Friday, April 24, 2015

உலகிலேயே மிகத்தொன்மையான மதம் இந்துமதம்

உலகிலேயே மிகத்தொன்மையான மதம் இந்துமதம்.இந்தியாவின் ரிக்வேதம் தான் மனித இனத்தின் மிகப் பழமையான இலக்கியம் என்று அகில உலக நிறுவனமான யுனெஸ்கோ தானும் ஒத்துக் கொண்டு உலகமெங்கும் பிரகடனப்படுத்தியும் இருக்கிறது.

கஜினிமுகம்மது 17 முறை கொள்ளையடித்துக் கூட வற்றாதசெல்வம் சோம்நாத்பூர் என்ற ஒரு ஊரில் மட்டும் இருந்திருக்கிறது.உலக நாடுகள் செம்பு, வெள்ளி, தோல் ஆகியவற்றை நாணயங்களாகப் பயன் படுத்திய காலத்தில் கூட இந்தியா அசல்தங்கத்தையே நாணயமாகப் பயன்படுத்தியிருக்கிறது. பாரததேசத்து மன்னர்கள் தம் உடம்பில் அணிந்திருந்த தங்க ஆபரணங்களின் அளவு இன்று எந்த உலககோடீஸ்வரனும் அணிவதில்லை.தெய்வங்களின் திருமேனிகளிலும்,கோயில்களின் அஸ்தி வாரங்களிலும்,நவரத்தினங்களும் தங்கமும் கொட்டிக்கிடந்தன. இந்தியமண்ணுக்கும் இந்து கலாச்சாரத்துக்கும் ஒவ்வாத மேலை நாட்டு மதங்களுக்கும் தெய்வங்களுக்கும் நாம்கொடுத்த இடம்தான்.நம் வைதீகத்தின் ஆணிவேரை அசைத்துப்பார்த்து,பாரதத்தின் ஆன்மீகத்தை பலவீனப் படுத்தி அதன் செழிப்பையும்குறைத்தது.

அந்நியப் படையெடுப்பினால் அடுத்தநாட்டு மதங்கள் இங்கே உள்ளே நுழைந்ததை நாம் புரிந்து கொள்ளலாம்.ஆனால் அந்நிய ஆதிக்கம் நீங்கியபிறகும் அந்த மதங்களுக்கு நாம் இங்கே இடம்கொடுக்க வேண்டுமா? அப்படி அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு இந்துமதத்தை விடச் சிறந்தகோட்பாடுகள் அவற்றில் ஏதாவது இருக்கின்றனவா? கீழ்க்கண்ட புள்ளிவிவரங்களில் ஓர் ஒப்புநோக்கல்  செய்தால் அது உங்களுக்கே புரியும்.

1)உலகில் இந்து மதத்தைத்தவிர வேறு எந்த மதத்திலும் இறைவனை பற்றியோ ஆத்மாவைப்பற்றியோ தெளிவான விவரங்கள் இல்லை.ஆனால் நம்நாட்டு உபநிஷதங்களில் இறைவனுடைய வடிவம்,குணம்,மஹிமை முதலியவற்றை பற்றி ஒரு பெரிய ஆராய்ச்சியேசெய்து முடிவுகளை வெளியிட்டு இருக்கிறார்கள்.அந்தமுடிவுகள் சரியானவை என்று காலங் காலமாக யோகத்யானத்தில் அமர்ந்துள்ள முனிவர்களும் சித்தர்களும் வழிமொழிந்திருக்கிறார்கள்.

2)மனிதனுடைய ஆத்மா உடலில் எங்கே இருக்கிறது என்றுகேட்டால் பிறர் தெரியாது என்பர்.ஆனால் இதயக் கமலத்தில் உள்ள ஜீவாத்மாவைப் பற்றியும்,மூலாதாரத்தில் உள்ள குண்டலினிப்பற்றியும் அதன் சக்தியை ஆறு ஆதாரங்கள்வழியாக எழுப்பும் வழியைப் பற்றியும் கூறும் நூல்கள் நம்நாட்டில் நூற்றுக் கணக்காக இருக்கின்றன.

3)கஷ்ப்படுகிறவர்கள் தங்கள் முன்னோர்கள் செய்தபாவத்துக்காக தண்டனை அனுபவிக்கிறார்கள் என்று அந்த மதங்கள் கூறுகின்றன. தாத்தாசெய்த கொலைக்காக பேரனை எந்த அரசாங்கமாவது சிறையிலிடுமா? தகப்பன்செய்த திருட்டுக்காக மகன்கையை வெட்டும்படி எந்தசட்டமாவது சொல்லுமா? இந்துமதத்தின் மறுபிறப்புக் கொள்கை இந்தகேள்விகளுக்கு அழகாக பதில்சொல்லுகிறது.நம்முடைய உலகவாழ்வு ஒரு நீண்ட பயணத்தின் ஒரு பகுதிதான் என்று தெளிவுபடுத்தியிருக்கிறது.முன்வினை பின்வினை முதலிய விளக்கங்கள் இந்துமதத்தில் இருப்பது போல் அறிவுபூர்வமாக வேறெங்கும் இல்லை.

4) கலாச்சார ரீதியாக இந்துமதம் உயர்ந்த கோட்பாடுகளை சொல்லுகிறது.ஒருதமையனை தகப்பனுக்குச் சமமாகவும்,தமயனின் மனைவியை தாய்க்கு சமமாகவும் கூறி குடும்பத்தை கோயிலாக்கியது இந்துமதம்.ஆனால் மேல்நாட்டு மதங்களோ அண்ணன் இறந்து விட்டால்  அவன் மனைவியை தம்பி மணக்கலாமென்றும்,அவனும் இறந்து விட்டால் வரிசையாக அடுத்தடுத்த தம்பிமார்கள் மணக்கலாமென்றும் உயிர் இல்லாத வீடுநிலம்;போன்ற சொத்துக்களை ஒருவர்மாற்றி ஒருவர் அனுபவிப்பதைப் போல ஒரு அண்ணியை அனுபவிக்கலாம் என்ற கொள்கை உள்ளதாக இருக்கின்றன.

5)விவாகரத்து என்பது,இந்து மதத்தில் கணவன் ஆண்மை இல்லாதவனாகவோ, 7 ஆண்டுகளுக்குமேல் எங்கோகாணாமல் போய்விட்டால் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.ஆனால் அல்பக் காரணங்களுக்காக எல்லாம் விவாகரத்து செய்வதென்ற விலங்கியல்வாழ்க்கை முறையை மேல்நாட்டு மதங்கள்தான் தொடங்கிவைத்தன.

6)உண்ணும் உணவுக்கும்,மனிதனின் குணத்துக்கும் ஒருதொடர்பு உண்டு என்று இந்துமதம் சொன்னது.மாமிசஉணவு அதிகம் உண்பவர்களுக்கு காமம்,கோபம்,கொலைவெறி இவை உண்டாகும் என்பதைஅது அறிந்துசொன்னது.ஆனால் மற்றமதங்களில் மதத்தின் பெயரினாலேயே மாமிச உணவு அதிகம் ஆதரிக்கப்படுகிறது.பாலியல் ஒழுங்கீகங்களும்,உலக மஹாயுத்தங்களும் அந்த நாடுகளில் அதிகம் நிகழ்வதன் காரணம் அதுதான்.இந்தியாவில் மன அடக்கம் அதிகம் இருப்பதின் காரணம் இந்துமதத்தின் உணவுக்கட்டுப்பாடுதான்.

7)இன்றும் மேலை நாடுகளில் தொழில் நுட்பத்துறையில் இந்தியர்களே அதிகம் விரும்பப்படுகிறார்கள்.காரணம் அவர்களுக்குத்தான் மூளைநுட்பம் அதிகம்.இதன்பின்னணி என்னவென்றால்,அறிவையும் நினைவாற்றலையும் வளர்த்துக் கொள்வது எப்படி என்பது பற்றி இந்துமதம் கூறி நியமங்களை இந்தியர்கள் கடைபிடிப்பது தான்.கிருத்திகை விரதம்,ஏகாதசி விரதம்,மிதமான அசைவ உணவு,மார்கழிநோன்பு, கார்த்திகைநோன்பு, கலை மகள் வழிபாடு, தட்சிணா மூர்த்தி உபாஸனை, ஹயக்ரீவர்பக்தி, குருவை தெய்வமாக வணங்குதல், தாய் தகப்பனை கடவுளாகநினைத்தல் இப்படி பல காரணங்களால் ஒருஇந்துவின் அறிவும் நினைவாற்றலும் வேறு எந்தமதத்தினரை விட அதிகமாக உள்ளது.மற்றமதத்தை சேர்ந்த அறிவாளிகள் வெடி குண்டு விஞ்ஞானம், அணு சக்தி கண்டு பிடிப்பு, சிற்றின்பத்தை தூண்டும் சினிமா தொலைக் காட்சி போன்ற கண்டு பிடிப்புகளில்தான் அதிகம் ஈடுபடுவர்.மெய்ஞ்ஞானமும்,7வது அறிவின்வளர்ச்சியும் இந்தியாவில் மட்டும்தான்.

8)ஒற்றுமையான குடும்பங்கள்,பாசமானபிள்ளைகள் உலகிலேயே இந்தியாவில் தான் அதிகம்.மற்ற நாடுகளில் உடைந்து போன உள்ளங்கள்,நொறுங்கிப்போன உறவுகள்,பிரிந்து போன பந்தங்கள் ஆகியவற்றைத் தான் அதிகம்பார்க்கலாம்.மேலை நாடுகளுக்குச் சென்று திரும்பிய இந்தியர்களைக் கேளுங்கள் நான்சொல்வதன் உண்மை புரியும்.

9)நெற்றியில் பொட்டுவைத்தல் வெறும் அழகுக்காக அல்ல. இரண்டு புருவங்களுக்கு மத்தியிலே ஈஸ்வரஸ்தானம் இருக்கிறது. குங்குமத்தால் அங்கே பொட்டுவைப்பதனால்.

அ)ஞானம் விழிப்படைகிறது.
ஆ)திருமகள் கடாக்ஷம் உருவாகிறது.
இ)கயவர்களுக்கு ஓர் அச்சத்தை உண்டுபண்ணுகிறது.

நெற்றியில் திலகமிடும் போது சொல்லிக் கொள்வதற்கென்று சிறப்பானமந்திரங்கள் இந்துமதத்தில் உண்டு.இந்த திலகமிடும் பழக்கமே மற்றமதங்களில் இல்லை.பாழ் அடைந்தவீடு போல வெறும் நெற்றியாக அந்தப்பெண்கள் காட்சி அளிப்பர்.அதைப்பார்ப்பதே அமங்கலம். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.இந்துமதத்தை விட்டுவிட்டு மேல்நாட்டு மதங்களுக்கு மதமாற்றம் செய்துகொண்டு போகத்துடிக்கும் உங்கள் நண்பர்களைப் பார்த்து இந்தவிஷயங்களை எடுத்துக்கூறி, அவர்கள் அறிவு விழிப்படையச் செய்வீர் என தருமை இந்து நண்பர்களே! வணக்கம்.

நன்றி; அந்தோனி ஜோசப்

1 comment:

  1. தங்கள் பெயர் சம்மந்த மில்லாத இடத்தில் இருக்கக் காரணம்.

    ReplyDelete