Friday, March 27, 2015

தீப வழிபாட்டின் சிறப்பு

பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவரும் ஒரு சமயம் ஒரே இடத்தில் சந்தித்து கொண்டனர். அப்போது மகாவிஷ்ணு அவர்களுக்குள் புகுந்து கொண்டு நெருக்கத்தை ஏற்படுத்தினார்.

மகாவிஷ்ணுவால் தான் தங்களுக்குள் நெருக்கடி உண்டாகிறது என்பதை உணராத பொய்கையாழ்வார் பூமியை தீபமாகவும், நீரை எண்ணெய்யாகவும் கருதி பதிகம் பாடினார். பேயாழ்வார் சூரியனை தீபமாக எண்ணி பதிகம் பாடினார். பூதத்தாழ்வாரோ, அன்பை தீபமாகவும் ஆர்வத்தை எண்ணெய்யாகவும் உருகும் மனதை திரியாகவும் வைத்து பதிகம் பாடினார்.

இவ்வாறு மூன்று ஆழ்வார்களும் தீபத்தை வைத்து பதிகம் பாடியதை கேட்ட மகாவிஷ்ணு மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். மறு வினாடியே ஆழ்வார்கள் முன்பு தோன்றி மகாவிஷ்ணு காட்சி கொடுத்தார். தீப வழிபாட்டால் இறைவனை எளிதில் அடைய முடியும் என்பதை ஆழ்வார்கள் இந்த நிகழ்ச்சி மூலம் உணர்த்தி உள்ளனர்.

தீப வழிபாட்டுக்கு அவ்வளவு சிறப்பு இருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள். நாளை மகாவிஷ்ணு சன்னதியில் தீபம் ஏற்றும் போது இதை மனதின் ஒரு ஓரத்தில் நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment