Wednesday, January 28, 2015

பசுவிற்கு அகத்திக்கீரை,கொடுத்தால் என்ன சிறப்பு

பசுவிற்கு அகத்திக்கீரை,கொடுத்தால் என்ன சிறப்பு
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
வெள்ளி கிழமை அன்று பசுவிற்கு அகத்திக்கீரை, பழம் கொடுத்து வழிபட்டால் நம் பாவம் தீரும் என்பது ஐதீகம்.
இதற்குரிய மந்திரத்தைச் சொல்லிக் கொடுத்தால் இன்னும் சிறப்பு.
"ஸர்வ காம துகே தேவி
ஸர்வ தீர்த்தாபிக்ஷேசினி
பாவனே ஸுரபி ஸ்ரேஷ்டே
தேவி துப்யம் நமோஸ்துதே!''
""எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்பவளே! எல்லா தீர்த்தங்களாலும் அபிஷேகம் செய்யப்படுபவளே! மங்கல வடிவானவளே! பெருமைக்குரிய காமதேனுவே! உன்னை வணங்குகிறேன்'' என்பது இதன் பொருள்.
இதைச் சொல்லி பசுவை வழிபட்டால்,
முன்னோர் சாபம்,
குடும்ப சாபம் தீரும்.
பிதுர் ஆசி பூரணமாக கிடைக்கும்.
குடும்பத்தில் தடைபட்ட சுபவிஷயங்கள் விரைவில் நடந்தேறும்.

No comments:

Post a Comment