Sunday, September 6, 2015

பவித்ரம்

பவித்ரம்
தர்ப்பத்தினால் விதிப்படி செய்யப்பட்ட பவித்ரத்தை அணிந்துதான் ஜபம், தானம், ஹோமம், தேவ, பித்ரு மற்ற சில கார்யங்கள் செய்ய வேண்டும். யாகங்களில் மிக அவசியம். தர்ப்ப பவித்ரம் இல்லாத கார்யம் செல்லுபடியாகாது. பொதுவாகவே ப்ராஹ்மணன் எப்பொழுதுமே பவித்ரபாணியாக இருப்பது ச்ரேஷ்டம் என்று ஒரு வாக்யமும் உண்டு. அதனால்தானோ என்னமோ காத்யாயனர், ஹாரீதர் போன்ற ரிஷிகள் மோதிர விரலில் ஸ்வர்ண பவித்ரத்தை பிராஹ்மணன் தரிக்க «வ்டும் எனக் கூறியுள்ளனர்.
மோதிர விரலில் தங்கத்தாலான பவித்ரம் தரிப்பதோடு ஆள்காட்டி விரலில் தர்ஜனி எனப்படும் வெள்ளி மோதிரத்தையும் அணிய வேண்டும். ஆனால் ஜீவஜ்யேஷ்டன் வெள்ளியினாலான தர்ஜனியைத் தவிர்க்க வேண்டும். ஒருவன் தங்கத்தினாலான பவித்ரத்தை நிரந்தரமாக அணிந்திருந்தாலும் கர்மாக்களில் தர்ப்ப பவித்ரம் இன்றியமையாதது. பவித்ரம் எனப் பொதுவாக கூறினால் அது தர்ப்பத்தினால் செய்த பவித்ரம்தான். கர்மா முடியும் வரையில் குச பவித்ரபாணியாக இருந்துதான் ஆக வேண்டும். கர்மா முடிவில் முடிச்சை அவிழ்த்துவிட்டு பரிஹரிக்க வேண்டும்.
எந்தவிதமான கர்மாவாக இருப்பினும் பவித்ரத்தை வலது கை மோதிர விரலில் தான் அணிய வேண்டும். பொதுவாக நமக்கு நாமே பவித்ரத்தை கர்மாக்களில் தயார் செய்து அணிந்து கொள்வதில்லை ஆச்சார்யன் மூலமாகவோ அல்லது வயதில், யோக்யாம்சத்தில் சிறந்தவர் மூலமாக மந்த்ர பூர்வமாக பவித்ரத்தைப் பெற்றுக் கொண்டு அணிவது சம்பிரதாயம். தவிர்க்க முடியாத நேரங்களில் நமக்கு நாமே பவித்ரம் தயார் செய்து அணிந்து கொள்வதில் தோஷமில்லை.
பவித்ரத்தில் அடங்கியுள்ள தர்ப்பங்களின் ஸங்க்யை அமைவதற்கு விதிமுறை உண்டு. கர்மாவின் தன்மையைப் பொருத்து ஸங்க்யை வித்தியாசப்படும். அதன் விவரங்கள்
கர்மாவின் பெயர் ஸங்க்யை
ஜபம், தேவ பூஜைகள்,
ஹோமங்கள் இத்யாதி 2 புல்
ச்ராத்தம், தர்ப்பணாதிகள் 3 புல்
ப்ரேத கார்யங்கள் 1 புல்
பவித்ரத்தில் அடங்கியுள்ள புல்லின் எண்ணிக்கை மாறினாலும் ரூபம் (செய்யும் விதம்) மாறாது. பார்ப்பதற்கு ஒரே மாதிரிதான் பொதுவாக எல்லாவிதமான பவித்ரமும் அமைந்திருக்கும்.

1 comment: