Thursday, April 2, 2015

சிலவகை கற்களை அணிந்து கொண்டால் ஆன்மீகத்தில் சீக்கிரம் முன்னேறலாம் என்கிறார்களே,

சிலவகை கற்களை அணிந்து கொண்டால் ஆன்மீகத்தில் சீக்கிரம் முன்னேறலாம் என்கிறார்களே,
அதைப் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? சத்குரு: ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு அதிர்வு உண்டு. அதுபோல பல வகையான கற்களுக்கும் பல வகையான அதிர்வுகள் உண்டு. இப்படி ஒவ்வொன்றையும் ஆன்மீகத்திற்காக பயன்படுத்த நினைத்தால் கடைசியில் கை, கால், கழுத்து என்று எல்லா இடத்திலும் எதையெதையோ சுமந்து கொண்டிருப்பீர்கள். ஒருமுறை ஒரு பிரபல மனிதரைச் சந்தித்தேன். இந்திய அளவில் அவர் மிகவும் பிரபலமானவர். ஆன்மீகத்தில் இருக்கும் தன்னுடைய ஆர்வத்தை அவர் என்னிடம் வெளிப்படுத்த நினைத்தார். ஆனால் அவரைப் பார்த்ததும் எனக்கு ஆச்சரியம்தான் அதிகமானது. ஏனென்றால் அவர் வெளியே ஒரு கோட், உள்ளே ஒரு கோட், அதற்குள்ளே ஒரு கோட் என்று இறுக்கத்தில் இருந்தார். அவர் தன் துணிகளை எல்லாம் தாண்டி கைவிட்டு எதை எதையோ வெளியில் எடுத்தார். அவை எல்லாமே பல வகையான ருத்ராக்ஷ மாலைகள், ஸ்படிக மாலைகள், கல் பதித்த நகைகள். அவரைப் பொறுத்தவரை அதுதான் ஆன்மீகம். நான் ஒரு மாலை கூட அணியாதது அவருக்கு ஏமாற்றமாக இருந்தது. “நீங்கள் ஒரு சிவ பக்தரா?” என்பதைப் போல என்னிடம் பேசினார். நான் சொல்ல வருவதெல்லாம், இந்தக் கற்களை உங்கள் வாழ்க்கையைத் தீர்மானிக்க விடாதீர்கள். ஏதோ சிறிது உதவியாக அதைப் பயன்படுத்தலாம். மற்றபடி அவை பற்றியே நினைத்து, அவற்றைத் தேடி சேகரித்துக் கொண்டேயிருப்பது ஆன்மீகம் ஆகாது.
:

No comments:

Post a Comment