Wednesday, April 22, 2015

குரு வாக்கு தப்பாது

மகான் ஒருவரை, "குருவே தங்களிடம் வந்து பல வருடங்கள் ஆகிவிட்டன! எனக்கு தீட்சை அளிக்க வேண்டும் ! " என்று தினமும் நச்சரித்துக் கொண்டிருந்தான் ஒரு சீடன்.

தொல்லை தாங்கமுடியாத குரு, அதிலிருந்து விடுபட நினைத்து, "ஆசிரமத்தின் வடக்கே நினைத்து, "ஆலமரத்தின் அடியில் கிடக்கும் பெரிய பாறாங்கல் அருகே சென்று தினமும் "கல்லே நகர்" என்று
சொல்லிக் கொண்டிரு! பாறங்கல் ஒரு நாள் நகர ஆரம்பிக்கும். கல்லானது நகர்ந்து ஆசிரமத்திற்கு அருகில் வரும் போது தீட்சை கொடுப்பேன்" என்று சொன்னார். சீடன் அவ்வாறே செய்து வந்தான். பல மாதங்களாயின.

ஒரு நாள் அவ்வழியே சென்ற வழிப்போக்கர்கள் சிலர் ஆசிரமத்திற்கு ஒடி வந்து, "சுவாமி நூறு பேர் சேர்ந்தாலும் அசைக்க முடியாது பாறாங்கல் நகர்ந்து வந்து கொண்டிருக்கு! எதிரே பார்ப்பவர் எல்லாம் பயந்து ஓடுகின்றனர்! உங்கள் சீடன் மந்திரம் உச்சரித்துக் கொண்டு தொடர்ந்து வர்றான்!" என்று மகானிடம் முறையிட்டனர்.

"என்ன .....? என்று வியப்புடன் நிமிர்ந்த மகானின் கண் முன்னே தொலைவில் நகர்ந்து வந்த பாறை ஆசிரமத்தை நெருங்கிக் கொண்டிருந்தது.

"சீடனே, உச்சரிப்பை நிறுத்து" என்று உரக்க ஒலி எழுப்பியவாறு மகானும் ஓடலானார்

No comments:

Post a Comment