Tuesday, October 6, 2015

ருத்ராட்சம் – பில்லி சூனியத்திலிருந்து காக்குமா?

ருத்ராட்சம் பற்றிய பல அரிய தகவல்கள் இருந்தாலும், அது பில்லி சூனியத்திலிருந்து நம்மை பாதுகாக்கும் என்பது அறியப்படாத ஒன்று. இதை ருத்ராட்சம் எப்படி செய்கிறது என்பதையும் ருத்ராட்சத்தை அணியும் முறையையும் எடுத்துரைக்கிறது இக்கட்டுரை… கேள்வி ருத்ராட்ச மாலையை ஆசீர்வதித்திருக்கிறீர்களே, அதுவும் தீட்சை வழங்குவதுதானா? சத்குரு: சக்திமயமான ஒரு சூழ்நிலையை அடிப்படை நிலையிலிருந்து மேம்பட்ட நிலைக்குக் கொண்டுவந்தால் அதற்கு பிரதிஷ்டை என்று பெயர். நாம் பிராணப் பிரதிஷ்டை என்று தியானலிங்கம் பற்றி சொல்கிறபோது அது முற்றிலும் வேறு பரிமாணத்தைச் சார்ந்தது. ருத்ரட்சத்தை அதற்கு உரிய முறையில் நாம் தயார் செய்கிறோம். அதை வெறுமனே பிறருக்கு வழங்குவதில்லை. குறிப்பிட்ட ஒரு காலத்திற்கு தியானலிங்க வளாகத்திற்குள் ருத்ராட்சங்கள் வைக்கப்பட்டு பிறகே தரப்படுகின்றன. மற்ற இடங்களில் வாங்குகிற ருத்ராட்சங்களில் இந்தத் தன்மை இருக்காது. அவற்றை நான் ஆசீர்வதித்துத் தருவது என்பது இன்னும் வேறு நிலையைச் சேர்ந்தது. தனிப்பட்ட முறையில் அவர்களுக்காக ஏதோ ஒன்று செய்கிறது. கேள்வி தீய அதிர்வுகளிலிருந்து நம்மைப் பாதுகாக்கும் கவசமாக ருத்ராட்சம் பயன்படுமா? சத்குரு: ருத்ராட்சம் உங்களுக்குள் இருக்கிற சக்திகளை ஒருநிலைப்படுத்துகிறது. எனவே வெளியில் இருக்கிற தீயசக்திகள் உங்களை பாதிக்காது. சிலர் மீது சில தீயவினைகளை பில்லி, சூனியம் போன்றவற்றை சிலர் ஒரு குறிப்பிட்ட மனிதரை நோக்கி பில்லி, சூனியம் ஏவப்படுகிறது. அதை அவர் ஏற்காத நிலையில் இருக்கிறார் என்றால், அவருக்கு பக்கத்தில் இருக்கிற உங்களை அது பாதிக்கும். ஏவுவார்கள். அதில் எவ்வளவு தூரம் பாதிப்பு இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் இந்தியாவில் அது ஒரு அறிவியலாகவே வளர்ந்தது. நான்கு வேதங்களில், அதர்வண வேதம் சக்திநிலையை ஒருவருடைய நன்மைக்கோ, தீமைக்கோ பயன்படுத்துவதைப் பற்றிதான் இருக்கிறது. எப்படி தீமை செய்வது? எப்படி அவர்களைக் காயப்படுத்துவது? எப்படி நோய் வழங்குவது? எப்படி ஒரு மனிதனை மரணமடைய வைப்பது? என்று கூட இருக்கிறது. இவற்றை பொதுவாக பில்லி, சூனியம் என்று சொல்வார்கள். அது ஒரு தனித்தன்மை. சில துறைகளில் சில நிபுணத்துவம் தேவைப்படுகிறது. அது வெறும் நம்பிக்கை மட்டுமல்ல. அது ஒரு அறிவியல். அது நிச்சயம் பயன்படுகிறது. அது ஒரு குறிப்பிட்ட விதமாக நிகழ்கிற காரணத்தால் உள்நிலையில் நிறைய வேலைகள் அதற்கு செய்ய வேண்டியிருக்கிறது. யாருக்காவது, எந்த தீமையாவது செய்ய வேண்டும் என்று கருதுவார்கள். ஒருவிதமான பேராசை அல்லது வெறுப்பு அல்லது கோபம் காரணமாக அதனைச் செய்வார்கள். அவர்கள் ஆத்மசாதனைகளில் உறுதிப்படமாட்டார்கள். எனவே அந்தக் கலை அவர்களுக்கு முழுமையாக கைவருவதில்லை. கொஞ்சம் தெரியும். மற்றது எல்லாம் உளவியல் சார்ந்தது. உதாரணத்திற்கு யாரோ உங்களை எதிர்த்து பில்லி, சூனியம் செய்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். எந்த பில்லி, சூனியமும் செய்யாமல், உங்கள் வீட்டு வாசலில் ஒரு மண்டை ஓடு வைத்துவிட்டு, கொஞ்சம் இரத்தத்தையும் தெளித்துவிட்டுப் போய்விட்டால், உங்களுக்கு தீமை நடக்கத் தொடங்கிவிட்டதாகவே தோன்றும். இதில் தொண்ணூறு சதவிதம் மனம் சார்ந்த அச்சம். ஆனால் அதேநேரம் இன்னும் சிலபேர் இருக்கிறார்கள். எவ்வளவோ தொலைவில் இருந்து, எதாவது செய்து முற்றிலும் அழிக்கக்கூடிய நிலையில் இருக்கிறார்கள். இதனால் பாதிக்கப்பட்ட பலரும் என்னிடம் உதவிக்கு வருகிறார்கள். நான் இவர்களுக்கென்று பலவற்றை செய்கிறேன். சில சமயங்களில் பில்லி, சூனியம் உங்கள் மீது ஏவப்படவேண்டுமென்று அவசியமில்லை. இந்த ஒரு குறிப்பிட்ட மனிதரை நோக்கி பில்லி, சூனியம் ஏவப்படுகிறது. அதை அவர் ஏற்காத நிலையில் இருக்கிறார் என்றால், அவருக்கு பக்கத்தில் இருக்கிற உங்களை அது பாதிக்கும். இது பல இடங்களில் நடக்கிறது. இரண்டு பேர் ஒருவரையொருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொள்கிறார்கள் என்றால், மூன்றாவது மனிதர் ஒருவர் காயப்படுவது போலத்தான் இது. பலநேரங்களில் அந்த தீயசக்திகள் உங்களை நோக்கியே ஏவப்படுகிறது. சில சமயம் வேறெங்கோ போகவேண்டியது உங்களைப் பிடித்துவிடும். நீங்கள் ருத்ராட்சம் அணிவீர்களேயானால், உங்கள் சக்திநிலையிலிருந்து நீங்களே ஒரு கவசத்தை ஏற்படுத்திக் கொள்கிறீர்கள். கேள்வி ருத்ராட்சத்தை எல்லாநேரமும் அணியலாமா? சில பேர் அதைத் தங்கள் மணிக்கட்டைச் சுற்றிக் கட்டியிருக்கிறார்களே, அதனால் பயனுண்டா? சத்குரு: ருத்ராட்சத்தை எல்லா நேரமும் அணியலாம். அவற்றை கழுத்தில் தான் அணிய வேண்டும். மணிக்கட்டைச் சுற்றி கட்டக்கூடாது. ஒரு குறிப்பிட்ட தன்மையில் இருக்கிற மனிதர்தான், மணிக்கட்டைச் சுற்றி அணியலாம். மணிக்கட்டைச் சுற்றிக் கட்டினால் உங்கள் வாழ்வை மிகவும் கடினமாக, உறுதியான முறையில் நடத்தவேண்டும். பொதுவாக அது சாத்தியமில்லை. குடும்பச் சூழ்நிலையில் இருப்பவர்கள் கழுத்தைச் சுற்றித்தான் அணியவேண்டும். அவர்கள் மணிக்கட்டைச் சுற்றி அணிவது நல்லதில்லை. இங்கே கூட சில இளம்பெண்கள் தங்கள் கட்டை விரல்களில் மோதிரம் அணிந்திருக்கிறார்கள். அதை அப்படி அணியக்கூடாது. அதன்மூலம் உங்களுக்குத் தேவையில்லாததை எல்லாம் உங்களை நோக்கி நீங்கள் ஈர்ப்பீர்கள். மோதிரவிரலுக்கு மோதிரங்கள் அணியலாம். இந்த நான்கு விரல்களைப் பொறுத்தவரையில் தவறில்லை. ஆனால் இந்த கட்டைவிரலில் எந்த உலோகத்தையும் அணியவே கூடாது. அதன் மூலம் உங்களுக்குத் தேவையில்லாத சக்திகள், உங்களோடு தொடர்பு கொள்ள நேரும். குறிப்பாக, கட்டை விரலில் தங்கம், செம்பு போன்றவற்றை அணிவீர்களேயானால், மாந்திரீகப் பயிற்சி ஏவப்பட சில சக்திகளை நீங்கள் ஈர்ப்பீர்கள். வேறொருவருடைய கட்டுப்பாட்டுக்குள் இருக்கிற இத்தகைய சக்திகளுக்கு அடிமையாவது உங்களுக்கு நல்லதில்லை.

No comments:

Post a Comment