Friday, March 27, 2015

சிவாலயத்தில் வழிபாடு செய்யும் முறை

கோவிலின் கோபுரத்திற்கு நேர் கீழாக வரும் போது, அங்கிருந்து மூலவரின் உருவம் தெரியும்; அந்த கணத்தில் ஓம்சிவசக்திஓம் என்ற மந்திரத்தை பனிரெண்டு முறை ஜபித்துவிட்டு, கொடிமரத்தின் அருகில் வரவேண்டும்; கொடி மரத்துக்கு அருகில் இருக்கும் பலிபீடத்தை வந்தடைய வேண்டும்;

அங்கே வடக்கு நோக்கி விழுந்து கும்பிட வேண்டும்; இப்படிச் செய்வதால் நம்மிடம் அதுவரை இருந்து வந்த அனைத்து தீய எண்ணங்களையும் அந்த பலிபீடத்தில் பலியிடுவதாக ஐதீகம்; பலிபீடத்தில் விழுந்து வணங்கியப் பின்னர், ஒருபோதும் கோவிலுக்குள்ளே எந்த இடத்திலும் விழுந்து வணங்கக் கூடாது;

மேலும், சிவாலயத்தினுள் இறைவனைத்தவிர, வேறு எவரையும் வணங்கக் கூடாது; அனாவசியமான பேச்சு, செல்போன் பேச்சு கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்; சிவனை வழிபடுவதற்கு முறைப்படி நந்திபகவானிடம் அனுமதி கோர வேண்டும்; நந்தி பகவானை வழிபடுவதன் மூலமாக இந்த அனுமதி நமக்கு கிடைத்துவிட்டதாக அர்த்தம்;

ஓம் ஏகதத்புருஷாய வித்மஹே
வக்ரதுண்டாய தீமஹி
தந்நோஹ் நந்தி ப்ரசோதயாத்

என்பது நந்திபகவானின் காயத்ரி மந்திரம் ஆகும்; பிறகு, மூலவராக இருக்கும் சிவனது இருப்பிடத்திற்குள் செல்ல வேண்டும்; ஏதாவது ஒரே ஒரு கோரிக்கையை மட்டுமே நினைக்க வேண்டும்; நினைத்துவிட்டு, ஓம் சிவசக்தி ஓம், ஓம் சிவசக்தி ஓம் என்ற சிவமந்திரத்தை இங்கிருந்து ஜபிக்கத் துவங்க வேண்டும்;

சிவனை வழிபட்டு விட்டு, பக்கவாட்டு வாசல் வழியாகவே அம்பாள் சன்னதிக்குச் செல்ல வேண்டும்; இதே போல, அம்மன் சன்னதியில் அமைக்கப்பட்டிருக்கும் நந்திபகவானை வழிபட்டப் பின்னரே, அம்மனை தரிசிக்கச் செல்ல வேண்டும்; இங்கேயும் மனதிற்குள் ஓம் சிவசக்தி ஓம், ஓம் சிவசக்தி ஓம் என்று தொடர்ந்து ஜபித்துக் கொண்டே நமது கோரிக்கையை வேண்ட வேண்டும்;

சிவனிடம் என்ன கோரிக்கையை வேண்டினோமோ, அதே கோரிக்கையை அம்பாளிடமும் வேண்ட வேண்டும்; சிவன் சன்னதியில் தரப்படும் விபூதியையும், அம்பாள் சன்னதியில் தரப்படும் குங்குமத்தையும் பத்திரமாக நமது வீட்டிற்குக் கொண்டு வர வேண்டும்;

பலர் சிவன் சொத்து குல நாசம் என்ற பழமொழியைத் தவறாகப் புரிந்து கொண்டு, அர்ச்சகர்/சிவாச்சாரியார் கொடுக்கும் விபூதி, குங்குமத்தை அங்கேயே கொட்டிவிட்டு வந்துவிடுகின்றனர்; இது தவறு மட்டுமல்ல;  பாவமும் கூட!

பழமையான சிவாலயத்தில் தரப்படும் விபூதி, குங்குமத்தை வீட்டுக்கு கொண்டு வந்து சேமித்துக் கொண்டே இருந்தால், நமக்கும், நமது குடும்பத்தாருக்கும் யாராலும் எந்த ஒரு மறைமுகத்தீங்கையும் செய்யமுடியாது; (நிரந்தரமாக அசைவம் சாப்பிடுவதை நிறுத்தியிருந்தால்!) ஏனெனில், இவைகளில் அளவற்ற தெய்வீக சக்தியும், பாஸிடிவ் எனர்ஜியும் இருப்பதை இன்றைய நவீன அதீத உளவியில் விஞ்ஞானம் பலமுறை நிரூபித்திருக்கிறது.

No comments:

Post a Comment