Friday, July 17, 2015

தங்கத்தை இடுப்புக்கு கீழ் அணியக்கூடாது

அழகான பெண் மகாலெட்சுமியா?
--------------------------------------------------------
ஒரு அழகான பொண்ணை பார்த்தால் மகாலட்சுமி மாதிரி இருக்குன்னு சொல்வார்கள் அல்லது கல்யாணம் ஆகி ஒரு பொண்ணு விட்டுக்கு வந்தால், அந்த மகாலக்ஷ்மியே வந்துருக்குன்னு சொல்வார்கள் ஏனென்றால்..,
ஒரு பெண் ஒவ்வொரு வயதிலேயும் ஒவ்வொரு பருவத்தை எட்டுகிறாள் அந்த ஓவ்வொரு பருவத்திலும் மகாலெஷ்மி ஒவ்வொரு இடத்தில் வாசம் செய்வாள் கன்னியா இருக்கும் போது காதுக்கு கிழ்புறம், கழுத்து பகுதியிலும்,திருமணம் ஆன பிறகு அவள் வைக்கும் நெற்றி பொட்டில், நேர் வகிட்டில் வாசம் செய்வாளாம் மகாலட்சுமி.
அதனால்தான் பொண்ணுங்க தலை சீவாமல் இருக்க கூடாது. திருமணம் ஆனதும் நெற்றியில் பொட்டு வைக்கணும் என்று பெரியவர்கள் சொல்வார்கள்.
நல்ல மனமும்,உதவி செய்யும் குணமும் கொண்ட எல்லா பெண்களும் எப்போதும் மகாலெஷ்மியின் அம்சம்தான்.அதேபோல் தங்கமும் மகாலெஷ்மியின் அம்சம்தான் அதனால்தான் தங்கத்தை இடுப்புக்கு கீழ் அணியக்கூடாது என்பார்கள்.அதேபோல் தங்க கொலுசு போடுவது தவறாகும்.

1 comment:

  1. நல்ல பகிர்வு...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete