Friday, April 24, 2015

வேதம் மொழிப்பெயர்க்க கூடிய உரைநடையல்ல

வேதம் என்பது ஒர் மொழியில் இருந்து மற்றொரு மொழிக்கு மொழிப்பெயர்க்க கூடிய உரைநடையல்ல. சமஸ்கிருதம் ஒரு ஞான மொழி. அதில் ஒரு வார்த்தைக்கு பலவிதமான உட்கருத்துக்கள் உண்டு. உதாரணத்திற்கு "கோ" என்ற எழுத்திற்கு, பசு, அரசன், ஒளி, சூரியன், அறிவு என்று பல பொருள் தரும். ஆக மொழிப்பெயர்பாளரின் உள் முக
ஆண்மீக வளர்ச்சிக்கு ஏற்றவாறே அதன் மொழிப்பெயர்ப்பும் வரும். அதனால்தான் பெரும் ஆச்சார்யர்கள் வேதத்தை வார்த்தைக்கு வார்த்தை மொழிப் பெய்ர்க்கவில்லை. "மேக்ஸ்-முள்ளர்" போன்ற அரைகுறை அறிஞர்க‌ள் அதில் இறங்கினார்கள்.

அடுத்தது அதன் இலக்கண வடிவத்தை மொழிப் பெயர்த்து சரியானபடி தருவது இன்னும் பெரிய சவால். "பாணினியின்" இலக்கண வரம்புகளை ஒத்து "ஆர்ய சமாஜ்" போன்றவர்கள் இதை செய்தாலும், அது வேதத்தின் உண்மை தன்மையை பிரதிபலிக்குமா என்பது ஐயமே.

மேக்ஸ் முள்ளர் போன்ற அரைகுறை அறிஞர்களின் மொழிப்பெயர்பின் அடிப்படையே ஆட்டம் காண்கிறது. அவர்கள் ஆரிய ஆக்கிரமிப்பு எனும் ஒரு அடிப்படை இல்லாத பிரித்தாளும் சூழ்ச்சியை மையமாக கொண்டு வேதங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும் போது, அவர்கள் நோக்கத்திற்கு ஏற்றவாறே அதன் பொருளையும் அமைப்பார்கள். ஆகையால மறைமுக கிறிஸ்துவ பிரச்சாரத்திற்கு துனை புரிய வைத்த அவரின் ஆங்கில மொழிப் பெயர்பின் அடிப்படையை வைத்துக் கொண்டு நாம் வேதத்தை குறித்து விவாதிப்பது என்பது, நாய் ஊளையிடுவதை அடிப்படையாய் வைத்து பாடல் எழுதுவது போன்றதாகும்.

அடுத்தது த‌த்துவ ரீதியாக வேதத்தில் சொல்லப்பட்டிருக்கும் உட்பொருளை ஆராயந்து சொல்வது மிக கடிணமானது. "ஔரோபிந்தோ" போன்ற ஞானிகள் இதைத்தான் வலியுறுத்துகின்றனர். உயர்ந்த விழிப்புணர்வு நிலையில் உள்ள ஒருவருக்கே வேதத்தின் உட்பொருள் விளங்கும் என்று அவர் தெளிவாக்குகிறார். ஒவ்வொரு தனிமனிதனின் உள்ளார்ந்த வளர்ச்சியை பொருத்தே அதன் பொருள் விளங்கும் என்று அவர் சொல்கிறார். அவ்வித உள்ளார்ந்த வளர்ச்சி இல்லாமல் வார்த்தைக்கு வார்தை மொழி பெயர்க்கப்பட்ட வேதத்தை படிப்பது முட்டாள்தனமான பொருளை தரும் என்கிறார் அவர்.

வேதங்களை நாம் அதற்குரிய நியமப்படி படித்து அதனை பாராயணம் செய்வதே சிறந்தது. அதுவே நமக்கு ஆண்ம பலத்தை தரும். அல்லது வேத ஆராய்ச்சி மையங்களில் நாம் பங்காற்றி அதை குறித்து விரிவாக அறியலாம். மிகப்பெரும் ஞான களஞ்சியங்களான வேதங்களை மிகச்சாதாரனமாக எடுத்துக்கொண்டு நாம் அறிவற்ற முட்டாள்களோடு விவாதிப்பது நாம் நம் தர்மத்திற்கு செய்யும் துரோகம்.

வேதத்தின் ஞான ஒளியில் ஒரு சிறு துகளை உணர, விஜயநகர சாம்ராஜ்யத்தை சேர்ந்த மஹா பண்டிதரான "சயனாச்சாரியர்" எழுதிய "வேதாந்த ப்ரகாஷா" என்ற நூலில் இருந்து ஒரு சிறு தகவல்

ஒளியின் வேகம் !!

ரிக் வேதம் 1.50.4

"ததா ச ஸ்மர்யதே யோஜானானம் ஸ்ஹஸ்ரம் த்வே த்வே ஷதே த்வே யோஜ்னே ஏகைன நிமிஷார்தேன க்ரமான் நமோஸ்துதே

॥ तथा च स्मर्यते योजनानां सहस्त्रं द्वे द्वे शते द्वे च योजने एकेन निमिषार्धेन क्रममाण नमोऽस्तुते॥

தமிழாக்கம் "2,202 யோஜனைகள் அரை நிமிடத்தில் பயனிக்க கூடிய ஒளியே உன்னை வணங்குகிறேன்".

ஒர் யோஜனை என்பது 14.6 முதல் 16.4 கிலோமீட்டர்களை குறிக்கிறது என்று விளக்குகிறார் பி.வி. வர்தக் என்ற அறிஞர் "சைன்டிஃபிக் நாலேஜ் ஆப் வேதாஸ்" என்கிற புத்தகத்தில் அதை விளக்குகிறார்.

பண்டைய கால முறைப்படி, ஒரு நிமிடம் என்பதை, "அர்த்தசாஸ்திரம்" ஒரு நாளின் 1/360000 பகுதியாகும் என்று குறிப்பிடுகிறது. அதாவது இன்றைய அளவுப்படி 0.24 வினாடிகள் என்று

ஆக 2202 யோஜைனைகள் சேர்ந்து 32149 கிலோமீட்டர்களிலிருந்து 36113 கிலோமீட்டர் வரை இருக்கும். ஆக‌ அரை நிமிடம் என்பது 0.12 வினாடிகள். ஆக சயனாச்சாரியர் ஒளியின் வேகம் 267910 முதல் 300940 கிலோமீட்டர் வரை ஒரு வினாடிக்கு குறிப்பிடுகிறார். இன்றைய அறிவியல் அதை ஒரு வினாடிக்கு 299792 கிலோமீட்டர்கள் என்று குறிப்பிடுகிறது.

ஆக இந்த ஸ்லோகத்தை சாதாரண மக்கள் படித்திருந்தால் இதன் உள் அர்த்தம் புரியாது, ஏதோ 2202 யோஜனை என்று உளறுகிறது என்று நினைப்பார்கள். வேதத்தின் ஒவ்வொரு சொல்லுக்கும் அகண்ட ஆராய்ச்சி தேவை எனும் போது, மேக்ஸ் முள்ளரின் வார்த்தைக்கு வார்த்தை ஆங்கில மொழி பெயர்பை படித்துவிட்டு உளறும் (ஆங்கிலமும் சரிவர தெரியாத) பிரித்தாளும் சூல்சிகாரர்களிடம் என்ன சொல்வது

No comments:

Post a Comment