Thursday, September 10, 2015

கடவுள் வேறு ; இறைவன் வேறு; ~~~~~~~~~~ ~~~~~~~~~~~

கடவுள் வேறு ; இறைவன் வேறு;
~~~~~~~~~~ ~~~~~~~~~~~
கடவுள் என்றால் தன்னுள் கடக்க உதவும் ஓர் அமைப்பு என்று பொருள்படுமே ஒழிய , அதுவே இறைவன் ஆகாது.
கடவுள் என்பது இறைவன் என்ற சக்தி இயங்க ஆதாரமாக ஆகும் ஓர் அமைப்பு. அத்தகைய சக்தியின் மூலம் நாம் நமது சக்தியினை /இறைவனை (நம்முள் உள்ள இறைசக்தியினை / இறைவனை) உணரலாம்.
எப்படியெனில், அந்த அமைப்பினை (கடவுளை) , நாம் நமது மனதில் நினைத்து (விரித்து) வழிபடும்போது, நமது மனம் அந்த ஒன்றின் மேலேயே குவிக்கப்பட்டதாக இருக்கும்போது (மனம் நிலைநிறுத்தல்) , அந்த அமைப்பின் (கடவுளின்) வழியாக , இறைவன் (இறைசக்தி) நம்முள் குடிகொள்கிறார் அல்லது நம்முள் இருக்கின்ற சக்தி எழுச்சியுற்று இறைவனுடன் ஒன்றுகிறது.
இத்தகைய தன்மையில் இயஙுகும் இறைவனை நாம் மறந்துவிட்டு (புரிந்துகொள்ளாது), நம் மனதினுள் விரிந்த அந்த கடவுள் என்கின்ற அமைப்பை மட்டுமே நாம் எடுத்துக் கொண்டு , அதுவே இறைவன் (அதுவே எல்லாமுமாக ) என்று நினைத்தோமானால்,
நமது செயல்கள் என்பது, சார்ந்த செயல்கள் என்றே அமையும். சார்ந்த செயல்களாக இருந்தாலும் ஜீவ நேயத்துடன் அனைத்து உயிர்களையும் நேசிக்குமாறு செயல்பட்டால், அத்தகைய தன்மையிலேயும் (அமைப்பு சார்ந்து) கூட , இறைநிலையை (தன்னை) அறியலாம்.
ஆனால், சார்ந்து என்கின்ற வட்டத்தினுள் மட்டும் இருந்து செயல்பட்டு வேற்றுமை கண்டால், தன்னையறியும் நிலை உண்டாகாது.
ஏனெனில், வேற்றுமை என்பது அமைப்புகளுக்குத்தானே ஒழிய , இறைவனுக்கு இல்லையே.
அது ஒன்றே என்றும் , ஒளிமயமானவன்
என்றும் அல்லவா உணர்த்தப்பட்டுக் கொண்டு வருகிறது. ஒளி (அக ஒளி, கண்ணால் காணும் ஒளியல்ல) என்பது பொதுவான ஒன்றுதானே, அதில் எப்படி வேற்றுமை காணமுடியும்.
ஆகையால், நாமும் நம்முள் எழும் வேற்றுமை என்ற உணர்வை அகற்றி,
ஒன்றுபட்ட சமுதாயமாக (உலக சமுதாயம்) வாழ முயல்வோமாக 

1 comment:

  1. Maya sahitha Brhmam Iswaram
    Maya rahitha Iswaram Brihmam.

    This is what I learn from Brihath Aranyakam.
    Thanks a lot.
    subbu thatha.
    www.pureaanmeekam.blogspot.com

    ReplyDelete