Sunday, December 28, 2014

சிலர் விதி வலியது என்கிறார்கள். சிலர் விதியை மதியால் வெல்லலாம் என்கிறார்கள். இந்த இரண்டில் எது சரியானது?

சிலர் விதி வலியது என்கிறார்கள். சிலர் விதியை மதியால் வெல்லலாம் என்கிறார்கள். இந்த இரண்டில் எது சரியானது?
இரண்டும் சரியே. நமது செயல்பாடுகளைப் பொறுத்து இது அமைகிறது. பாவம் நிறைய செய்திருந்தால் விதி வென்று விடுகிறது. கடமை என்னும் மதி நுட்பம் இருந்தால் அதை வெல்லவும் முடிந்திருக்கிறது. சத்தியவான் கதையில், மாமனார், மாமியார், கணவருக்கு மனம் கோணாமல் தொண்டு செய்த சாவித்திரி விதியை ஜெயித்திருக்கிறாள். இறை நம்பிக்கையுடன் செயல்பட்ட மார்க்கண்டேயனும் விதியை வென்றிருக்கிறார். கடமை, இறை நம்பிக்கை உள்ளவர்களுக்கு விதியை வெல்லும் சக்தி கிடைத்திருக்கிறது என்பது புராணங்கள் உணர்த்தும் உண்மை.

No comments:

Post a Comment