Wednesday, August 26, 2015

இது தான் 'வாய் அலங்காரம்'

ஒருமுறை திருச்சியிலிருந்து, ஈரோடு செல்லும் ரயிலில் வாரியார் பயணம் செய்தார். அப்போது ஒரு இளைஞர், "ஐயா! என் கேள்விக்கு யோசிக்காமல் பதில் சொல்லுங்கள் பார்க்கலாம்'' என்றார்.
கற்றறிந்த வாரியாரே திகைத்துப் போனார். 
உடனே அந்த இளைஞர், ""வடை சாப்பிடுகிறேன். இட்லி சாப்பிடுகிறேன். பால் குடிக்கிறேன்' என்று சொல்கிறோம். 
வெற்றிலையை மட்டும் "வெற்றிலை சாப்பிடுகிறேன்' என சொல்லாமல் "வெற்றிலை போடுகிறேன்' என்பது ஏன்'' என கேட்டார். 
"பசியாற உதவும் இட்லி, தோசை போன்றவற்றைச் "சாப்பிடுகிறேன்' என்று சொல்ல வேண்டும். சட்டை, செயின், மோதிரம் போன்றவை அலங்காரமாக இருப்பதால் "சட்டை, செயின் போடுகிறேன்,' என்கிறோம். அது போல, வெற்றிலை வாய்க்கு அலங்காரமாக இருப்பதால், அதையும் "போடுகிறோம்' வரிசையில் சேர்த்து விட்டோம்,'' என்றார்.

No comments:

Post a Comment