Wednesday, June 3, 2015

பசுக்களை ஆராதிப்பதின் பலன்களை

பசுக்களை ஆராதிப்பதின் பலன்களை இங்கு எழுதுகின்றோம் ...
இந்து சமயத்தில் பசுவை வணங்குவதைப் பெரும் புண்ணியமாகக்கருதுகின்றனர். இந்தப் பசுவை கோமாதா என்றும் பெருமையுடன்அழைக்கின்றனர் பசுவின் உடலில் ஒவ்வொரு பகுதியிலும் தெய்வங்களும்,
புனிதத்திற்குரியவர்களும் இருப்பதாகக் கருதுகின்றனர்.
*பசுவின் கொம்புகளின் அடியில் – பிரம்மன், திருமால்
*கொம்புகளின் நுனியில் – கோதாவரி முதலிய புண்ணிய தீர்த்தங்கள்,
*சிரம் – சிவபெருமான்
*நெற்றி நடுவில் – சிவசக்தி
*மூக்கு நுனியில் – குமரக் கடவுள்
*மூக்கினுள் – வித்தியாதரர்
*இரு காதுகளின் நடுவில் – அசுவினி தேவர்
*இரு கண்கள் – சந்திரர், சூரியர்
*பற்கள் – வாயு தேவர்
*ஒளியுள்ள நாவில் – வருண பகவான்
*ஓங்காரமுடைய நெஞ்சில் – கலைமகள்
*மணித்தலம் – இமயனும் இயக்கர்களும்
*உதட்டில் – உதயாத்தமன சந்தி தேவதைகள்
*கழுத்தில் – இந்திரன்
*முரிப்பில் – பன்னிரு ஆரியர்கள்
*மார்பில் – சாத்திய தேவர்கள்
*நான்கு கால்களில் – அனிலன் எனும் வாயு
*முழந்தாள்களில் – மருத்துவர்
*குளம்பு நுனியில் – சர்ப்பர்கள்
*குளம்பின் நடுவில் – கந்தவர்கள்
*குளம்பிம் மேல் இடத்தில் – அரம்பை மாதர்
*முதுகில் – உருத்திரர்
*சந்திகள் தோறும் – எட்டு வசுக்கள்
*அரைப் பரப்பில் – பிதிர் தேவதைகள்
*யோனியில் – ஏழு மாதர்கள்
*குதத்தில் – இலக்குமி தேவி
*வாயில் – சர்ப்பரசர்கள்
*வாலின் முடியில் – ஆத்திகன்
*மூத்திரத்தில் – ஆகாய கங்கை
*சாணத்தில் – யமுனை நதி
*ரோமங்களில் – மகாமுனிவர்கள்
*வயிற்றில் – பூமாதேவி
*மடிக்காம்பில் – சகல சமுத்திரங்கள்
*சடாத்களியில் – காருக பத்தியம்
*இதயத்தில் – ஆசுவனீயம்
*முகத்தில் – தட்சிணாக்கினி
*எலும்பிலும், சுக்கிலத்திலும் – யாகத் தொழில் முழுவதும்
*எல்லா அங்கங்கள் தோறும் – கலங்கா நிறையுடைய
கற்புடைய மாதர்கள் வாழ்கிறார்கள் .
தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது பாற்கடலில்இருந்து ஐந்து பசுக்கள் வெளிப்பட்டன. அவை நந்தா, பத்திரை, சுரபி, சுசீலை,சுமனை ஆகியவை. . இவை பொன்னிறம், கருமை, வெண்மை, புகை, சிவப்புநிறம் கொண்டிருந்தன. இவற்றின் சந்ததிகளே பூலோகத்தில் நமக்குஉதவியாக இருந்து வருகின்றன. இவற்றில் இருந்துவரும்கோமயம்(சாணம்),
மூத்திரம்(கோமியம்), பால், தயிர், நெய் ஆகிய ஐந்தும்புனிதமானவை. இவற்றை கொண்டு செய்யும் அபிஷேகமே பஞ்சகவ்ய அபிஷேகம் எனப்படுகிறது.
இப்பசுக்களில் மும்மூர்த்திகள், சத்தியம், தர்மம் என்று எல்லாதேவதைகளும் வசிக்கின்றனர். செல்வவளம் தரும் திருமகள் இதன்பிருஷ்டபாகத்தில்(பின்பாகம்) வசிக்கிறாள். இப்பகுதியை தொட்டுவழிபட்டால் முன்ஜென்ம பாவங்கள் விலகும்.
காலையில் எழுந்ததும் பசுவைத் தொழுவத்தில் காண்பது சுபசகுனம் .தெருக்களில் கூட்டமாகப் பார்த்தால் இன்னும் விசேஷம். பாற்கடலில்பிறந்த ஐந்து பசுக்களும் கோலோகம் என்னும் பசுவுலகில் இருந்துஅருள்பாலிப்பதாக ஐதீகம். பசுவைத் தெய்வமாகவழிபட்டால் கோலோகத்தை அடையும் பாக்கியம் உண்டாகும்.
முப்பத்துமுக்கோடி தேவர்களும், நாற்பத்துஎண்ணாயிரம் ரிஷிகளும்,அஷ்ட வசுக்களும்,நவக்கிரகங்களும் பசுவின்உடலில் ஆட்சி செய்கின்றன.
பசுமாடு எங்கெல்லாம் நன்றாக பராமரிக்கப்படுகிறதோ அங்கெல்லாம்லஷ்மி கடாக்ஷம் இருக்கும். அதனால்தான் தெய்வசக்தி நிறைந்தகோயில்களில் கூட பசுமாடுகளை வளர்த்து அதற்கு முறையாக ’கோ பூஜை’செய்யும் வழக்கத்தை வைத்திருக்கிறார்கள். எப்பேர்பட்ட தோஷத்தையும்போக்கும் ஆற்றல் பசுவுக்கு இருக்கிறது.
மகாபாரதத்தில் பிஞ்சு குழந்தையான கண்ணனை கொல்ல கம்ஸன், பலமுயற்சிகளை மேற்கொண்டான். அதில் ஒரு முயற்சியாக அரக்கிஒருத்தியை அனுப்பினான்.
அந்த அரக்கி, அழகான பெண் வடிவம் எடுத்துக் கொண்டு யசோதையின்வீட்டிற்கு வந்தாள். அங்கே குழந்தை கிருஷ்ணன் தூங்கிகொண்டுஇருந்தான். கண்ணனின் மேல் பாசம் கொண்டவள் போல நடித்து,குழந்தைக்கு தாய்பால் கொடுத்தாள்.
அவளின் நோக்கம் பாசம் அல்ல. அது கொடுமையான திட்டம். அதுஎன்னவென்றால், அரக்கியின் தாய்பாலை குழந்தை குடித்தால், அவள்உள்ளத்தில் இருக்கும் விஷம், அவள் உடல் முழுவதும் இருந்தகாரணத்தால், தாய்பாலின் மூலமாக அவ்விஷங்கள் குழந்தையானகண்ணனின் ரத்தத்தில் பரவி, கண்ணனி்ன் இரத்தத்தை அட்டைபூச்சியைபோல உறிஞ்சி எடுத்துவிடும் என்று நினைத்தாள் அந்த அரக்கி.
நாம் ஒன்று நினைத்தால் தெய்வம் ஒன்று நினைக்கும் என்பார்கள். ஆனால்அந்த அரக்கியோ ஒரு தெய்வத்தையே மடியில் வைத்துக்கொண்டுகொடுமை செய்ய நினைத்தாள். தெய்வ குழந்தையான கண்ணனும் அவள்உயிரை எடுக்க வேண்டும் என்றுதான் நினைத்தான். அவளாக வந்துமாட்டினாள். பாலுடன் அரக்கியின் உயிரையும் உறிஞ்சினான் கண்ணன்.
அவள் உயிர் பிரிந்த போது பெரும் அலறலுடன் பூமியில் விழுந்தாள். மிகபயங்கரமான அந்த குரலை கேட்ட ஊர் மக்களும், தாய் யசோதையும்ஒடிவந்து பார்த்தபோது, அரக்கி ஒருத்தி மாமிச மலை போல் இறந்துகிடப்பதை பார்த்தார்கள். என்ன நடந்தது என்பதையும் புரிந்துக்கொண்டார்கள்.
ஒரு கொடூரமான அரக்கியை தன் குழந்தை கண்ணன் வீழ்த்தினான் என்ற மகிழ்ச்சி இருந்தாலும், ஒரு உயிரை கொன்ற பாவம், பிரம்மஹத்திதோஷமாக கண்ணனை பிடித்துக்கொள்ளக் கூடாதே, என்று அஞ்சினாள் தாய் யசோதை.
உடனே அதற்கான தோஷ நிவர்த்திக்காக, பசுவின் வாலில் கண்ணனைசுற்றி, அவன் தலையில் கோமியத்தை தெளித்து, தோஷத்தை போக்கினாள் யசோதை. இது, ஸ்ரீவி்ஷ்ணு புராணத்தில் இருக்கிற தகவல்.
ஆகவே, இறைவனாக இருந்தாலும், இறைவனுக்கே தோஷம் பிடிக்காமல் இருக்க, சிறந்த பரிகாரம் பசுதான் என்கிறது சாஸ்திரங்களும் –புராணங்களும்.
பசுவின் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்கள் நிறைந்திருக்கிறார்கள்:
பூமாதேவியே கோமாதாவாக அவதாரம் எடுத்தாள் என்கிறது புராணம்.தேவர்களும் – அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது அதிலிருந்துதோன்றியது பசு. கோமாதா என்று போற்றப்படும் அந்த பசுவின் உடலில்தேவர்களும், முனிவர்களும், இறைவனும், இறைவியும் இடம் பெறவேண்டும் என்று விரும்பினார்கள்.
அதனால் முனிவர்கள், தேவர்கள், இறைவனும் பசுவின் உடலில் குடிவந்தார்கள். அப்படியே முப்பத்து முக்கோடி தேவர்கள்களும்பசுவின்உடலில் குடிவந்து விட்டார்கள்.
கடைசியாக வந்த கங்கையும் – லஷ்மியும், தங்களுக்கு இடம் இல்லாததால்வருந்தினார்கள். இதை கண்ட கோமாதா, “அகில உலகத்தையேபூமாதேவியாக இருந்து சுமக்கும் நான், உங்களை சுமக்க மாட்டேனா?”என்று கூறி தன் பின் பகுதியில் இடம் தந்தாள். இதனால் பின்பாகத்தில்கங்கையும், ஸ்ரீலஷ்மி தேவியும் அமர்ந்ததால், பசுவின் சாணத்தில்ஸ்ரீலஷ்மியும், கோமியத்தில் கங்கையும் இருப்பதாக ஜதீகம்
கங்கை எப்படி புனிதம் வாய்ந்ததோ அதுபோல், எண்ணற்ற மடங்கு புனிதம்வாய்ந்தது பசுவின் சாணம். பசு சாணத்தை கரைத்து வீட்டின் வாசலில்தெளித்தால் கிருமி நாசினியாகும். பசுவின் சாணத்தால் தயாரிக்கப்படும்திருநீறின் மகிமை அற்புதமானது.
கோமியத்தை வீட்டிற்குள் தேளித்தால்,வீட்டில் இருக்கும் தோஷங்கள் விலகியோடும். கங்கையின் அருளாசிகிடைக்கும். ஸ்ரீமகாலஷ்மி வாசம் செய்வாள்.
வீட்டில் யாகம் – ஹோமம் போன்ற தெய்வ வழிபாடுகளை செய்யும் போது,யாகத்தில் (அ) ஹோமத்தில் பசு வரட்டியை போட்டால் இன்னும் அந்தயாகத்திற்கும் ஹோமத்திற்கும் சக்தி கூடும். அந்த வீட்டில் உள்ளவர்களுக்குநோய் எதிர்ப்பு சக்தியை தரும்.
இப்படி எண்ணற்ற சக்தி வாய்ந்த பசுவை வணங்கி, முப்பத்துமுக்கோடி தேவர்களின்ஆசியை பரிபூரணமாக பெற்று, தலைமுறைதலைமுறைக்கும் வளமோடும் – நலமோடும் வாழ்வாங்கு வாழ்வோம்.

1 comment:

  1. முப்பத்துமுக்கோடி தேவர்களும், நாற்பத்துஎண்ணாயிரம் ரிஷிகளும்,அஷ்ட வசுக்களும்,நவக்கிரகங்களும் பசுவின்உடலில் ஆட்சி செய்கின்றன.

    ஓம் நமசிவாய நம...

    சிவமே தவம் : தவமே சிவம்.

    ReplyDelete