Thursday, April 23, 2015

பெண்ணை ஓர் ஆன்மாவாக பார்க்கப்பழகியவனுக்கு அவள் எந்நாளும் சக்திதான்


பெண்ணை ஓர் ஆன்மாவாக பார்க்கப்பழகியவனுக்கு அவள் எந்நாளும் சக்திதான்






பெரும்பாலும் ஆண் பெண்ணிடம் ஈர்க்கப் படுகிறான். அதே போன்று பெண்ணும் ஆணிடம் ஈர்க்கப் படிகிறாள். இது இயற்கையாக நடத்தும் சூட்சும விளையாட்டு.

உலகலாவிய உந்துதலில் வாழும் வரை அதுசரியே. ஆன்மீகம், ஆன்மா என்கிற இன்னொரு உலகமும் நம்முள்ளேயும் வெளியேயும் உள்ளதை . நாம் அறிவோம்.

அவ்வுலகில் ஆண்,பெண் என்ற பேதமில்லை. வெறும் ஆன்மாமட்டுமே. தத்துவார்த்தமாய் அதுவும்சரியே. நடுவில் கொஞ்சம்கவனமாக விழிப்புணர்வாய் ஆண் - பெண் வாழ்க்கையை நகர்த்துவோரே விசனப் படாமல் வாழ்வை வெல்கிறார்கள்.

உலகியல்வாழ்வில் சிக்குண்டு வாழ்வைவெறுக்கும் ஆண், பெண்ணை ஒரு புரியாதப் புதிர் என்பான். அவள் ஒருமாயை நம்பாதே என்று அனுபவச்சான்றிதல் வேறுகொடுப்பான். இன்னும் கொஞ்சம் சினம்கூடினால், பெண்ணா ? பிசாசா ? என்று கேள்வியாய் குழம்பிப்போவான்.

உங்களுக்கு ஓர் உண்மைதெரியுமா?

பெண்ணை ஓர் ஆன்மாவாக பார்க்கப்பழகியவனுக்கு அவள் எந்நாளும் சக்திதான். மாயையாக மாறவேமாட்டாள். உடலளவிலும் மனத்தலளவிலும் மட்டுமே பார்ப்பவனுக்கு அவள் எந்நாளும் மாயை தான் சக்தியாக மாறவே மாட்டாள்.

ஒருபெண், பணிவிலும் பரவசத்திலும் (பரம்பொருளின்வசம், என்றுணர்க) இருக்கும் வரை அவள், சக்தியின்வடிவம். அவள் மாயையாக மாறமாட்டாள். ஒருபெண், பயத்திலும் பலவீனத்திலும் இருக்கும் போதுதான் மாயையாக 'விசுவ ரூபம்' எடுக்கிறாள்.

ஒருகாலத்தில் பெண்ணை மாயையாகப்பார்த்து மருண்டவர்தான், பட்டினத்தடிகளார்.

பிற்காலத்தில் தெளிவுபெறும்போது அதே பட்டினத்தடிகளார் 'வாலை' எனப் பெறும் சக்தியாகப் போற்றிப்பாடுகிறார்.

"மூலத்து உதித்தெழுந்த
முக்கோண சக்கரத்துள்
வாலைதனை போற்றாமல்
மதிமறந்தேன் பூரணமே"

No comments:

Post a Comment