Saturday, October 31, 2015

மூன்று ஆண்டுகளில் முழுவிதியையும் மாற்றும் ரகசியம்

மூன்று ஆண்டுகளில் முழுவிதியையும் மாற்றும் ரகசியம்
ஒரு நாளுக்கு இரண்டுமுறை(காலையில் 30 நிமிடம்,இரவில் 30 நிமிடம்) பின்வரும் அன்னை அரசாலை(வராகி)யின் பெயர்களை ஜபித்துவரவேண்டும்;
மூன்றாம் நாள் முதல் சில சிறு அனுபவக் காட்சியை உணர்வீர்கள்;
16 ஆம் நாளில் இருந்து நீங்கள் நினைத்துப் பார்க்கமுடியாத ஆச்சரியங்கள் உங்கள் வாழ்வில் நிகழத் துவங்கும்;
90 ஆம் நாளில் இருந்து உங்கள் தினசரி வாழ்க்கையில் சிறு சிறு பயங்கள் உங்களை விட்டு நீங்கியிருக்கும்;
120 ஆம் நாளில் இருந்து நீங்கள் எதை எதிர்பார்த்து நீண்ட நாட்கள் போராடினீர்களோ அதை நோக்கிப் பயணிக்கத் துவங்கியிருப்பீர்கள்;உங்களுக்கு எதிரான அனைத்து சதிகளும்,பொறாமைகளும் சின்னாபின்னமாகியிருக்கும்;

அசைவம்,மது இரண்டையும் தவிர்த்துவிட்டு,வீட்டில் காலை 7 மணிக்குள் (காலை 5 மணிக்கு மேல் 7 மணிக்குள்) ஏதாவது 30 நிமிடமும்,மாலை 6 மணிக்கு மேல் இரவு 11 மணிக்குள் ஏதாவது 30 நிமிடமும் பின்வரும் அன்னை அரசாலையின் பெயர்களை ஜபித்து வருக! வசதியாகவும்,நிம்மதியாகவும்,வளமாகவும்,தைரியமாகவும் வாழ்க!!!
பஞ்சமீ
தண்டநாதா
சங்கேதா
சமேஸ்வரீ
சமயசங்கேதா
வராகீ
போத்ரிணீ
சிவா
வார்த்தாளீ
மகாசேனா
ஆக்ஞாசக்ரேஸ்வரீ
அரிக்நீ
வாழ்க பைரவ அறமுடன்;வளர்க வராகி அருளுடன்!!!

No comments:

Post a Comment