Monday, April 6, 2015

அம்பாளுக்கு மொத்தம் ஆயுதம் பதினெட்டு ஆகும்.

அம்பாளுக்கு மொத்தம் ஆயுதம் பதினெட்டு ஆகும். இத விவரம் இதோ
சூலம். சிவபெருமான் அளித்தது .சூலினியாக விளங்குகிறாள் அம்பாள்
சக்கரம். விஷ்ணு அளித்தது .காலத்தை கட்டுபடுத்தும் காளியாவாள்
சங்கம். வருனனுடையது . நாத மயமாய் இருக்கிறாள் அம்பாள். அதனால்தான் பாட்டுகள் பாடுகிறார்கள்.
தனுர் பானங்கள். வாயுவினுடையது . மனமே வில். இந்திரியன்களே பானங்கள்
வஜ்ராயுதம் .இந்திரன் அளித்தது இதுவே முதுகெலும்பு ஆகும்.
சக்தி .இந்த ஆயுதம் மூன்று டயமண்டுகளை ஒன்றன் மீது ஒன்றாக வைத்தபடி இருக்கும்
மணி.ஐராவதம் கொடுத்தது நாதத்தின் பிறப்பிடம் ஆகும்
தண்டம்.யமன் கொடுத்தது
பாசம்.ஜலதேவன் கொடுத்தது
சுய நலத்தை நீங்கள் விட்டால், அம்பிகை இந்த பாசத்தால் உங்களை கவர்வாள்
அக்ஷமாலை மொத்தம் ஐம்பத்தி ஒன்று எழுத்துக்கள் கொண்ட மாலை இவள் ஜபத்தால் மகிழ்வாள்.
கமண்டலம். ஞானி எல்லா தீர்த்தங்களும் இதில் அடக்கம்
உலக்கை .இது வாராகியின் ஆயுதம் ஆகும். அதாவது நெல்லை குத்தி, அரிசியை எடுத்துகொண்டு, உமியை விலக்குவதுபோல் நாமும் கெட்டதை தள்ளவேண்டும்
சுத்தி கேடயம் . இது காலனின் காணிக்கை ஆகும்
தாமரை . புனிதத்தின் சின்னம். சமுத்திர ராஜனின் காணிக்கை யாகும்
கதாயுதம். துவஷ்டாவின் காணிக்கை .
பரசு. அரிவாள் போன்ற ஒரு ஆயுதம்.
மதுக்கிண்ணம்/ அசுரர்கள் இதுக்கு அடிமை. ஆகவே, பக்தர்கள், மது அருந்தக்கூடாது. அருந்தினால், சிரமம் வரும்.
இமவான், சிங்கத்தை அம்பாளுக்கு பரிசாக கொடுத்தான்.
ஆகவே, அன்பர்களே, இதை நினைத்து வங்கி வந்தால், நமக்கு எல்லாமே நடக்கும்.

No comments:

Post a Comment