Sunday, November 1, 2015

கனவு சாஸ்திரம்

கனவு சாஸ்திரம்
கருத்தரித்திருக்கும் பெண்மணி கனவில் தாமரை மற்றும் வெள்ளை நிற மலர்கள், பழங்கள் முக்கியமாக மாம்பழம் அல்லது மாங்காய் போன்றவை வந்தால் பிறக்கும் குழந்தை ஆணாக இருக்கும் என பலன் கொள்ளலாம்.
செம்பருத்தி,ரோஜா மலர்கள், வாழைப்பழம் கனவில் வருவது பெண் குழந்தை பிறப்பை உறுதி செய்யும் ஒன்றாகும்.
கனவில் தெய்வங்கள், பிராமணர்கள், உயிருள்ள காளை அல்லது பசு மாடு, கோவில், சர்ச், மசூதியில் பூஜை செய்பவர்கள், நீர் நிலைகள், எறியும் நெருப்பு போன்றவை தோன்ற உடல் நிலை முன்னேற்றம் மற்றும் இருக்கும் நோய்கள் விலகப்போவதின் அறிகுறியாக எடுத்து கொள்ளலாம். மேற்கண்டவை அசுத்தமான சூழலில் தென்பட்டால், அழுக்குடைகளுடன் அல்லது அசுத்தமான நீர் நிலை, இறந்த காளை அல்லது பசு, இடிந்த நிலையில் தெய்வீக இடங்கள் போன்றவையாக இருப்பின் உடல் தீங்கு பெரும் நோய் நேர்வதற்கான அறிகுறி.
கனவு சாஸ்திரம்-2
மரணம் வருவதை கனவுகள் பலருக்கு முன் கூட்டியே உணர்த்திவிடும். அதை பெரும்பாலானோர் உணர்வதில்லை. ஆரோக்யமாக உள்ள ஒருவருக்கு கூட சில பிரத்யேக கனவுகள் வரின் எனில், மரணம் உணர்த்தபடுகிறது எனலாம். அவற்றை அடுத்த பதிவுகளில் பாப்போம்.
பொதுவாக உறங்க ஆரம்பித்தவுடன் முதல் 2 மணி நேரத்தில் வரும் கனவுகள் ஒரு வருடத்திலும்,அடுத்த இரண்டு மணி நேரத்திலும் மற்றும் மதிய நேரத்தில் உறங்குவோருக்கும் வரும் கனவுகள் அடுத்த ஆறு மாதத்திற்குள்ளும் அடுத்த இரண்டு மணி மணி நேரத்தில் வரும் கனவுகள் மூன்று மாதத்திலும் கடைசி அதிகாலை கனவுகள் பத்தே நாட்களில் நடந்தேறும் என்கிறது 'ஹரித சம்ஹிதை' .
கனவு சாஸ்திரம் 3
கனவில் எறும்புகளை கண்டால் கவலை தரும் செய்தி ஒன்று வரவிருப்பதையும், பறவைகள் இடமாற்றத்தையும், காளைகள் நெருக்கடிகள் வரப்போவதையும், நீந்தும் மீன்கள் புதிய வாய்ப்புகளையும், நாய்கள் நன்மையையும், குறைக்கும் நாய் எனில் 'பெரும் பிரச்னை ஒன்றில் இருந்து நாம் விடுபடபோவதையும், நாய் கடிக்கும் படி கனவு வர- கஷ்டங்கள் வரப்போவதையும்,உயர பறக்கும் கழுகுகளை காணின் பெரும் அதிர்ஷ்டம்-செல்வ வரவையும், கிளிகள் வெளிநாட்டு பயணத்தையும், எலிகள் தொல்லைகள் வரப்போவதையும் உணர்த்தும் ஒன்றாகும். பாம்பை கொல்வதை போன்ற கனவு நாம் பெரிய எதிரி தொல்லையில் இருந்து ஜெயிப்பதற்கான அறிகுறியாகும். (நிஜத்தில் பாம்பை அடிப்பது-கொல்வது நேரெதிர் பலனை தரும் என்பதை நினைவில் கொள்க) .
நன்றி வாமனன் சேஷாத்திரி

No comments:

Post a Comment