Tuesday, April 21, 2015

கோடி காலம் வரை இறவாமலிருக்க

கோடி காலம் வரை இறவாமலிருக்க

அகத்தியர்
"என்றுதான் லட்சமுரு செபித்தாற் சித்தி
இறவாமல் இருத்துமடா கோடிகாலம்
நன்றுகாண் முப்பத்தி ரெண்டாந் திட்சை
நங் கிலி சிங் கிலி என்றே லட்சம்
மன்றுள்ள காலம்வரை இரு;ததுந்தேகம்
வாழ்;த்திநீ தோத்திரங்கள் செய்துகொள்வாய்
கொன்றாலும் வாள்கொண்டு வெட்டினாலும்
குறையாமல் வாள்வெட்டுப் பொருந்துந்தானே."
முப்பத்து இரண்டாந் தீட்சைகேள். "நங் கிலி சிங் கிலி" என்று லட்சம் உரு செபிக்க கோடி காலம் வரை இறவாமலிருத்தும் மற்றுமுள்ள காலமனைத்தும் வாழ்த்தி தோத்திரங்கள் செய்து கொள்வாய். கொன்றாலும் வாள் கொண்டு வெட்டிப்போட்டாலும் வெட்டுப்பட்ட இடம் சற்றும் குறையாமல் ஒட்டிக்கொள்ளும் என்கிறார்இந்த தீட்சைகளில் கூறப் பட்டிருக்கும் மந்திரங்களை வெற்று ஒலிகள் என ஒதுக்கி விட இயலாது. இதன் பின்னால் மறைந்திருக்கும் சூட்சுமங்கள் புலப்படுமாயின் மகத்தான பல விஷயங்கள் புலனாகலாம்.

No comments:

Post a Comment