Thursday, April 2, 2015

வீட்டிற்கு முன் காகம் கரைந்தால்,,,விருந்தினர் வருவார்கள் என்பது உண்மையா...!!!???

வீட்டிற்கு முன் காகம் கரைந்தால்,,,
விருந்தினர் வருவார்கள் என்பது உண்மையா...!!!???
இந்த விஷயம் சற்று சுவாரசியமானது...!!!
அந்தக் காலத்தில் கிராமத்து வீடுகளில் சமையலறை இருந்தாலும் விருந்தினர்கள் வந்தாலோ, அதிகப்படி சமைக்க நேரிட்டாலோ, வீட்டின் பின்புறத்தில் சமையல் நடக்கும்.
அதிகப்படி சமையல் முதற்கட்டில் (வெட்டவெளி) நடக்கும். சோறு தவலையில் வெந்து கொண்டிருப்பதைப் பார்த்து சுற்றியுள்ள மரங்களில் உள்ள காக்கைகள் முதற்கட்டை சுற்றிச் சுற்றிக் கரையும்.
சமையலறையில் சமைத்தாலும், விருந்தினர் சாப்பிட்ட மிச்சத்தை முதற்கட்டில் கொட்டுவார்கள்.
எப்படியோ சோறு இருப்பதைக் கண்டு காகங்கள் வட்டமிடும். அக்கம் பக்கத்துக்காரர்கள் காகங்கள் கரைவதைப் பார்த்து விருந்தினர்கள் வந்திருப்பதைப் புரிந்து கொள்வர்.
இதுதான் நாளடைவில் தலைகீழாக மாறி காகம் கரைந்தால் விருந்தினர் வருவார் என்று சொல்லப்படுகின்றது.
சரியாகப்பார்த்தால்,
"காகம் கரைந்தால் விருந்தினர் வந்துள்ளார்" ,,,
என்றுதான் வந்திருக்க வேண்டும்...

No comments:

Post a Comment