Monday, November 9, 2015

என் கடன் பணி செய்து கிடப்பதே

என் கடன் பணி செய்து கிடப்பதே
மனிதநேயப் பணியானது மனநிறைவைத் தருகின்ற ஒரு பணி. அது செய்யச் செய்ய மகிழ்வைத் தருவது. அத்தகைய பணி இன்று தாயகத்தில் வாழும் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. போர் முடிந்து விட்டாலும்> போரின் பாதிப்புக்கள் ஓய்ந்துவிடாத சூழலில் காலமறிந்து செய்யும் சிறு உதவி கூட ஞாலத்தில் மாணப் பெரிதாய் மதிக்கப்படும்.
அன்றாட உணவு> கல்வி> உடை> நோய்ப் பராமரிப்பு என யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் தேவை ஆறு வருடங்கள் கடந்தும் நிறைவு செய்யப்படாமல் இருந்து வருகின்றது. புலத்தில் இருந்து செய்யப்படும் உதவிகள் பன்முகப்படுத்தப்படாத சூழலில் ஒருசில துறைகளில் திரும்பத் திரும்பச் செய்யப்படுகின்ற ஒன்றாகவும்> ஒருசில துறைகள் கவனிக்கப்படாத ஒன்றாகவும் இருந்து வருகின்றது. முறையான ஒரு அரசாங்கத்தினால் செய்யப்பட வேண்டிய பணிகள் தனிநபர்களால் செய்யப்படும் போது இத்தகைய குறைபாடுகள் தென்படவே செய்யும்.
ஆனாலும் ஒவ்வொருவரும்; தத்தம் சக்திக்கு ஏற்ப உதவிகளைச் செய்தே ஆக வேண்டும். அந்தவகையில் புலம்பெயர் நாடுகளில் இருந்து பாவித்த> நல்ல நிலையில் உள்ள ஆடைகளைச் சேகரித்து அனுப்ப நான் முடிவு செய்துள்ளேன். எனது இந்த முயற்சிக்கு கரங்கொடுக்க சுவிஸ் நாட்டைச் சேர்ந்த இரு பெண்மணிகள் முன்வந்து உள்ளனர். அதேபோன்று> சேகரிக்கப்படும் ஆடைகளை குறைந்த செயவில் தாயகம் அனுப்பி வைக்க ஊடகவியலாளர் சண் தவராஜாவும் முன்வந்து உள்ளார்.
எனவே> அன்பு உறவுகளே> தயவு செய்து நல்ல நிலையில் உள்ள சேலை> பஞ்சாபி> சிறுவருக்கான ஆடைகள்> ஆடவருக்கான உடைகள் என்பவற்றை எமக்குத் தந்துதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். எமது உதவிகளைப் பெறுபவர்கள் எமது சகோதரர்களே என்ற சிந்தனையை மனதிற் கொண்டு நல்ல நிலையில் உள்ள ஆடைகளை> கழுவி> சுத்தமான நிலையில் தந்துதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
தூண் வரசித்தி விநாயகர் ஆலய நிர்வாகத்திடம் நீங்கள் ஆடைகளை ஒப்படைக்கலாம். தொடர்புகளுக்கு எனது இலக்கம்: 076 360 94 86, 079 332 80 37
நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் எனது கோரிக்கையைச் செவிமடுத்து வாக்களித்த அனைத்து அன்புள்ளங்களுக்கும் மீண்டுமொருமுறை எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன்> எனது இந்த முயற்சியிலும் எனக்கு ஆதரவு வழங்குமாறு உங்கள் அனைவரையும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment