Friday, October 30, 2015

திறமையாகப் பேச வேண்டுமா?

திறமையாகப் பேசி பிறரைக் கவர வேண்டும் என்று எல்லோருக்கும் ஆசைதான். அது ஆசை யாக மட்டுமே உங்களிடம் இருக்க வேண்டுமா?
சிறிது முயன்று பாருங்கள், நாளையே உங்கள் பேச்சைக் கேட்க நாடு காத்திருக்கலாம்.
ஏதேனும் பிடித்தமான தலைப்பைப் பற்றி நன்கு சிந்தித்து, சில குறிப்புகளை எடுத்துக் கொண்டு ஒரு சில நிமிடங்கள் பேசுங்கள்.
அவ்வாறு பேசும்போது அதை ஓர் ஒலிநாடா வில் பதிவு செய்யுங்கள். அதைத் திரும்பத் திரும்பக் கேட்டுக் கீழே குறிப்பிட்டுள்ளவற்றைச் சரிபார்த்து திருத்திக் கொள்ளலாம்.
1. உங்களது பேச்சு மிக அதிகமாகவோ, குறைவாகவோ அமைந்துள்ளதா?
2. பேச்சு விட்டுவிட்டோ, பாடுவதாகவோ, கேள்விக்கணை போன்றோ உள்ளதா?
3. திருப்தியற்ற குழந்தை பேசுவது போல் உற்சாகமில்லாமல் பேச வேண்டாம்.
4. ஏகராகத்திலோ அல்லது தனக்குள்ளேயே பேசிக் கொள்வது மாதிரி இருக்கக் கூடாது.
5. ‘உம்’, ‘வந்து’, ‘சரியா’, ‘என்ன சொல்ல வந்தேன்னா’, ‘புரிந்ததா’ போன்ற வார்த்தை களைத் திரும்பத் திரும்பப் பயன்படுத்தியிருந்தால் அது தவிர்க்கப்பட வேண்டியவை. ஆங்கி லத்தில் அதை ‘Speechtics’ என்பர்.
6. தொண்டையை அடிக்கடி கனைக்காதீர்கள்.
7. குரல் தொனியை ஏற்றியும், இறக்கியும், இடத்திற்கு ஏற்றவாறு மென்மையாகவும், வன்மையாகவும் பேசி வார்த்தைகளுக்கு மெருகூட்டியிருக்கிறீர்களா?
8. நிமிடத்திற்கு 150 முதல் 170 முடிய வார்த் தைகள் வெளிப்பட்டால் நல்ல பேச்சு எனலாம்.
திறமையாகப் பேச வேண்டுமென்றால், கீழே குறிப்பிட்டுள்ள செயல் திறமைகள் மிகவும் இன்றியமையாதவை.
1.பேச்சுக்கு எடுத்துக்கொண்ட கருத்துகளைத் திறமையாக அமைத்துக் கொள்ளுதல்-Subject Skills. இது இல்லையென்றால், நல்ல கருத்துகள் கூறினாலும் நீங்கள் ‘போர’டிப்பீர்கள்.
2.கவர்ச்சியான பேச்சுத் திறமையை வளர்த்துக் கொள்ளுதல். Oral Communication Skills. உங்கள் பேச்சு வெறும் கவர்ச்சியாக இருந்தால் ‘கேட்பதற்கு நன்றாக உள்ளது. ஆனால் விஷய மில்லையே’ என மக்கள் அங்கலாய்ப்பார்கள்.
3. மற்றவர்கள் உரைப்பதை உன்னிப்பாகக் கேட்கக் கற்றுக் கொள்ளுதல்.-Listening Skills. இந்தத் திறமை இல்லையென்றால், ‘நம்மைப் புரிந்து கொள்ளாமல், இவர் பேசிகிட்டே போகிறார்’ என்றுதான் எல்லோரும் கூறுவர்.
4. மற்றவர்களுடன் நல்லுறவுடன் பழகக் கற்றுக் கொள்ளுதல்.-Inter Personal Skills.
5. தலைமை ஏற்புத் திறமையுடன் பழகுதல்- Leadership skills. இந்தப் பண்பு இல்லாமல் பேச்சாற்றல் வளர்த்துக் கொண்டவர்கள் Leader ஆக மாறாமல் வெறும் Reader-ஆகவே இருப்பர்.
பேசுபவருக்கு வேண்டியவை:
1.எண்ணங்களில் தெளிவு, 2. வார்த்தைகளில் இனிமை, 3. உச்சரிப்பில் தெளிவு, 4. பேச்சிற்கு ஏற்ற முகபாவம், 5. ஒருங்கிணைந்த செயல்.
கூட்டத்தில் ஒருவரது முகத்தை மட்டும் பார்த்துப் பேசக் கூடாது. பார்வையை எல்லோரது திசையிலும் திருப்ப வேண்டும்.
கேட்பவருக்கு வேண்டியவை:
1. ஆழ்ந்த கவனம், 2. பொறுமை, 3. பேசுப வரை முழுமையாகக் கேட்டல், 4. ஆராய்ந்து புரிந்து கொள்ளுதல், 5. பிறர் கருத்துகளை ஆமோதித்தல்.
நன்கு சிந்திப்பவனே நல்ல முறையில் பேச முடியும். அதோடு, பேசுபவர் மற்றவர்களை நன்கு கவனிக்கக் கூடியவர்களாக இருப்பதும் மிக அவசியம்.
நீங்கள் நன்கு கேட்பவராக இருந்தால், மற்றவர்களும் உங்கள் கருத்துகளுக்குச் செவிசாய்ப் பவராக மாறுவர்.

No comments:

Post a Comment