Tuesday, June 30, 2015

சைவ சித்தாந்த தத்துவத்தின் சிறப்பு

சைவ சித்தாந்த தத்துவத்தின் சிறப்பு 
1.
தர்க்க ரீதியானது (Logic)
2.
அறிவியற் பூர்வமானது (Scientific)
3.
வரலாற்றுத் தொன்மையுடையது (Historic)
4.
நடைமுறைக்கு இயைந்தது (Easy to Adapt)
5.
உலகளாவியது (Universal)
6.
முற்போக்குச் சிந்தனைகளை உடையது (Optimistic)
இன்னும் பல.
சற்காரிய வாதம் - 
'
உள்ளது அழியாது, இல்லது தோன்றாது' என்ற விஞ்ஞான அடிப்படையில் தான் சைவசித்தாந்த தத்துவம் தனது கொள்கைகளை நிலைநிறுத்துகிறது.
மும்மூர்த்திகள் :
படைத்தல் தொழிலைச் செய்யும் - பிரமன்
காத்தல் தொழிலைச்செய்யும் - திருமால்
ஒடுக்குதல் தொழிலைச் செய்யும் - உருத்திரன்
இவர்களே மும்மூர்த்திகள். இம்மும்மூர்த்திகளின் மேம்பட்டவர் சிவபெருமான். இவர்கள் சிவபெருமான் அருளினால் இந்தத் தொழிலைச் செய்யும் உருத்திரன் குணிஉருத்திரன்.
சிவபெருமான் மகாஉருத்திரன்.
இவ்வேறுபாட்டினை சிவஞான மாபாடியத்தில் சிவஞான சுவாமிகள் தெளிவாக விளக்குகிறார்கள்
இறைவனின் எண்குணங்கள் யாவை?
1.
தன் வயம் உடைமை.
2.
தூய உடம்பு உடைமை.
3.
இயற்கை உணர்வு உடைமை.
4.
முற்றுணர்வு உடைமை.
5.
இயல்பாகவே பாசமின்மை.
6.
பேரருள் உடைமை.
7.
முடிவில் ஆற்றல் உடைமை.
8.
வரம்பில் இன்பம் உடைமை.
உயிர்களைத் தோற்றுவித்தவர்:
உயிர்களை யாரும் தோற்றுவிக்கவில்லை. அவை தோற்றமில் காலந்தொட்டே இருப்பவை என்று சைவசித்தாந்தம் தெளிவாக
விளக்குகிறது.
கடவுளுக்கும், உயிருக்கும் உள்ள தொடர்பை
'
அத்துவிதம்' என்ற சொல்லினால் குறிக்கிறார்கள்.
சைவ சித்தாந்தம் காட்டும் அத்துவிதம் :
இறைவன் ஒன்றாய், வேறாய் மற்றும் உடனாய் உயிர்களோடு கலந்து இருக்கின்றான். அந்தந்தப் பொருளுக்கு அந்தந்த பொருளாய் - அதுஅதுவாய் நிற்பதுவே ஒன்றாய் நிற்றல் ஆகும். இறைவன் உயிர்களுக்கு அறிவிக்கும் பொருட்டு உயிர்களின் வேறாய் நிற்கின்றான்.
உயிர்கள் தாம் விரும்பியவற்றை செய்வதற்கு இறைவனுடைய துணை தேவைப்படுகிறது. எனவே, உயிர்களோடு உடனாய்
கூடி நிற்கின்றான்.
வினை என்றால் என்ன?
நாம் செய்யும் செயல்களே வினை எனப்படும். வினைகள் நல்வினை, தீவினை என இரண்டு 
வகைப்படுகிறது
இன்ப துன்பத்திற்கான காரணம் :
முந்தைய பிறவிகளில் நாம் செய்த செயல்களுக்குத் தகுந்தவாறு பலன்களை இப்பிறவியில் அனுபவிக்கின்றோம். இறைவன் பெருங்கருணையின் காரணமாக நாம் செய்துள்ள மொத்த வினைகளையும் ஒரே பிறவியில் அனுபவிக்கத் தருவதில்லை. இப்பிறவியில் அனுபவிப்பதற்கு எனக் கொடுக்கப்பட்ட பிரார்த்த வினையின் வழி இப்பிறவியில் இன்ப துன்பங்களை அனுபவிக்கின்றோம். நாம் அனுபவிக்கும் இன்பதுன்பத்திற்குக் காரணம் நாம் முன்பு செய்த செயல்கள் தான் என சைவ சித்தாந்தம் தெளிவாக விளக்குகிறது.
வினைக்குத் தகுந்தவாறு பலன்களை யார் நமக்குத் தருகிறார்கள்?
வினைக்குத் தகுந்த பலன்களை வினைகளின் காரணமாகிய கன்மம் தர முடியாது. ஏனென்றால் அது சடப்பொருள். உயிர் தாமே சென்று வினைகளுக்குத் தகுந்த பலன்களை நுகர்வதில்லை. இறைவனே அந்த அந்த உயிர்கள் செய்த வினைக்குத் தகுந்த பலன்களைக் கூட்டி வைக்கிறான்.
முத்தி :
ஒவ்வொரு சமயமும் அதன் வழிபடு தெய்வம், வழிபாட்டு முறைகள் மற்றும் அடிப்படை நூல்கள் போன்ற சில அடிப்படைக் கருத்துக்களை சொல்கிறார்கள். அவற்றில் இன்ப, துன்பங்களை அனுபவிக்கும் உயிரின் முடிவான நிலை முக்தி என்று சொல்லப்படுகிறது.
சைவ சித்தாந்தம் காட்டும் முக்தி
உயிர்கள், மலநீக்கம் பெற்று இறைவனுடைய திருவடிகளில் ஒன்றாய் கலந்து பேரானந்தத்தை அனுபவித்தல். இந்நிலைக்கு சிவமாம் தன்மை என்று பெயர். சிவமாம் தன்மை என்று சொன்னாலும் சிவனோடு சமமாய் நிற்றல் என்பது பொருள் அல்ல. இறைவனுக்கு அடிமையாய் ஐந்தொழில்கள் செய்யும் ஆற்றல் அற்றதாய் என்றும் பேரானந்தத்தை மட்டுமே அனுபவித்துக் கொண்டு இருக்கும். முக்தி பெற்ற உயிர்கள் மீண்டும் பிறவிக்கு வருவதில்லை.
சீவன் முக்தர் -
முக்தி பெற்றும் இவ்வுடலோடு இவ்வுலகில் வாழும் ஆன்மாக்களுக்கு சீவன் முக்தர்கள் என்று பெயர்.
நன்றி 



No comments:

Post a Comment