல்லாம் உள்ளே சுமக்கிறீர்கள்''
இந்நிகழ்ச்சியை பாரதி தமது நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.

No comments:

Post a Comment