Monday, October 26, 2015

பர்த்ருஹரி நீதி சதகம்

• அரசன் கெட்ட ஆலோசனையால் வீழ்கிறான்.
• ஸன்யாஸி விஷயங்களில் பற்றுதல் அடைந்தால் வீழ்ச்சியடைகிறான்.
• வாலனையால்(குறையை மறைத்து கொண்டாடுவதால்) புத்ரன் கெடுகிறான்.
• பிராம்மணன் வேதாத்யயனம் செய்யாததால் நசிவடைகிறான்.
• நல்ல குலம் கெட்ட பிள்ளையால் கெடுதல் அடையும்.
• நற்குணமானது துஷ்ட ஸஹவாசத்தால் கெட்டுப் போய்விடுகிறது.
• கள்குடிப்பதால் வெட்கம்போகிறது.
• பரஸ்பர அன்பு தேசாந்திர வாஸத்தினால் குறைந்து விடுகிறது.
• ஸம்பத்தானது நீதிமுறை தவறியகார்யத்தாலும், பணமானது சக்திக்கு மீறிய செலவாலும் கவனக்குறைவாலும் இழக்கப்படுகிறது.
_பர்த்ருஹரி நீதி சதகம் -33

No comments:

Post a Comment