Wednesday, January 27, 2016

குழந்தை குறையில்லாது பிறக்க, "உடல் உறவு மூலம் நல்ல குழந்தை உண்டாக" (நமது பாரம்பரிய ரகசியம்) திருமூலர் சொல்லும் தகவல்!!!

திருமூலரின் திருமந்திரத்தில் -
(ஆண்/பெண் குழந்தை பிறக்க)
குழந்தை குறையில்லாது பிறக்க, "உடல் உறவு மூலம் நல்ல குழந்தை
உண்டாக"
(நமது பாரம்பரிய ரகசியம்) திருமூலர்
சொல்லும் தகவல்!!!
----------------------------------------------------
(உறவின் போதே ஆண்/பெண்/அலி/திறமை/ஊனம் நிற்ணயிக்க படுகிறது)
மாண்பதுவாக வளர்கின்ற வன்னியும்
காண்பது ஆண் பெண் அலி எனும் கற்பனை
பூண்பது மாதா பிதா வழி போலவே
ஆம்பதி செய்தான் அச் சோதி தன் ஆண்மையே. (திருமந்திரம் 477)
477. இறைவன் தாய் தந்தை வழி உடலைப் படைக்கின்றான் :
உயிர்க்கு ஆண், பெண், அலி என்ற வேறுபாடு இல்லை. பெருமையுடனே வளர்கின்ற ஒளியான உயிரை ஆண் என்றோ பெண் என்றோ அலி என்றோ காண்பது கற்பனையாகும். அப்படிப்பட்ட உயிருக்கு ஏற்ற உடலை தாய் தந்தையின் தன்மையைக் கொண்டு படைப்பது சிவபெருமானின் வல்லமையாம்.
ஆண் மிகில் ஆண் ஆகும் பெண் மிகில் பெண் ஆகும்
பூண் இரண்டு ஒத்துப் பொருந்தில் அலியாகும்
தாண்மிகும் ஆகில் தரணி முழுது ஆளும்
பாணவம் மிக்கிடின் பாய்ந்ததும் இல்லையே. (திருமந்திரம் 478)
478. கருவில் ஆண் பெண் மாற்றம் அமையும் விதம் :
ஆண் பெண் கூடும் போது ஆண் பண்பு மிகுந்தால் அவ்வுயிர் ஆண் ஆகும். பெண் பண்பு மிகுந்தால் அவ்வுயிர் பெண்ணாகும். ஆண் பெண் பண்பு சமமானால் அவ்வுயிர் அலியாகும். ஆள் வினை முயற்சியில் கருத்து மிகுதியாய் இருந்தால் பிறக்கும் உயிர் சிறப்பாய்ப் பிறக்கும். அது உலகை ஆளும். கூட்டுறவின் போது தாழ்ச்சி மனப்பான்மை இருக்குமானால் சுக்கிலம் பாய்வது நின்று விடும்.
பாய்ந்தபின் அஞ்சுஓடில் ஆயுளும் நூறு ஆகும்
பாய்ந்தபின் நாலோடில் பாரினில் எண்பதாம்
பாய்ந்திடும் வாயுப் பகுத்து அறிந்து இவ்வகை
பாய்ந்திடும் யோகிக்குப் பாய்ச்சலும் ஆமே. (திருமந்திரம் 479)
479. யோகி சுக்கிலத்தைப் பாய்ச்சல் :
ஆணின் சுக்கிலம் ஆணிடமிருந்து பிரிந்து ஐந்து விரற்கிடை ஓடி விழுமாயின் பிறக்கும் உயிரின் வாழ்வு நூறு ஆண்டு. அந்தச் சுக்கிலம் நான்கு விரற்கிடை ஓடி விழுந்தால் அந்தஉயிரின் வாழ்வு எண்பதாண்டு. சுக்கிலத்தைச் செலுத்தும் வாயுவை இப்படி நன்றாய் உணர்ந்து பாய்ந்திடச் செய்யும் ஆற்றல் யோகிக்கு உண்டு. யோகி வேண்டியபடி சுக்கிலத்தைச் செலுத்தி விரும்பியபடி குழந்தை பெற முடியும்.
பாய்கின்ற வாயுக் குறையின் குறள் ஆகும்
பாய்கின்ற வாயு விளைக்கின் முடம் ஆகும்
பாய்கின்ற வாயு நடுப்படின் கூன் ஆகும்
பாய்கின்ற வாயு மாதர்க்கு இல்லை பார்க்கிலே. (திருமந்திரம் 480)
480. சுக்கிலத்தைச் செலுத்தும் வாயுவுக்கு ஏற்பக் குழந்தையின் அங்கம் அமைதல்:
சுக்கிலத்தைச் செலுத்தும் வாயு குறைந்திடின் குழந்தையானது குட்டையாய்ப் பிறக்கும். பாயும் வாயு மெலிந்திடின் முடமாகும். அவ்வாயு தடைப்பட்டால் குழந்தை கூனாய்ப் பிறக்கும். ஆனால், ஆராய்ந்து பார்த்தால், பெண்களுக்கு வாயு இல்லை.
மாதா உதரம் மலம் மிகின் மந்தன் ஆம்
மாதா உதரம் சலம் மிகின் மூங்கை ஆம்
மாதா உதரம் இரண்டு ஒக்கின் கண் இல்லை
மாதா உதரத்தில் வந்த குழவிக்கே. (திருமந்திரம் 481)
481. கரு வளரும் காலத்தில் தாயின் வயிறு இருக்க வேண்டிய நிலைமை :
அன்னையின் வயிற்றில் கருவாக அமைந்த குழந்தைக்கு அந்த அன்னையின் வயிற்றில் மலம் மிகுமானால் அக்குழந்தை மந்த புத்தியுடையதாய் விளங்கும். அவள் வயிற்றில் நீர் மிகுமானால் அந்தக் குழந்தை ஊமையாய் விடும். மலமும் நீரும் மிகுந்து இருக்குமானால் அக்குழந்தை குருடாகிவிடும்.
குழவியும் ஆணாம் வலத்தது வாகில்
குழவியும் பெண்ணாம் இடத்தது வாகில்
குழவியும் இரண்டாம் அபானன் எதிர்க்கில்
குழவி அலி ஆகும்கொண்ட கால் ஒக்கிலே. (திருமந்திரம் 482)
482. மூச்சுக் காற்றின் இயல்புக்கு ஏற்பக் குழந்தையின் பால் வேறுபாடு அமையும்:
இன்ப நுகர்ச்சியின் போது ஆண்மகனிடம் உயிர்ப்பான மூச்சு வலது பக்க நாசியில் (சூரிய கலையில்) இயங்கினால் ஆண் குழந்தையாகும்.
ஆண்மகனிடம் உயிர்ப்பான மூச்சு இடது பக்க நாசியில் (சந்திர கலையில்) இயங்கினால் பெண் குழந்தையாகும்.
ஆணின் மூச்சு வலது பக்க நாசியிலும், இடது பக்க நாசியிலும் இரண்டும் ஒத்து இயங்கினால் குழந்தை அலியாகும்.
சுக்கிலத்தைச் செலுத்தும் பிராண வாயுவுடன் அபானன் எனப்படும் மலக்காற்று எதிர்த்தால் சுக்கிலம் சிதைந்து இரட்டைக் குழந்தையாகும்.
கொண்டநல் வாயு இருவர்க்கும் ஒத்தெழில்
கொண்ட குழவியுங் கோமளம் ஆயிடும்
கொண்டநல் வாயு இருவர்க்கும் குழறிடில்
கொண்டதும் இல்லையாம் கோள்வளை யாட்கே. (திருமந்திரம் 483)
483. உயிர்ப்பின் இயக்கத்து ஏற்பக் கரு அமைதல் :
ஆண் பெண் இருவருக்கும் உயிர்ப்பு ஒத்து இருக்குமானால் கருவில் உள்ள குழந்தை அழகாக விளங்கும். புணரும் அக்காலத்தில் அந்த இருவருக்கும் உயிர்ப்புத் தடுமாறினால் பெண்ணுக்குக் கரு உண்டாக வாய்ப்பு இல்லையாகும்.
கோள்வளை உந்தியில் கொண்ட குழவியும்
தால்வளை உள்ளே தயங்கிய சோதியாம்
பால்வளர்ந்து உள்ளே பகலவன் பொன் உருப்
போல் வளர்ந்து உள்ளே பொருந்து உரு ஆமே. (திருமந்திரம் 484)
484. பொற்சிலை எனப் பிறக்குமாறு :
பெண்ணின் வயிற்றில் அமைந்த குழந்தை அண்ணாக்கினுள்ளே விளங்கும் பேரொளி போன்றதாகும். அக் குழந்தை ஆணாகவோ பெண்ணாகவோ பிறந்து வளர்ந்து சூரியனின் பொன் வடிவைப் போன்று வளர்ந்து முழு வடிவத்தைப் பெறும்.
உடலுறவில் கணவனும் மனைவியும்
----------------------------------------------------------
மாதம் ஒன்றுக்கு எத்தனை முறை கணவனும்
மனைவியும் ஒன்று சேரலாம்?
தற்போது நமது இந்திய நாட்டில் பெரும்பாலும்
பகல்,இரவு,எந்த நேரத்திலும் தாம்பத்தியம்
கொண்டுவிடுகிறார்கள்.
இதன் காரணமாக ஆண்கள்,பெண்கள் தேகம்
வெளுத்து ,வாடி,வருந்தி வலுவற்று விடுகின்றனர்.
ஆகாரம், மைதுனம் ,நித்திரை,பயம் இந்த
நான்கிலும் அதிக ஜாக்கிரதையாக இரு பாலரும்
இருத்தல் அவசியம்.இதில்
பாதிப்பு ஆண்களுக்கே அதிகம்.பகற்பொழுதில்
ஒருக்காலும் ஒன்று சேருவது கூடாது.இதனால்
ஆண்களின் வீரியம் பங்கம் உண்டாகும்,என்று
இராமலிங்க ஸ்வாமிகள் சொல்லியுள்ளார்
ஆகாரம் ,மைதுனம் ,ஆகிய இரண்டிலும் மிக்க
ஜாக்கிரதையாக இருத்தல் அவசியமாகும்.
இல்லை எனில் தேஹமானது அதி சீக்கிரத்தில்
கூற்றுவனுக்கு இரையாகிவிடும் என்றும்
இராமலிங்க ஸ்வாமிகள் கூறுகிறார்.
சுக்கிலமாகிய திரியை விசேஷமாக
தூண்டி ,அடிக்கடி சுக்கிலத்தை வீணே செலவு
செய்தால் ,திரியானது அணைந்து போய் ,ஆயுளாகிய
பிரகாசத்தை பாழ்படுத்திவிடும் ..960
நாழிகைக்கு ஒருமுறை தேக சம்பந்தம்
செய்து ஆபாசப்பட்ட
சுக்கிலத்தை வெளிப்படுதிவிடவேண்டும்
என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.60
நாழிகை என்பது ஒரு நாள் .960
நாழிகை என்பது 16 நாளாகும் இந்த
கணக்குப்படி மாதம்
இரண்டுமுறை மட்டுமே தனது நன்
மனையாளை மருவுதல் வேண்டும்.இதற்க்
கு மேற்படின், பல பிணிகளுக்கு உள்ளாக
நேரிடுமென்றும் ,ஆண்களுக்குரிய வீரியமும்,
விறைப்பும் குறைந்து தளர்ச்சி உண்டாகி உடல்
ரோகம் உண்டாகுமென்கிறது சாஸ்திரம்.பெண்க
ளுக்கு அடிக்கடி சேருவதால் கருப்பையில்
பிணி உண்டாகுமென்றும்,ருதுவில் பிரச்னையும்
எற்ப்படுமென்கிறது சாஸ்திரம்..
சுத்த இரத்தம் 60 துளிகள்
கொண்டது ஒரு துளி விந்துவாகும்.ஆண்கள்
வீரியத்தை பலமுறை வெளியேற்றினால்
அது எவ்வளவு இரத்தம் குறையுமென்று இதன்
மூலம் அறியலாம்.
இவ்வாறு அபரிமிதமான இத்தம்
குறையவே ஜீவாக்கினி குறைகிறது.ஜீவாக்கினி குறையவே தேக உறுப்புக்களின் சுபாவத்
தொழில் கெட்டு ,அதனால் தேஹம்
தளர்ந்து ,முகம்
வெளுத்து ,கண்ணின்தகுதி குறைந்து கண்பார்வை
மங்கி , ஜீரண சக்தி குறைந்து ,ஞாபக
சக்தி குறைந்து,மொத்தத்தில்
பலவீனமாகி ,கைகால்கள் நடுக்கம்,
மூட்டு வீக்கம் உண்டாகி,
நடைதளர்ந்து சோர்ந்து, பல தீராத
வியாதிகளுக்கு மனிதன் தள்ளப்படுகிறான் ..
எனவே தம்பதிகள் இந்த
நடைமுறையை கையாண்டால் தேக
சௌக்கியமுடன் நல்ல
குழந்தைகளை பெற்று வாழ்வில்
நலமடைவார்களென்று மனுஸ்மிர்தி கூறுகிறது.
குழந்தை குறையில்லாது பிறக்க திருமூலர்
சொல்லும் தகவல்!!!
---------------------------------------------
--------------------
“அரிது, அரிது மானிடராய் பிறத்தல் அரிது.
அதனினும் அரிது, கூன், குருடு, செவிடு
நீங்கி பிறத்தல் அரிது“ என்றார் தமிழ் மூதாட்டி
அவ்வை. இத்தகைய எல்லா நலத்துடன்
கூடிய குழந்தையை பெற்றெடுக்க சில
வழிமுறைகளை பின்பற்றினாலே போதும்
என்கிறார் திருமூலர்.( மேற்படி தகவல்களை
கூறிய சித்தர்களுள் மிகச்சிறந்தவரான
திருமூலர் 5,900 ஆண்டுகள், அதாவது கி.மு.6
ஆயிரம் முதல் கி.மு.100 வரையில்
வாழ்ந்ததாக கூறுகிறார்கள்)
ஒரு குழந்தை குறையுடன் பிறக்கிறது
என்றால் அதற்கு காரணம் ஆண்கள் தான்
என்கிறார் திருமூலர். தாம்பத்திய உறவின்
போது மன அமைதி, தெளிவு, விவேகம் இன்றி
மிருகத்தனமாக ஆண்கள் நடந்து கொண்டால்
குறைபாடுள்ள குழந்தை தான் பிறக்கும் என்று
கூறும் அவர், கணவன் ஆனவன், தனது வாயு
நிலையை அறிந்து, பொறுமை காத்து,
மனைவியுடன் கூடிக் குலாவி கலவி
செய்தால் இதனை தவிர்க்கலாம் என்றும்
கூறுகிறார்.
கணவனும், மனைவியும் கூடும் முறையால்,
எப்படிப்பட்ட குழந்தை பிறக்கிறது என்பதற்கு
திருமூலர் தரும் விளக்கம்......
மனைவியுடன் கணவன் உறவு
கொள்ளும்போது அவனது சுவாசமானது
சீரான அளவோடு பாய வேண்டும். அவ்வாறு
இருந்தால் பிறக்கும் குழந்தைக்கு உடல் குறை
எதுவும் இருக்காது.
உறவின் போது ஆணின் வலது நாசி வழியாக
சுவாசம் சென்றால் ஆண் குழந்தை உருவாகும்.
சுவாசம் இடது பக்கம் சென்றால் அது பெண்
குழந்தை உருவாக காரணமாகும். இரு நாசியின்
வழியாகவும் மூச்சு ஒரே மாதிரி வந்தால்
பிறக்கும் குழந்தை ஆணாகவும் இல்லாமல்,
பெண்ணாகவும் இல்லாமல் திருநங்கையாக
இருக்கும்.
ஆணின் சுவாசமானது அளவில் குறைந்து
போனால் பிறக்கும் குழந்தை குள்ள வடிவமாக
இருக்கும்.
சுவாசம் இயல்பான நிலையில் இல்லாமல்
இளைத்து வெளிப்படுமானால் பிறக்கும்
குழந்தை முடமாகும்.
சுவாசத்தின் அளவு குறைந்தும்,
திடமின்றியும் வெளிப்பட்டால் பிறக்கும்
குழந்தைக்கு கூன் விழும்.
இப்படி, தனது திருமந்திரத்தில் விளக்கம் தரும்
திருமூலர், ‘அந்த‘ உறவின்போது பெண்கள்
எந்த நிலையில் இருக்க வேண்டும்
என்பதையும் பட்டியலிடுகிறார்.
கூடலின்போது பெண்ணின் வயிற்றில் மலம்
சரிவர கழியாமல் தங்கி மிச்சம் இருந்தால்
பிறக்கும் குழந்தை மந்த குணம் கொண்டதாக
இருக்கும்.
இதுபோல், பெண்ணின் உடலில் சிறுநீர்
தங்கியிருந்தால் பிறக்கும் குழந்தை
ஊமையாகவும், மலம், சிறுநீர் இரண்டும்
சரியான அளவில் தேங்கி இருக்குமானால்
பிறக்கும் குழந்தை குருடாகும் என்கிறார்.
சரி... எந்த நிலையில் தான் நல்ல,
ஆரோக்கியமான குழந்தை பெற முடியும்
என்று கேட்கிறீர்களா? அதற்கு திருமூலரின்
பதில்.
தாம்பத்திய உறவின்போது ஆண் &பெண்
இருவரது மூச்சுக் காற்றும் ஒரே அளவாக
இருக்க வேண்டும். அவ்வாறு மூச்சு
வரும்போது வெளிப்படும் ஆணின் விந்து,
பெண்ணின் சுரோணிதத்துடன் (கருமுட்டை)
சேர்ந்து உண்டாகும் குழந்தையானது மிகுந்த
அழகினை உடையதாக இருக்கும். ஆண் தக்க
மூச்சுப்பயிற்சி பெற்றிருந்தால், அவன்
எண்ணும் விருப்பப்படி மூச்சினை அடக்கி,
கட்டுப்படுத்தி, தான் விரும்பும் வகையில்
மூச்சினை வெளியிடும் ஆற்றலை பெற
முடியும். அவ்வாறு இருக்கும் போது,
குழந்தையின் தோற்றத்திலும் தான்
விரும்பியதை ஒரு ஆண் சாதிக்க முடியும்.
இப்படி அறிவுரை வழங்கும் திருமூலர், அந்த
நேரத்திற்கு எப்படி தயாராவது என்பது
பற்றியும் கூறியுள்ளார்.
உறவு கொள்ளும் காலத்தை முன்னதாகவே
திட்டமிட்டு, கணவன், மனைவி இருவரும்
தங்களில் மலம், சிறுநீர் எதுவும் தங்காதபடி,
அவற்றை வெளியேற்றி விட வேண்டும்.
ஒருமித்த எண்ணத்துடன், படபடப்பு எதுவும்
இன்றி, உணவு உட்கொண்ட பின்னர், வயிற்றில்
அந்த உணவு ஜீரணமாகும் வரை காத்திருக்க
வேண்டும்.
தொடர்ந்து, காதல் இன்பம் பேசி, ஒருவரை
ஒருவர் தழுவி, தீண்டி, புற உடல் இன்பங்களை
துய்த்து, அதன் பின்னரே புணர்தல் வேண்டும்.
அப்போதும், மூச்சு படபடப்பாக வெளிப்படக்
கூடாது. இருவரும் சீரான அளவில் மூச்சை
வெளியிட வேண்டும். இதில் வேகம்
காட்டுவது வீண் கரு கலைதலுக்கு
ஏதுவாகும் என்கிறார் திருமூலர்.
குழந்தை பெற உடலுறவு கொள்ள வேண்டிய
நாள்கள்
மாதவிலக்கு வந்த நாளிலிலிருந்து 13, 14, 15
நாள்களில் உடலுறவு கொண்டால் மட்டுமே
குழந்தை பிறக்கும். இவையே கருத்தரிப்பிற்க
ு உரிய நாள்கள்.
திருமணம் முடிந்து நான்காண்டுகளாவத
ு குழந்தை பெறாது சுமையின்றி மகிழ்வாக
வாழ்ந்து பிறகு பெற்றுக் கொள்வது வாழ்வை
மகிழ்வாக்குவதற்கான வழி. கணவன் மனைவி
இடையே ஈர்ப்பு குறையாமலிருக்க இது
உதவும்.
ஆனால்,சில ஆண்கள் தன் ஆண்மையை
உலகுக்குக் காட்ட உடனே பெற எண்ணி
ஓராண்டிலே குழந்தை பெற்றுக் கொள்வர்.
சிலருக்கு திருமணமாகி சில ஆண்டுகள்
ஆகியும் குழந்தை பிறப்பதில்லை.
குழந்தை பிறக்காததற்கு பல காரணங்கள்
உண்டு. ஆண்களின் விந்தில், உயிரணு
இல்லாமல் இருத்தல் அல்லது உயிரணுக்களின்
எண்ணிக்கை குறைவாய் இருத்தல். பெண்ணின்
கருக்குழாயில் அடைப்பு அல்லது கருப்பை
பாதிப்பு.
பொதுவாக, குழந்தை இல்லை யென்றதும்
பெண்தான் காரணம் என்று ஆண் மறுமணம்
செய்து கொள்கிறான். இது தப்பு மட்டுமல்ல
குற்றமும் ஆகும்.
குழந்தை இன்மைக்கு பெண்ணைக் காட்டிலும்
ஆணே பெரும்பாலும் காரணம். எனவே,
இருவரும் சோதனை செய்து யாரிடம் குறை
என்று கண்டு அதைச் சரி செய்ய வேண்டும்.
பெரும்பாலும் சரி செய்துவிட முடியும். அந்த
அளவிற்கு மருத்துவம் வளர்ந்துள்ளது.
குழந்தை பெற உரிய நாட்களில் உடலுறவு
கொள்ளாமையும் குழந்தையின்மைக்கு ஒரு
காரணம். எனவே, அந்த நாள்களை அறிந்து
உடலுறவு கொள்ள வேண்டும்.
மாதவிலக்கு வந்த நாளிலிலிருந்து 13, 14, 15
ஆகிய மூன்று நாள்கள் உடலுறவு கொண்டால்
குழந்தை பிறக்கும். அதிலும் குறிப்பாக 14, 15
ஆகிய இரு நாள்களும் மிகச் சரியான நாள்கள்.
காரணம் 14, 15ஆம் நாள்களில்தான் பெண்ணின்
சினையணு கருவுற தயார்நிலையில்
இருக்கும்.
இந்த நாள்களுக்கு முன்னோ பின்னோ
உடலுறவு கொள்வதால் குழந்தை பிறக்காது.
இந்த உண்மை தெரியாததால் குழந்தை
பிறப்புத் தள்ளிப் போகிறது.
குழந்தை வேண்டாம் என்பவர்கள் மாத விலக்கு
வந்தபின் 11, 12, 13, 14, 15 ஆகிய நாள்களில்
உடலுறவு கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
14, 15ஆவது நாள்கள்தான் உரிய நாள்கள்
என்றாலும், 11, 12, 13 நாள்களில் உடலுறவு
கொள்ளும்போது வெளியேறிய விந்து
பெண்ணுருப்பில் ஓரிரு நாள்கள் உயிர்வாழும்.
அதிலுள்ள உயிரணு மூலம் குழந்தை பெற
வாய்ப்பு வரும். அதனால், 11, 12, 13 ஆகிய
நாள்களும் விலக்கப்பட வேண்டும்.
பருவமடைந்த ஒவ்வொரு ஆணும் பெண்ணும்
இதை அறிந்து வைத்திருக்க வேண்டியது
அவசியம்.
இந்த விவரம் அறிந்திருந்தால்
தேவையில்லாமல் பெண் கருவுறவும்,
கருக்கலைப்புச் செய்து உடல் பாதிக்கவோ
வேண்டிய நிலை வராது.
"உடல் உறவு மூலம் நல்ல குழந்தை
உண்டாக"
(நமது பாரம்பரிய ரகசியம்)
உடலுறவு மூலம் சிசு உண்டாக நல்ல
நேரங்கள்: கணவனும், மனைவியும் கூடிய
நேரம் சந்திர கலையாக இருந்தால் அந்தக் கரு
பெண் ஆகும்.சூரிய கலை நடக்கும் பொது
உடல் உறவு கொண்டால் அந்த கரு ஆண்
ஆகும்.
சுழிமுனை நடக்கும் போது
உறவுக்கொண்டால் குழந்தை ஆகாது
அமாவாசையன்று கருவானால் கருப்பு
நிறமாகவும்,ஆறு விரல் உள்ளதாகவும்
குழந்தை பிறக்கும்
தொலை தூரம் சென்று வந்த பொழுது
உறவுக்கொண்டு கருவானால் அந்தக் குழந்தை
அறிவில்லாத குழந்தை ஆகும்.
அமாவாசை கழித்து பிரதமையில் கரு
உண்டானால் பொய் பேசும் குழந்தை பிறக்கும்
அமாவாசைக்கு மூன்றாம் நாள் கருவானால்
அந்த குழந்தை நீண்ட நாள் வாழாது.
முழு நிலவுவில் உடலுறவு கொண்டு
கருவானால் முடமாகவும், தண்டியாகவும்
குழந்தை பிறக்கும்.யானை வடிவில் இருக்கும்.
முழுநிலவு கழித்துப் பிரதமையில்
கருவானால் சிறு வயதில் பல கண்டங்களைத்
தாண்டி, நீண்ட ஆயுள் உடையதாகக் குழந்தை
பிறக்கும்.
பதினைந்தாம் நாள் கூடிப் பிறந்த குழந்தை
பித்தம், கருங்குட்டம், வெண்குட்டம், பித்தம்,
முயலகம் என்னும் நோயால் பீடிக்கும்.
புணர்ச்சியின் போது பேசக்கூடாது.பேச
்சுக்களைப் பேசினால் குழந்தை அலியாகப்
பிறக்கும்.
பெண்ணை நிர்வாணமாக்கிப் புணர்ந்தால்
குழந்தை சோம்பேறியாகப் பிறக்கும்.
உடலுறவு கொள்ளும் பொழுது வேறு
பெண்ணை நினைத்து உடலுறவு கொண்டால்
அதற்குப் பிறக்கும் குழந்தை ஆறு அல்லது
நான்கு விரல் உடையாதகப் பிறக்கும்.
பிறைகண்ட 3,5,8,10ஆகிய நாள்களில் எந்த
உடலுறவும் கூடாது.வெள்ளிக்கிழமை
மூன்றாம் ஜாமத்தில் உடலுறவு கொண்டு
கருவானால்,மாறுகண் உள்ள குழந்தை
பிறக்கும்.
ஒரு பெண் மாத விளக்கு ஆகி மூன்றாம் நாள்
உடலுறவு கொண்டபோது கருவானால்
குழந்தை திருடனாகப் பிறக்கும்.
நான்காம் நாள் கூடிக் கருவானால் குழந்தை
வறுமையில் வாடும்.
ஐந்தாம் நாள் கூடிப் பிறக்கும் பிள்ளை
கல்வியில் சிறந்து விளங்கும்.
ஆறாம் நாள் கூடிக் கருவானால் பெரியோர்கள்
கருத்தைக் கேளாத குழந்தை பிறக்கும்.
ஏழாம் நாள் கூடிக் கருவானால் உண்மையை
பேசும்,ஈகை,இரக்கம்,நற்குணம் உடைய
குழந்தை பிறக்கும்.
எட்டாம் நாள் கூடிக் கருவானால் குழந்தை
தரித்திரத்தில் வாழும்.
ஒன்பதாம் நாள் கூடிக் கருவானால்
செல்வம்,வளம் நிறைந்து குபேரனாக வாழும்
குழந்தை பிறக்கும்.
பத்தாவது நாள் கூடிக் கருவானால் காமம்
மிகுந்து கெட்ட பழக்கம்,அவ மரணம் உள்ள
குழந்தை பிறக்கும்.
பதினொன்றாவது நாள் கூடிக் கருவானால்
நோயுள்ள குழந்தை பிறக்கும்.
பன்னிரெண்டாவது நாள் கூடிக் கருவானால்
பல கலைகளும், அறிவு நலன்களும் உள்ள
குழந்தை பிறக்கும்.
பதின்மூன்றாவது நாள் கூடிக் கருவானால்
அரசியல் ஞானம், வருங்காலத்தை உணரும்
விவேகம் உள்ள குழந்தை பிறக்கும்.
பதிநான்காம் நாள் கூடிக் கருவானால் உலக
இன்பங்களிலிலே திளைக்கின்ற யோகியாகக்
குழந்தை பிறக்கும்.
பதினைந்தாவது நாள் கூடிக் கருவானால் ஓர்
அரசனுக்கு ஒப்பான ஆற்றலும், நற்புகழும்
உள்ள குழந்தை பிறக்கும்.
பதினாறாவது நாள் கூடிக் கருவானால் பெரிய
ஞானியாகவும், யோகியாகவும், சித்தனாகவும்
ஆகக்கூடிய குழந்தை பிறக்கும்.
நன்றி

நைவேத்தியம்

நைவேத்தியம்
சிஷ்யன் ஒருவன் தன குருவிடம் ஒரு கேள்வி கேட்டான்.
‘’குருவே, நாம் படைக்கும் நைவேத்யத்தை இறைவன் அருந்துகிறார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இறைவன் சாப்பிட்டால் நாம் பிறருக்கு எப்படி பிரசாதமாக வழங்க முடியும்?
கடவுள் படையலை சாப்பிடுவாரா’’? என்று கேட்டான்.
குரு எதுவும் சொல்லாமல்,
அவனை ஊடுருவி பார்த்துவிட்டு ‘’நமது வேதாந்த வகுப்புக்கு நேரமாகி விட்டது. வகுப்பறையை தயார் செய். சிறிது நேரத்தில் நானும் வருகிறேன்” என்றார்.
அனைத்தும் பூர்ணமான வஸ்துவிலிருத்தே தோன்றியது என பொருள் கொண்ட “பூர்ணமிதம்” எனும் ஈஷாவாசிய உபநிஷத்தில் வரும் மந்திரத்தை விளக்கினார் குரு.
அனைத்து மாணவர்களும் மந்திரத்தை மனதில் உரு போட துவங்கினர்.
சிறிது நேரத்திற்கு பிறகு கேள்வி கேட்ட சிஷ்யனை சைகையால் அழைத்தார் குரு.
குருவின் முன் பணிவுடன் வந்து வணங்கி நின்றான்.
“எனதருமை சிஷ்யனே, மந்திரத்தை மனதில் ஏற்றி கொண்டாயா? ,” என்றார்.
“முழுமையாக உள்வாங்கி கொண்டேன் குருவே”.
“எங்கே ஒரு முறை சொல் பார்ப்போம்”
கண்கள் மூடி மனதை ஒருநிலைப்படுத்தி கணீர் குரலில் கூற துவங்கினான்..
” பூர்ண மித பூர்ண மிதம் ...” என கூறி முடித்தான்.
மெல்ல புன்சிரிப்புடன் குரு தொடர்ந்தார்..
“நீ சரியாக மனதில் உள் நிறுத்தியதாக தெரியவில்லையே.. எங்கே உனது புத்தகத்தை காட்டு”
பதட்டம் அடைந்த சிஷ்யன், புத்தகத்தை காண்பித்து கூறினான்
“ குருவே தவறு இருந்தால் மன்னியுங்கள்.
ஆனால் நான் கூறியது அனைத்தும் இதில் இருப்பதை போலவே கூறினேன்...”
“இந்த புத்தகத்திலிருந்து படித்துதான் மனதில் உள்வாங்கினாயா?
இதிலிருந்து உள்வாங்கினாய் என்றால் மந்திரம் இதில் இருக்கிறதே?
நீ உன் மூளையில் மந்திரத்தை ஏற்றி கொண்டால் புத்தகத்தில் இருக்க கூடாதல்லவா?”
சிஷ்யன் குழப்பமாக பார்த்தான்.
குரு தொடர்ந்தார்,
‘’உனது நினைவில் நின்ற மந்திரம் சூட்சம நிலையில் இருக்கிறது.
புத்தகத்தில் இருக்கும் மந்திரம் ஸ்தூல வடிவம்.
இறைவன் சூட்சம நிலையில் இருப்பவன்.
இறைவனுக்கு படைக்கப்படுவது ஸ்தூல வடிவில் இருந்தாலும் அவன் சூட்சமமாகவே உட்கொள்கிறான்.
நீ உள்வாங்கிய பின் புத்தகத்தில் மந்திரம் அளவில் குறைந்துவிட்டதா?
அது போலதான் இறைவன் உட்கொண்ட பிரசாதம் அளவில் குறையாமல் நாம் எல்லோரும் உண்கிறோம்.
ஸ்தூலமாக இருக்கும் நாம் ஸ்தூலமாகவும், சூட்சுமமாக இருக்கும் இறைவன் சூட்சுமமாகவும் நைவேத்யத்தை உட்கொள்கிறோம். ”
தனது பக்தியற்ற தர்க்கம் செய்த அறியாமையை குருவிற்கு நைவேத்யம் செய்து முழுமையடைந்தான் சிஷ்யன்

Wednesday, January 20, 2016

மனக்குழப்பம் அகல எளிய பரிகாரம் !!

மனக்குழப்பம் அகல எளிய பரிகாரம் !!

ஜாதகத்தில் சந்திரன் பலம் குறைந்து அல்லது பகை கிரஹத்துடன் இருந்தால், மனக்குழப்பம் அதிகம் இருக்கும். அவ்வாறு அமைந்தவர்கள், பௌர்ணமி அன்று சந்திரனை தரிசித்து வணங்கி, 'ஓம் சந்திராய நமஹ' என்று ஒன்பது முறை சொல்வது நல்லது.
மேலும், சந்திரனுக்குரிய பச்சரிசியில் சாதம் வடித்து, தானும் சாப்பிட்டு, தன்னைச் சார்ந்தவர்களும், தான் வளர்க்கும் விலங்குகளுக்கும் அளித்து சாப்பிடச் சொல்வது நல்லது. திங்கட்கிழமை தோறும் செய்யலாம்!.
கடக ராசியில் பிறந்தவர்கள், இரண்டாம் எண்ணில் பிறந்தவர்கள், திங்கட்கிழமை பிறந்தவர்கள் ஆகியோர் முத்து மாலை, மற்றும் முத்து மோதிரம் அணியலாம். இதனால், சந்திர பகவான் அருளும், மனச்சாந்தியும் கிட்டும்!

வேதாந்தம் ஓர் அறிமுகம்!

வேதாந்தம் ஓர் அறிமுகம்!
=========================
வேதம் ஓர் அறிவுக்களஞ்சியம். ஆதி ரிஷிகளின் மூலமாக இறைவனால் வெளிப்படுத்தப்பட்டதே வேதம் என்று, ரிஷிப் பரம்பரையில் வந்தோர் வேதத்தை பார்க்கின்றனர்.
நாம் வாழ்வில் எவற்றையெல்லாம் அடையலாம் என்ற நம் இலட்சியங்களை பற்றிய அறிவைக் கொடுத்தும் அந்த இலட்சியங்களை அடைவதற்கான பாதைகளின் அறிவைக் கொடுத்தும் நம்முடைய வாழ்வை வேதமானது பயனுடையதாக்குகின்றது.
நம்முடைய அனைத்து இலட்சியங்களையும் நான்காகப் பிரிக்கப்படுகின்றன.
1. அர்த்தம்
2. காமம்
3. தர்மம்
4. மோட்சம்
அர்த்தம் என்பது நம்முடைய பாதுகாப்பிற்காக பயன்படும் பொருட்கள். உடலும் மனமும் வருத்தமடையாமல் இருக்க நாம் சேர்க்கும் உடமைகள் அர்த்தம் எனப்படும். மனிதனின் மனதில் உதிக்கும் முதல் இலட்சியம் இதுவே.
காமம் என்பது இன்பத்திற்காக பயன்படும் பொருட்கள். உடலும் மனமும் இன்புற்றிருக்க நாம் சேர்க்கும் பொருட்கள், அல்லது செயல்கள் காமம் எனப்படும்.
தன்னுடைய பாதுகாப்பிற்கு பின் மனமும், உடலும் விரும்பும் விஷயம் காமம் ஆகும். உதாரணமாக பசியை நீக்க நாம் நாடும் உணவுப் பொருட்கள் அர்த்தம் என்றால், சுவைக்காக நாடும் உணவுப் பொருட்கள் காமம் எனலாம்.
தர்மம் என்பது புண்ணியம். கண்ணிற்கு தெரியாத இந்தப் புண்ணியமானது வேதத்தில் கூறிய கர்மங்களை செய்வதாலும், வேத சாஸ்திரத்திற்கு முரண்படாத செயல்களை செய்வதாலும் அடையப்படுகின்றது. அதாவது இந்த வாழ்விலும், இனி வரப்போகும் வாழ்விலும் துயரத்தினை நீக்கி இன்பத்தை அடைய புண்ணியம் பயன்படுகின்றது.
வேதத்தினை இரண்டு பிரிவுகளாக பிரித்து, அதன் முதல் பகுதிகளை கர்மகாண்டம் என்றும், அதன் பிற்பகுதிகளை ஞான காண்டம் அல்லது வேதாந்தம் என்றும் அழைக்கின்றனர்.
இதில் கர்மகாண்டம் என்பது மனிதன் அவனது வாழ்வில் அர்த்த, காம, தர்மங்களை அடையப் பலவிதமான உபாயங்களை கூறுகின்றது.
உபாயங்களை கூறியபோதிலும் அதே வேதம் இறுதியில் ஞான காண்டத்தில் இந்த மூன்றிலும் உள்ள குறைபாடுகளையும் எடுத்துக் காட்டுகின்றது.
இந்த மூன்றின் மூலமாகவும் மனிதன் இன்பத்தினை அடைய நாடிக்கொண்டு இருக்கின்றார்கள். இன்பமே மனிதனின் முடிவான இலக்காக இருக்கும் பொழுது இன்பத்தில் உள்ள குறைகளை இவ்விதம் வேதம் கூறுகின்றது.
1. ஒவ்வொரு இன்பத்திலும் துன்பம் கலந்தே உள்ளது. இன்பத்தை தரும் பொருளை அடைதல், அவற்றை பாதுகாத்தல், பிறகு அவற்றின் இழப்பு முதலிய காரணங்களால் அனைத்து இன்பங்களும் துயரத்தில் கலந்ததாகவே இருக்கின்றன.
2. எந்த இன்பமும் மனதில் முழு நிறைவைக் கொடுப்பதில்லை.
3. அனைத்து இன்பங்களும் பொருள்களைச் சார்ந்து இருக்கச் செய்து நம்மை அடிமையாக்குகின்றன.
இவ்விதம் நமக்கு அதில் உள்ள குறைகளைக் காட்டி, நிலையற்ற இந்த இன்பத்தினால் ஒரு பயனும் இல்லை, நிலையான, என்றுமே வற்றாத பேரின்பம் உள்ளது என்று நமக்கு மோட்சத்தின் பாதையை காட்டித்தருகின்றது.
உண்மையில் மோட்சம் என்பதுதான் மனிதனின் மேலான இலட்சியம் என்று நமக்கு வேதம் அறிவுரை வழங்கி அதனை அடையும் பாதையை கூட காட்டிக்கொடுக்கின்றது.
இதனால் நாம் மோட்சம் செல்லும் பாதையில் நம் பயணத்தினை தொடங்கியவுடன் நமக்கு முழு மன நிறைவை கொடுத்து, அதன் மூலம் அர்த்த, காம தர்மங்களுக்கு நாம் அடிமைப்படாமல், அவைகள் தேவை என்ற நிபந்தனையிலிருந்து விடுபடுகின்றோம்.
அவைகள் நமக்கு ஆடம்பர பொருட்கள் என்ற ஞானத்தை கொடுத்து, எந்த நிபந்தனையுமின்றி மனதில் நம்மால் அறியப்படும் நிறைவே மோட்சமாகின்றது.
மோட்சமே வேதத்தின் கடைசிப் பகுதியிலிருந்து கிடைக்கும் அறிவின் பலன்.
வேதத்தின் கடைசிப் பகுதியானது வேதாந்தம் எனப்படுகின்றது. இதனை ஞானகாண்டம், உபநிஷத் என்றெல்லாம் அழைக்கப்படுகின்றது.
வேதத்தின் கடைசிப்பகுதியானதால் வேதாந்தம் என்றும், மெய்பொருளைப் பற்றிய அறிவை மையமாகக் கொண்டதால் ஞானகாண்டம் என்றும், ஸம்ஸாரத்தை (ஆணவம், கன்மம், மாயை) நீக்கும் மெய்பொருளைப் பற்றிய ஞானம் என்ற பொருளைக் கொண்டதால் உபநிஷத் என்றும் பொருள் கொள்ளப்படுகின்றது.
மோட்சம் என்ற இலட்சியத்தினை அடைவதற்கு ஒருவனுடைய உண்மையான தன்மையை வேதாந்தம் எடுத்து விளக்குகின்றது.
எப்பொழுதும் பந்தப்படாத தன் உண்மையான ஆத்ம ஸ்வரூபத்தை அறிவதன் மூலமே மோட்சத்தினை அடைய முடியும் என்பதால் ஆத்மஞானம் உபாயமாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆத்ம ஞானத்தை நமக்கு கொடுக்க வேதாந்தம் சில வழி முறைகளைக் கையாளுகிறது. குருவின் துணை கொண்டு வேதாந்தத்தினை நாம் பயன் படுத்தும் பொழுதுதான் நாம் முழுப்பலனை அடைய முடியும்.
ஆகவே ஞானத்திற்கு கருவியாக விளங்கும் வேதாந்தம் எவ்வளவு முக்கியமோ அதே அளவு குருவும் முக்கியமானவர்.
இன்றைய நவீன கல்வித்திட்டத்தின் வழியாக மனிதனின் அர்த்த, காம, தர்மம் போன்ற நிலையற்ற இன்பம் கிடைத்தாலும், நிலையான பேரின்ப மயமான மோட்சம் என்பது பெரும்பாலான மனிதர்களுக்கு கிடைப்பதே இல்லை.
அவர்களுக்கு அதைப்பற்றிய ஞானம் கூட இல்லை என்றால், அது மிகையாகாது. ஆகவே இன்றைய நவீன தொழில் நுட்பங்களுக்கு இடையில் வாழும் மனிதனுக்கு குருகுலக் கல்வி முறை சாத்தியமில்லாமல் போய்விட்டது. அப்படியே சாத்தியமானாலும் இன்றைய நவீன யுகத்தில் பொருளாதரத்தின் ஆதிக்கத்தின் நடுவில் அவன் வாழவும் முடியாது.
ஆனாலும், இத்தகைய கடுமையான சூழலிலும் சில மனிதர்கள் தன்னுடைய உண்மையான இலட்சியத்தினை உணர்ந்து அதன் பாதையில் செல்ல முடிந்தவரை இந்த மனித சமுதாயத்தில் போராடுவதால், அவர்களுக்கு பயன் படும் என்ற உயரிய நோக்கத்தில் குருமார்களும் நவீன தொழில் நுட்பங்களின் வாயிலாகவே ஆர்வமுள்ளவர்களுக்கு ஆன்லைனில் உபதேசிக்கின்றார்கள்.
அதுபோன்ற ஒரு முயற்சியின் காரணமாக இந்த “பரா வித்யா” என்ற முக நூலின் வாயிலாக மனிதன் அந்த உயர் ஞானத்தினை அடையட்டும் என்று இங்கு “பரமனை அறியும் பாடம்” போதிக்கப்படுகின்றது.
இந்த முக நூலில் வெளியிடப்படுகின்ற ஆடியோ, வீடியோ பாடங்களை தவறாமல் கேட்டும், பார்த்தும், படித்தும் பயன் பெற வேண்டும் என்ற ஆர்வமுள்ள ஒவ்வொரு பாமரனும் பரமன் ஆகலாம்.

பிரம்மஹத்தி தோஷம் என்ன செய்யும்?

பிரம்மஹத்தி தோஷத்தின் முழுப்பரிமாணம்
பிரம்மஹத்தி தோஷம் எதனால் ஏற்படுகிறது?
1.பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிறேன் என வாக்குகொடுத்து செய்யாமல் இருத்தல்
2.பலரின் உழைப்பை உறிஞ்சி,அதற்குரிய சம்பளம் தராமல் இருப்பது
3.குருவுக்கு தட்சிணை தராமல் இருப்பது
4.குருவின் கொள்கைபிடிக்காமல் தானே குருவாக மாறுவது
5.வெள்ளிக்கிழமைகளில் நல்ல பாம்பைக் கொன்றுவிடுவது
6.உங்கள் மீது தனக்கிருக்கும் ஆசையை வெளிப்படுத்தியும்,அந்த ஆசையை நிறைவேற்றாமலிருப்பது(ஆணாக இருந்தாலும்,பெண்ணாக இருந்தாலும்)
பிரம்மஹத்தி தோஷம் என்ன செய்யும்?
1.வருடக்கணக்கில் மனக்குழப்பம் இருக்கும்
2.தவறே செய்யாமல் தண்டனை கிடைக்கும்
3.மருத்துவத்திற்குக்கட்டுப்படாத நோய் வரும்
4.தொழிலில் திடீர் சரிவு அல்லது வீழ்ச்சி ஏற்படும்
5.திருமணம் தள்ளிப்போகும் அல்லது நடக்காது
6.குழந்தைப்பாக்கியம் இல்லாமல் அல்லது தாமதம்

நம் உடலில் பல்லி எங்கே விழுந்தால் என்ன அர்த்தம் என்று தெரியுமா?


நம் உடலில் பல்லி எங்கே விழுந்தால் என்ன அர்த்தம் என்று தெரியுமா?



இந்திய புராணத்தின் படி, மிருகங்கள் என்பது என்றுமே ஒரு நல்ல இடத்தை பிடித்துள்ளது. ஆனால் அதில் நமக்கு மிகவும் பிடிக்காத ஒன்று உள்ளது என்றால் அது தான் வீட்டில் காணப்படும் பல்லி. ஊர்ந்து செல்லும் உயிரின வகைகளில் நாம் அதிகமாக வெறுப்பது இந்த வீட்டு பல்லியாக தான் இருக்கும்.

அப்படி நாம் வீட்டில் பல்லியை பார்க்கும் போது, நாம் உடனே கொடுக்கும் ரியாக்ஷன் - அருவருப்பாக உணர்வது. அதோடு நில்லாமல் அதனை விரட்டுவதில் குறியாக இருப்போம். ஆனால் நம் பண்டைய இந்திய புராணத்தில் இதற்கனவே ஒரு படிப்பு இருந்தது உங்களுக்கு தெரியுமா? அது தான் பல்லி சாஸ்திரம்.

பல்லி என்பது கேதுவை குறிக்கிறது. கேது என்பது ஸ்வரபானு அசுரனின் உடலாகும். அவனுடைய தலையை வெட்டியது விஷ்ணு பகவானாகும். பல்லி கத்துவது முதல், அது நம் உடலில் எங்கே விழுகிறது என்பது வரை பல முக்கியத்துவத்தை கொண்டுள்ளது.

ஒவ்வொன்றும் ஓர் அர்த்தத்தை நமக்கு எடுத்துக்காட்டுகிறது. தீபாவளியன்று வீட்டில் பல்லியை காணவில்லை என்றால் வெளிச்சங்களின் பண்டிகையான தீபாவளி முழுமை பெறுவதில்லை. தீபாவளி அன்று பல்லியை காண நேர்ந்தால் குடும்பத்திற்கு செல்வமும் வளமும் வந்து சேரும் என நம்பப்படுகிறது.

பல்லி தலையில் விழுவதன் அர்த்தம்

பல்லி ஒருவரின் தலையில் விழுந்தால், வரப்போகும் கெட்ட நேரத்திற்கு அவர் தன்னை தானே தேற்றிக் கொள்ள வேண்டும். இவர்களுக்கு மற்றவர்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு, அலைக்கழிக்கப்பட்ட மன நிம்மதி அல்லது குடும்பத்தில் மரணம் ஏற்படலாம். ஆனால் தலையில் விழுவதற்கு பதிலாக முடியின் மீது விழுந்தால் ஏதோ வகையிலான நன்மை கிட்டும்.

முக பகுதியில் புருவம், கன்னத்தில் விழுந்தால்

ஒருவரின் முகத்தில் பல்லி விழுந்தால், சீக்கிரமே உங்கள் வீட்டு கதவை உறவினர் தட்டலாம். உங்கள் புருவத்தின் மீது விழுந்தால், ராஜ பதவியில் இருப்பவரிடம் இருந்து உங்களுக்கு உதவி கிடைக்கும். ஆனால் அதுவே உங்கள் கன்னம் அல்லது கண்களில் விழுந்தால், ஏதோ ஒன்றுக்காக நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள்.

இடது கை அல்லது வலது கையில் விழுந்தால்..

இடது கையின் மீது பல்லி விழுந்தால், உங்களுக்கு சந்தோஷங்கள் கிடைக்கும். இதுவே வலது கை என்றால் உங்கள் உடல்நலம் பெருவாரியாக பாதிக்கப்படும்.

பாதத்தில் அல்லது பிறப்புறுப்பில் விழுந்தால்.

பாதத்தில் பல்லி விழுந்தால் வருங்காலத்தில் பயணம் மேற்கொள்வீர்கள். பிறப்புறுப்பின் மீது விழுந்தால் கஷ்டகாலம் மற்றும் வறுமையை அது குறிக்கும்.

வலது மணிக்கட்டு, தொப்புள், தொடையில் விழுந்தால்

வலது மணிக்கட்டில் விழுந்தால், ஏதோ வகையில் பிரச்சனை எழலாம். பல்லி விழும் இடம் உங்கள் தொப்புள் என்றால் உங்களுக்கு மதிப்புமிக்க கற்களும், ரத்தினங்களும் கிடைக்கும். மறுபுறம், அது உங்கள் தொடையில் விழுந்தால் உங்கள் பெற்றோருக்கு நீங்கள் வருத்தத்தை ஏற்படுத்துவீர்கள்.

- See more at: http://www.manithan.com/news/20160119118429#sthash.h8jTxOft.dpuf

எதிர்மறை சக்தியை விரட்டும் உப்பு நீர் பரிகாரம்

எதிர்மறை சக்தியை விரட்டும் உப்பு நீர் பரிகாரம்

தொடர்ந்து துரத்தும் எதிர்மறை எண்ணங்கள், கோபம் அல்லது அதுபோன்ற வேறு உச்சக்கட்ட உணர்ச்சிகள் மனஅழுத்தம், திடீர் உடல்நலக்கோளாறு, திருஷ்டியால் ஏற்படும் பல கஷ்டங்கள், செய்வினை கோளாறுகள் போன்ற துன்பங்கள் நம்மை துரத்தும் போது கீழ்கண்ட பரிகாரத்தை பின்பற்றி பலன் பெறலாம்...
இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்து வந்தால் அனைத்து கஷ்டங்களும் விலகி ஓடும். மிகவும் சக்தி வாய்ந்த பரிகாரம். இதை தினமும் செய்யலாம்...
இந்த பரிகாரம் செய்ய தேவையான பொருட்கள் :
ஒரு பெரிய வாளி
தண்ணீர்
ஹிமாலயன் ராக் சால்ட் (himalayan rock salt) 1 பாக்கெட்
செய்முறை :
வாளியில் 1 பாக்கெட் ஹிமாலயன் ராக் சால்ட்டை (himalayan rock salt) கொட்ட வேண்டும். நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு கால்களை வாளியின் உள்ளே விட்டு முட்டிக்கு சற்று கீழே வரை தண்ணீர் ஊற்ற வேண்டும். கால்களை தண்ணீரில் வைத்தபடி சிறிது நேரம் கண்களை மூடி அமர வேண்டும். பின்னர் மனதில் ‘என் உடம்பில் மனதில் உள்ள அனைத்து எதிர்மறை சக்திகளும் வெளியேற வேண்டுமென’ பிரார்த்திக்கொண்டே இரண்டு கால்களை நன்றாக கால் பாதங்களால் தேய்த்து சுத்தப்படுத்த வேண்டும். இவ்வாறு மனதில் நினைத்தபடி 15 நிமிடம் கால்களை தேய்க்க வேண்டும். 15 நிமிடம் செய்த பின்னர் தண்ணீரை பார்த்தால் சிலருக்கு தண்ணீர் மிகவும் கருப்பாக மாறியிருக்கும்.
சிலருக்கு தண்ணீரில் நாற்றம் எடுக்கும், சிலருக்கு ஏதும் இல்லாமலும் போகலாம். சிலர் இதை செய்து முடித்ததும் மிகவும் களைப்பாக உணருவார்கள். இது உங்களை சுற்றி இருந்த எதிர்மறை சக்திகள் விரட்டி அடிக்கப்பட்டிருப்பதை குறிக்கும். இதை தினமும் தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் வாழ்க்கையில் நல்ல செயல்கள் நடக்க ஆரம்பிக்கும். ஹிமாலயன் ராக் சால்ட்டை (himalayan rock salt) கிடைக்காதவர்கள் கவலைப்பட வேண்டாம். இந்துப்பு மற்றும் கல் உப்பு அல்லது கடல் உப்பை பயன்படுத்தலாம். ஹிமாலயன் ராக் சால்ட்டை பயன்படுத்தும் போது 100%மும், மற்ற உப்பு பயன்படுத்தும் போது 60%மும் பலன் கிடைக்கும்.

நாத்திகம், பகுத்தறிவு பற்றி கவிஞர் கண்ணதாசன்.

நாத்திகம், பகுத்தறிவு பற்றி கவிஞர் கண்ணதாசன்.
ஈ வே ரா சேலத்தில் நடத்தியது போல் சென்னையிலும் ஒரு ஆபாச ஊர்வலம் நடத்த முயன்ற போது கண்ணதாசன் அவர்களால் எழுதப்பட்ட கட்டுரை இது. இதை தொடர்ந்து அந்த அந்த ஆபாச ஊர்வலம் கைவிடப்பட்டது.
கவிஞர் கண்ணதாசனின் எண்ணங்கள் ஆயிரம் என்ற நூலிலிருந்து!!!!!!!!!!!!!!!!!!!!
நான் ஒரு இந்து. இந்து என்பதில் நான் பெருமைப்படுகிறேன்.நான் எல்லா மதத்தினரையும் மனமார நேசிக்கிறேன்; ஆனால் இந்துவாகவே வாழ விரும்புகிறேன். நான் கடவுளை நம்புகிறேன்; அவனைக் காட்டியவனைப் போற்றுகிறேன்; அந்தக் கடவுளைக் கல்லிலும் கருத்திலும் கண்டு வணங்குகிறேன்.
ஆன்மா இறைவனோடு ஒன்றிவிடும்போது, அமைதி இருதயத்தை ஆட்சி செய்கிறது.
நாணயம், சத்தியம், தர்மம் இவற்றின் மீது நம்பிக்கை பிறக்கிறது.
நேரான வாழ்க்கையை இருதயம் அவாவுகிறது.
பாதகங்களை, பாவங்களை கண்டு அஞ்சுகிறது.
குறிப்பாக ஒரு இந்துவுக்குத் தன் மத அமைப்பின் மூலம் கிடைக்கும் நிம்மதி, வேறு யாருக்கும் கிடைப்பதில்லை.
கடைசி நாத்திகனையும், அது ஆத்திகன் என்றே அரவணைத்துக் கொள்கிறது.
என்னை திட்டுகிறவன்தான் அடிக்கடி நினைத்துக் கொள்கிறான்; ஆகவே அவன்தான் முதல் பக்தன்” என்பது இறைவனின் வாக்கு.
இந்து மதத்தைப்போல் சகிப்புத்தன்மை வாய்ந்த மதம் உலகில் வேறு எதுவும் இல்லை .
நீ பிள்ளையாரை உடைக்கலாம்; பெருமாள் நாமத்தை அழிக்கலாம்; மதச்சின்னங்களை கேலி செய்யலாம்; எதைச் செய்தாலும் இந்து சகித்துக் கொள்கிறான்.
ஏதோ பரம்பரையாகவே பகுத்தறிவாளனாகப் பிறந்தது போல் எண்ணிக் கொண்டு, பாத்திரத்தை நிரப்புவதற்காகவே சாஸ்திரத்தைக் கேலி செய்யும் பகுத்தறிவுத் தந்தைகள் இஸ்லாத்தின் மீதோ, கிறிஸ்துவத்தின் மீதோ கை வைக்கட்டும் பார்க்கலாம்.
கடந்த நாற்பது வருசங்களில் ஒரு நாளாவது அதற்கான துணிவு ஏற்பட்டதாக தெரியவில்லையே!
பாவப்பட்ட இந்து மதத்தை மட்டுமே தாக்கித் தாக்கி, அதை நம்புகிற அப்பாவிகளிடம் ‘ரேட்டு ‘ வாங்கிச் சொத்துச் சேர்க்கும் ‘பெரிய ‘ மனிதர்களைத்தான் நான் பார்த்திருக்கிறேன்.
அவர்கள் பேசுகிற நாத்திக வாதம், அவர்கள் ‘குடும்பம் நடத்தும் வியாபாரம்’ என்பதை அறியாமல், வாழ்கையையே இழந்து நிற்கும் பல பேரை நான் அறிவேன்.
பருவ காலத்தில் சருமத்தின் அழகு மினுமினுப்பதைப் போல், ஆரம்ப காலத்தில் இந்த வாதத்தைக் கேட்டு ஏமாந்தவர்களில் நானும் ஒருவன்.
நடிகையின் ‘மேக் அப்’ பைக் கண்டு ஏமாறுகிற சராசரி
மனிதனைப்போல், அன்று இந்த வாதத்தைக் கேட்டு ஏமாந்தவர்களில் நானும் ஒருவன்.
அந்த கவர்ச்சி எனக்கு குறுகிய காலக் கவர்ச்சியாகவே இருந்தது இறைவனின் கருணையே!
என்னை அடிமை கொண்ட கண்ணனும், ராமனும் இன்று சந்திர மண்டலத்துக்குப் பயணம் போகும் அமெரிக்காவையே அடிமைக்கொண்டு, ஆன்மீக நெறியில் திளைக்க வைத்திருக்கிறார்கள்.
அமெரிக்காவை விடவா ஈரோடு பகுத்தறிவில் முன்னேறிவிட்டது?
வேண்டுமானால் ‘பணத்தறிவில் ‘ முன்னேறிவிட்டது என்று சொல்லலாம்.
ஆளுங் கட்சியாக எது வந்தாலும் ஆதரித்துக் கொண்டு, தன் கட்சியும் உயிரோடிருப்பதாகக் காட்டிக் கொண்டு, எது கொடுத்தாலும் வாங்கிக் கொண்டு வாழ்கையை சுகமாக நடத்துவதற்கு, இந்த நாத்திக போலிகள் போட்டிருக்கும் திரை, பகுத்தறிவு!
உலகத்தில் நாத்திகம் பேசியவன் தோற்றதாக வரலாறு உண்டே தவிர, வென்றதாக இல்லை.
இதை உலகமெங்கும் இறைவன் நிரூபித்துக் கொண்டு வருகிறான்.
அவர்கள் எப்படியோ போகட்டும்.
இந்த சீசனில் வாழ்ந்து கொண்டிருக்கும் சில மனிதர்கள் கோவில்களுக்கு முன்னால் பகுத்தறிவு விளையாட்டு விளையாடிப் பார்க்கலாம் என்று கருதுகிறார்கள். இதை அனுமதித்தால், விளைவு மோசமாக இருக்கும்.
நம்பிக்கை இல்லாதவன் கோவிலுக்கு போக வேண்டாம்.
நம்புகிறவனை தடுப்பதற்கு அவன் யார்?
அப்பாவி இந்துக்கள் பேசாமல் இருக்க இருக்கச் சமுதாய வியாபாரிகள் கோவிலுக்கு முன் கடை வைக்க தொடங்குகிறார்கள்
.
வெள்ளைக்காரனின் கால்களை கட்டிப்பிடித்துக் கொண்டு ‘போகாதே போகாதே என் கணவா ‘ என்று பாடியவர்களுக்கு நாட்டுப் பற்று எங்கிருந்து வரும்?
நாட்டு பற்று இல்லாதவர்களுக்கு தெய்வப் பற்று எங்கிருந்து வரும்?
தெய்வப் பற்று இல்லாதவர்களுக்கு நாணயம், நேர்மை இவற்றின் மீது நம்பிக்கை எங்கிருந்து வரும்?
இந்த நாலரை கோடி (அன்று) மக்களில் நீங்கள் சலித்துச் சலித்து எடுத்தாலும், நாலாயிரம் நாத்திகர்களைக் கூட காண முடியாது.
பழைய நாத்திகர்களை எல்லாம் நான் பழனியிலும், திருப்பதியிலும் சந்தித்துக் கொண்டிருக்கிறேன்!
ஆகவே இந்த காரியங்களுக்கு யாரும் துணை வர மாட்டார்கள்

குருமார்கள் ஏன் ஆடம்பரமாக இருக்கிறார்கள்?

விமானத்தில் பயணம் செய்கிறார்கள், தொலைக்காட்சியில் தலைகாட்டுகிறார்கள் என்று குருமார்களை சாடி ஒருவர் கேள்வி எழுப்ப, அதற்கு சத்குரு அளித்த பதில் இந்தப் பதிவில்… கேள்வி சில குருமார்கள் தொலைக்காட்சியில் ஏன் அடிக்கடி தலைகாட்டுகிறார்கள்? குளிரூட்டப்பட்ட அறை, விமானப் பயணம் என்றெல்லாம் ஏன் இவ்வளவு ஆடம்பரமாக வாழ்கிறார்கள்? சத்குரு: தொலைக்காட்சி என்பது தொழில் திறனின் முன்னேற்றம். மருத்துவர்கள், பொறியாளர்கள் போன்றவர்கள் மட்டுமே அதைப் பயன்படுத்த வேண்டுமா? துறவிகள் தங்கள் வேலையை மேம்படுத்திக் கொள்ள பயன்படுத்தக் கூடாதா? லட்சம் பேர் கூடியிருக்கும் இடத்தில், தொழில்திறனைப் பயன்படுத்தி மைக்கில் பேசாமல் குரு எப்படிப் பேச வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? நீங்கள் படிக்கும் இந்தக் காகிதத்தில் அச்சாவது கூட தொழில் திறன்தான். குருவிடம் சென்று குருகுல வாழ்க்கை வாழ நீங்கள் தயாரா? துறவிகளும், குருமார்களும் நடந்துதான் போக வேண்டும் என்று நினைக்கிறீர்களா? மாட்டு வண்டியில் பயணம் செய்து ஓரிடத்தை அடைவதற்கு மிகுந்த காலம் பிடிக்கும் என்பதற்காக விமானத்தில் பயணம் செய்வது தவறாகுமா? அட, மாட்டு வண்டி என்பது கூட ஒருவிதத் தொழில் திறன் தானே. வருடத்திற்கு நான்கு முறை வகுப்பெடுப்பதற்கு வெளிநாடுகளுக்கு செல்ல நேர்கிறது. விமானம் இன்றி இது எப்படி சாத்தியம்? வாழ்நாள் மிகக் குறுகியது. வாழ்நாள் முடிவதற்குள் அதை எவ்வளவு ஆழமாக அழுத்தமாக வாழ்கிறோம் என்பதே முக்கியம். எவ்வளவு தூரம் மற்றவர்களுக்குப் பயன்பட முடியும் என்று வாழ்வைப் பற்றிய சிந்தனை உள்ளவர்கள், அதற்காக சில வசதிகளைப் பயன்படுத்திக் கொள்வதை ஆடம்பரம் என்று எப்படி அர்த்தம் செய்துகொள்ள முடியும்? குரு என்றால் காற்று வராத குகையில் அமர்ந்திருக்க வேண்டும் என்பது உங்கள் எதிர்பார்ப்பா? அவ்வளவு பழமையானவரா நீங்கள்? கற்காலத்தை விட்டு விலகி வாருங்கள். வாழ்வை வளர்ச்சியாகப் பார்க்கக் கற்றுக் கொள்ளுங்கள். கேள்வி அன்புக்கும் பரிவுக்கும் வித்தியாசம் இருக்கிறதா? சத்குரு: பரிவு என்பது பொங்கி வரும் வெள்ளத்தைத் துணியால் தடுக்கப் பார்ப்பது போலாகும். வெகு சீக்கிரமே அது வேலை செய்யாது என்பதை உணர நேரிடும். பரிவாக இருக்கச் சொல்லி உங்களுக்கு யாரோ போதித்தார்கள். தொடர்ந்து பரிவாகவே இருக்க முயற்சி செய்தால், நீங்கள் ஒரு கட்டத்தில் சலிப்படைவீர்கள். வெறுப்பின் உச்சத்தில், பரிவு காட்டப்பட வேண்டிய தருணத்தில், உங்களுக்குக் கொலைவெறி கூட வந்து விடக்கூடும். அன்பையும் ஆனந்தத்தையும் பற்றி அறியாதவர்கள் தான் பரிவாகவும், நன்றியுள்ளவராகவும் இருக்கச் சொல்லி உங்களுக்குச் சொல்லிக் கொடுத்தார்கள். என்னில் ஒரு பகுதியாக உங்களை நான் உணரத் துவங்கிவிட்டால், அப்புறம் பரிவும், நன்றியும் காட்ட வேண்டிய அவசியம் ஏது? யாரும் யாருக்கும் பரிவு காட்ட வேண்டியில்லாத நிலையைத் தான் ஆவலோடு எதிர்பார்க்கிறேன். கேள்வி யாரைக் கண்டு நீங்கள் வியந்து பாராட்டுகிறீர்கள்? சத்குரு: நம் தேசத்தின் கிராமப்பகுதிகளில் இருக்கிறார்கள் அவர்கள். மிக ஏழ்மையான குடும்பங்களில் பிறந்து, கொதிக்கும் தார்ச் சாலையில் காலில் செருப்பு கூட இல்லாமல், புத்தகப் பையைச் சுமந்து கொண்டு, முகம் நிறைந்த புன்னகையுடன் நடந்து செல்லும் பிள்ளைகளைப் பார்க்கும்போது பிரமிக்கிறேன். உற்சாகமும், ஆனந்தமும், முனைப்பும் கொண்ட அவர்களுடைய நடையைப் பார்க்கும் போதெல்லாம் பிரமிப்பில் நெகிழ்ந்து போகிறேன். 

 குருமார்கள் ஏன் ஆடம்பரமாக இருக்கிறார்கள்?

யோகி, ஞானி, முனிவர் – என்ன வித்தியாசம்?

கேள்வி நம் கலாச்சாரத்தில் எப்போதுமே காவி உடை அணிந்தவர்களை வணங்கி மரியாதை செய்வது வழக்கம். காவி உடை அணிந்தவர்களையே கூட பல பெயர்களில் அழைக்கிறார்கள். முனிவர்கள், சாதுக்கள், தீர்க்கதரிசிகள், யோகிகள், ஞானிகள் – இவர்கள் எல்லோருமே ஒன்று தானா? அல்லது இவர்களுக்கு இடையே வித்தியாசம் இருக்கிறதா? சத்குரு: முனிவர்கள் எல்லாம் ‘அ’ பிரிவு, ஞானிகள் எல்லாம் ‘ஆ’ பிரிவு. இப்படி வகைபடுத்தி விடலாமா? (சிரிக்கிறார்). முனிவர் எப்படிப்பட்டவர்? முனிவர் என்பவர் தனக்குள் ஒருவித இனிமையை உணர்ந்தவர். அவர்கள் அன்பானவர்கள், இனிமையானவர்கள், யோகப் பயிற்சிகள் செய்பவரெல்லாம் ‘யோகி’கள் கிடையாது. இனிமையான சக்திநிலை கொண்டவர்கள். அவர்களைச் சுற்றி எப்போதும் நல்ல அதிர்வுகள் இருக்கும். அவர் ஆசி கூறும் போது, அது உங்கள் வாழ்வில் பல நன்மைகளைச் சேர்க்கும். இதனால் தான் நம் இந்தியக் கலாச்சாரத்தில், புனிதமான மனிதர்களையோ, முனிவர்களையோ பார்த்தால் வணங்க வேண்டும் என்று கூறினார்கள். அவரை வணங்கும் போது, அவரிடமிருந்து ஆசி பெற விரும்புகிறீர்கள், அவ்வளவுதான். அவருடைய ஆசிகள் தொடர்ந்து உங்களை நல்வழிப்படுத்தும். ஆனால் அவர்கள் சிறந்த ‘குரு’வாக இருக்க மாட்டார்கள். அவர்களால் உங்களை வழிநடத்த முடியாது. மனிதனின் உச்சகட்ட நிலையான முக்திக்கு அவர்களால் உங்களை வழிநடத்திச் செல்ல முடியாது. யோகி என்பவர்… ஆனால் யோகிகள் வித்தியாசமானவர்கள். அவர்கள் யோகத் தொழில்நுட்பத்தில் தேர்ந்தவர்கள். அதற்காக யோகப் பயிற்சிகள் செய்பவரெல்லாம் ‘யோகி’கள் கிடையாது. ‘இந்த பிரபஞ்சம் முழுவதுமே ஒன்று’ என்று தன் அனுபவத்தில் உணர்ந்து தெளிந்தவர் தான் ‘யோகி’. இந்த உயிரின் தன்மையை முழுமையாய் அறிந்து, அதைக் கையாளவும் அறிந்தவர் அவர். இருந்தாலும், அவர் ஞானோதயம் அடைந்திருக்க வேண்டும் என்று கட்டாயமில்லை. அந்த ஒருமை நிலையை, யோக நிலையை ஒரு யோகி பலமுறை உணர்ந்திருப்பார் என்றாலும், அதில் முழுவதுமாக திளைத்திருக்கும் பேறு அவருக்கு கிடைக்காமல் இருக்கலாம். தீர்க்கதரிசி என்ன செய்வார்? தீர்க்கதரிசிகளுக்கு கூர்மையான உணரும் திறன் உண்டு. அவர் ஆன்மீகப் பாதையில் இருக்கவேண்டும் என்றில்லை. அவரை ஒரு விதமான மாந்திரீக வகையில் சேர்க்கலாம். பெரும்பாலும் முனிவர்களுக்கும் உண்மையில், தன் உள்நிலையில் உச்சகட்ட வளர்ச்சியை அடைந்தவர்தான் ‘ஞானி’. இவர்களுக்கும் அதிக வேறுபாடு இருப்பதில்லை. பொதுவாக, தீர்க்கதரிசி என்பவர் நீங்கள் பார்க்க முடியாததை, ஆழமாக பார்த்துச் சொல்பவர். எனவே அவரது உணரும் திறன் உங்களுடைய திறனை விட அதிகமாக இருக்கிறது. எந்த அளவிற்கு என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. உங்களை விட ஒரு படி அதிகமாக பார்க்க முடியும் என்றாலும், உங்களைப் பொறுத்தவரை அவர் தீர்க்கதரிசி தானே? யார் ஞானி? இப்போது ஞானி என்ற சொல்லை பார்ப்போம். ஞானி என்ற சொல்லை அதன் ஆழம் புரியாமல் இப்போது பரவலாக பயன்படுத்துகிறார்கள். உண்மையில், தன் உள்நிலையில் உச்சகட்ட வளர்ச்சியை அடைந்தவர்தான் ‘ஞானி’. பொதுவாக அந்த உச்சத்தை அடைந்தவரால், தன் உடலில் நீடித்து இருக்க முடியாது. அவர் தன் உடலை தக்க வைத்துக் கொள்வது பெரிய சவால் தான். அவ்வாறு ஞானம் அடைந்த பின்னும், ஒருவர் தன் உடலில் இருக்க விரும்பினால், அவர், இந்த உடல், உயிர், எல்லாவற்றையும் அக்கு வேறு, ஆணி வேறாக புரிந்து வைத்திருக்க வேண்டும். அதன் நுட்பங்கள் எல்லாமே தெரிந்திருந்தால் தான், அவர் தொடர்ந்து தன் உடலில் இருக்கமுடியும். இல்லாவிட்டால் அவரால், தன் உடலில் நீடித்திருக்க முடியாது. எனவே கிரியா யோக முறையில் ஞானமடையும் ஞானிகள் மட்டும் தான், பொதுவாக, ஞானமடைந்த பின்னும் தன் உடலில் தொடரும் திறன் பெற்றிருப்பார். பிற வழிகளில் ஞானமடைந்தவர்கள் தங்கள் உடலில் மேலும் சிறிது காலம் நிலைக்க விரும்பினால், விழிப்புணர்வுடன் ஆசையை உருவாக்கி, அதன் வழியாக தங்கள் உடலில் நீடித்திருக்கலாம். அவர்களுக்கு வேறு வழி இருக்காது.

 யோகி, ஞானி, முனிவர் – என்ன வித்தியாசம்? 

யாருக்காக யார் சாவது ?

யாருக்காக யார் சாவது ?
இராமன் என்பவர் இறந்து விட்டார். அவருக்கு வயது 40 கூட ஆகவில்லை.
அவரது மனைவி,9 வயதான மகன்,பெற்றோர் அனைவரும் உடலின் அருகே அமர்ந்து கதறி அழுது கொண்டிருந்தனர்.இந்தக் குடுமபத்துக்கே குருஜியாக விளங்கும் அறிஞர் ஒருவர் அப்போது அங்கு வந்தார்.
அவரைக் கண்டதும் அவர்கள் மேலும் பெரிதாக அழ ஆரம்பித்தனர்.
இராமனின் மனைவி சொன்னாள் ”குருஜி!இவ்வளவு இளம் வயதில் என்னையும் என் மகனையும் நிர்க்கதியாக விட்டுப் போய் விட்டாரே? நான் என்ன செய்வேன்?அவர் உயிருடன் வருவாரறென்றால் அதற்காக நான் எதுவும் செய்வேன்”
குருஜி அவர்கள் அனைவருக்கும் ஆறுதல் சொல்லி சமாதானப் படுத்த முயன்றார் ஆனால் அவர்கள் சோகம் குறையவில்லை.
கடைசியில் அவர் கேட்டார்”ஒரு கோப்பை தண்ணீர் கொண்டு வாருங்கள்”தண்ணீர் வந்தது. அவர் கோப்பையை உடலின் அருகில் வைத்துத் தானும் அமர்ந்தார்.
பின் சொன்னார்”இராமன் உயிருடன் திரும்பி வர வேண்டும் என நினைப்பவர்,இந்தத் தண்ணீரை அருந்தலாம்.இராமன் திரும்பி வருவார்.ஆனால் அதற்குப் பதில் நீரை அருந்தியவர் மரணமடைவார்”
அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.ஆனால் யாரும் முன் வரவில்லை.அவர் இராமனின் தந்தையைக் கேட்டார்” ஐயா! நீங்கள் உங்கள் மகனுக்காக உங்கள் உயிரைக் கொடுக்க மாட்டீர்களா?”
தந்தை சொன்னார்”நான் இறந்து விட்டால் என் மனைவிக்கு யார் ஆதரவு?அவளுக்காக நான் வாழ வேண்டும்”
தாயைக் கேட்க அவள் சொன்னாள்”அடுத்த மாதம் என் மகளுக்குப் பேறுகாலம்.நான் இறந்து விட்டால் அவளுக்கு யார் உதவுவது?”
மனைவி சொன்னாள்”நான் இறந்தால் என் பையனை யார் கவனித்து வளர்ப்பது? அவனுக்காக நான் வாழ வேண்டும்”குருஜி பையனைப் பார்த்துக்கேட்டார்”குழந்தாய்,உன் தந்தைக்காக நீ உயிர் விடுவாயா?”
அவன் தாய் உடனே அவனை இழுத்து அணைத்துக்கொண்டு சொன்னாள் ”குருஜி,உங்களுக்கென்ன பைத்தியமா?அவன் ஒரு குழந்தை.இனிமேல் தான் அவன் வாழ்க்கையே இருக்கிறது. அவனைப் போய் நீங்கள் கேட்கலாமா?”
குருஜி சொன்னார்”உங்கள் அனைவருக்கும் ஏதாவது கடமை, பொறுப்பு இருக்கிறது என்று நீங்கள் சொல்கிறீர்கள். அப்படியானால் இராமனுக்கு இங்கு வேலையில்லை என்றாகிறது. எனவே தான் கடவுள் அவனை எடுத்துக் கொண்டார் . இப்போது இறுதி யாத்திரைக்கான ஏற்பாடுகளைக் கவனியுங்கள்”
சொல்லி விட்டு அவர் சென்று விட்டார்.
ஆம் பிறப்பையும் இறப்பையும் தீர்மானிப்பவன் அவன்.

கலியுகத்தின் 15 கணிப்புகள் (வியக்க வைக்கும் உண்மைகள்!!

கலியுகத்தின் 15 கணிப்புகள் (வியக்க வைக்கும் உண்மைகள்!!!)
நம் ரிஷிகளும் முனிவர்களும் எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை முன்கூட்டியே அறிந்திருந்தனர். இது அவர்களின் அதீத அறிவாற்றலினால் அவர்கள் கண்டறிந்த உண்மைகள். பாகவத புராணத்தின் இறுதி பாகத்தில் கலியுகத்தைப் பற்றிய சில அரிய தகவல்கள் நிறைந்துள்ளன. 5000 ஆண்டுகளுக்கு முன் வேதவியாசர் அருளிய ஓர் உத்தம நூலில் கலியுகத்தைப் பற்றிய குறிப்புகள் அத்தனையும் மிகப் பொருத்தமாக அமைந்துள்ளது மிகவும் வியக்கத்தக்க ஒன்றாகும். ஆச்சரியப்பட தயாராக இருங்கள்!
1) கலியுகத்தின் தாக்கத்தால் அறநெறி, உண்மை, தூய்மை, பொறுமை, கருணை, ஆயுள்காலம், உடல்வலிமை, ஞாபகசக்தி ஆகிய அனைத்தும் மனிதர்களிடையே நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வரும். [பாகவத புராணம் 12.2.1]
2) கலியுகத்தில், பொருட்செல்வம் மட்டுமே ஒரு மனிதனின் மதிப்பை அளவிடும். மற்றபடி ஒருவனின் முறையான பழக்கவழக்கங்கள் மற்றும் நல்ல பண்புகள் அடிப்படையில் அவன் மதிப்பிடப்படுவதில்லை. மேலும், சட்டமும் நீதியும் ஒருவனின் அதிகாரத்தின் அடிப்படையிலே செயல்படும். [பாகவத புராணம் 12.2.2]
3) சில ஆண்களும் பெண்களும் வெறும் உடலுறவுக்காக மட்டுமே தொடர்பு கொண்டிருப்பார்கள். தொழில்துறைகளில் வெற்றி என்பது வஞ்சகமும் சூழ்ச்சியும் நிறைந்திருக்கும். பூணூல் அணிந்திருப்பதால் மட்டுமே ஒருவன் பிராமணன் என்றழைக்கப்படுவான். [பாகவத புராணம் 12.2.3]
*கணவன் மனைவி உறவு என்பது வெறும் உடலுறவுக்காக மட்டுமின்றி, அது ஒரு மிக உன்னதமான பந்தம். ஆணும் பெண்ணும் சமம், இருவரும் தங்களின் குடும்பத்தை முறையாக வழிநடத்தவேண்டும். பெண்ணை மதிப்பதால் தான் ஒருவன் ஆணாகிறான்; ஆணை மதிப்பதால் தான் ஒருவள் பெண் ஆகிறாள். பிராமணன் என்பவன் நற்குணங்களாலும் தர்மசெயல்களாலும் உருவாகிறானே தவிர பூணூல் அணிவதால் அல்ல. சமூகத்தில் வேண்டுமென்றால் பூணூல் அணிந்துகொண்டு தன்னை உயர்ந்தவன் என்று காட்டிக் கொள்ளலாம். ஆனால், பகவானின் முன்னிலையில் எல்லாவுயிர்களும் சம்மே! (சர்வபூதேஷு சமஹ்-கீதை)
4) ஒருவரின் புறத்தோற்றத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டு அவரை பண்டிதர் என்று மக்கள் நம்புவார்கள். கண்களால் காணும் வித்தைகளுக்கு மயங்கி தவறான போலிகுருக்களை நம்பி வழிதவறி செல்வார்கள். வெறும் வாய் வார்த்தைகளில் ஜாலங்கள் செய்பவர் கற்றுணர்ந்த பண்டிதராக போற்றப்படுவார். [பாகவத புராணம் 12.2.4]
5) கலியுகத்தின் பிடியில் சிக்கியிருக்கும் சிலர் பொருட்செல்வம் (பணம்) இல்லாதவனைத் தீண்டத்தகாதவன் என்று வெறுத்து ஒதுக்குவர். குளிப்பதாலும் அலங்காரம் செய்து கொள்வதாலும் மட்டுமே ஒருவன் சுத்தமடைந்து விட்டான் என எண்ணிக் கொள்வான். [பாகவத புராணம் 12.2.5]
6) அலங்காரம் செய்தவனெல்லாம் அழகானவன் என்றறியப்படுவான். முரட்டுத்தனமான பேச்சு உண்மை என்று எளிதில் நம்பப்படும். வயிற்றை நிரப்புவது மட்டுமே வாழ்க்கையின் குறிக்கோளாக அமையும். பல மதங்கள் ஆட்களை சேர்த்துக் கொள்வதையும் பெருக்கிக் கொள்வதையும் மட்டுமே லட்சியமாக கொண்டிருக்கும். [பாகவத புராணம் 12.2.6]
7) உலகத்தில் ஊழல் நிறைந்த அரசியல்வாதிகள் நிறைந்துவிடுவர். தன் சமூகத்தினிடையே தன்னை பலமானவன் என்று காட்டிக்கொள்பவன் அரசாளும் அதிகாரத்தைப் பெற்றிடுவான். [பாகவத புராணம் 12.2.7]
8) ஊழல் நிறைந்த அரசாங்கத்தால் நியாயமற்ற கொடுமையான வரிகள் மக்கள் மீது வசூலிக்கப்படும். இதனால் மக்கள் உண்ண உணவின்றி இலை, வேர், விதை போன்றவற்றை உண்ணத் தொடங்குவார்கள். (அரசின் அலட்சியப் போக்கினால்) கடுமையான பருவநிலை மாற்றத்திற்கு ஆளாகி துன்பமிகு வாழ்க்கையில் சிக்கிக் கொள்வார்கள். [பாகவத புராணம் 12.2.9]
9) கடுங்குளிர், புயல், கடும்வெப்பம், கனமழை, உறைபனி, வெள்ளம் போன்ற பல இயற்கை பேரிடர்களில் சிக்கி மக்கள் தவிப்பார்கள். இதனால் பசி, தாகம், நோய், பயம், சச்சரவு போன்ற கடுந்துன்பங்களிலும் சிக்கிக் கொள்வார்கள். [பாகவத புராணம் 12.2.10]
10) கலியுகத்தின் கொடுமை அதிகரிக்கையில், மனிதர்களின் சராசரி ஆயுள்காலம் 50 ஆண்டுகளாக குறையும். [பாகவத புராணம் 12.2.11]
11) தன்னை ஊட்டி வளர்த்த பெற்றோர்களை இறுதிகாலத்தில் கவனித்துக் கொள்ளும் தர்மத்தை மகன் மறப்பான். [பாகவத புராணம் 12.3.42]
12) பொருளுக்காக மனிதன் இன்னொரு மனிதனிடம் வெறுப்பு, பொறாமை போன்ற உணர்ச்சிகளை வளர்த்துக் கொள்வான். நட்பு என்ற உயரிய பண்பை போற்றாமல், தன் சுற்றத்தாரையும் உறவினரையும் கூட கொல்லத் துணிவான். [பாகவத புராணம் 12.3.41]
13) வெறும் பகட்டுக்காகவும் புகழுக்காகவும் மட்டுமே தானம் அளிப்பார்கள். தற்பெருமைக்காக மட்டுமே நோன்பு இருப்பார்கள். தர்மத்தைப் பற்றிய அறிவாற்றல் இல்லாதவர்கள் மதங்களை உருவாக்கி மக்களைக் கவர்ந்து தவறான அதர்ம பாதைக்கு இழுத்துச் செல்வார்கள். [பாகவத புராணம் 12.3.38]
14) தனக்கு இனி பயன்பட மாட்டான் என்ற பட்சத்தில் தனக்கு இத்தனை காலமாக உழைத்து தந்த தொழிலாளிகளை முதலாளி கைவிடுவான். இத்தனை காலம் பால் கொடுத்த பசு பால் கொடுப்பது குறைந்துவிட்டால் அப்பசுக்களும் கொல்லப்படும். நன்றிகடன் மறக்கப்படும். [பாகவத புராணம் 12.3.36]
15) நகரங்களில் கொள்ளையர்கள் அதிகரிப்பர்; வேதங்கள் கயவர்களால் தங்கள் சுயநல கோட்பாடுகளைப் பரப்ப பொய்யான முறையில் மொழிப்பெயர்க்கப்படும். அரசியல்வாதிகள் மக்களை மெல்லமெல்ல பலவிதமாக கொடுமை செய்வார்கள். போலி ஆசாரியர்கள் தோன்றி பக்தர்களை உபயோகப்படுத்தி தங்கள் வயிறுகளையும் காமத்தையும் பூர்த்தி செய்து கொள்வார்கள். [பாகவத புராணம் 12.3.32]
கலியுகம் துன்பங்கள் நிறைந்தது. ஆனாலும் நான்கில் ஒரு பங்கு தர்மம் உள்ளது. கலியுக துன்பங்களில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள கண்டிப்பாக நமக்கு ஈஸ்வரனின் துணை தேவை. மழையினில் குடைபோல, இறைவனிடம் காட்டும் பக்தி இத்துன்பங்கள் நம்மீது படாமல் பாதுகாக்கும். மனத்தை உறுதியாக வைத்துக் கொள்ள தியானமும், உடலை வலிமையாக வைத்துக் கொள்ள யோகமும், செயலை தூய்மையாக வைத்துக் கொள்ள சுயநலமற்ற சேவைகளும் புரியவேண்டும். கலியுக துன்பங்களில் நம்முடைய தர்மங்களை மறந்துவிட கூடாது.
கலியுகத்தின் நடுவில் ஒரு பொற்காலம் மலரும் என கூறப்படுகின்றது. இப்போது நாம் எல்லோரும் அந்த பொற்காலத்திற்காக உலகத்தை தயார் செய்யவேண்டும். அனைத்தையும் அச்சமின்றி மிகவும் துணிவாக எதிர்கொள்ளவேண்டும்! மிகவும் தெளிவான சிந்தனையோடு செயல்படவேண்டும். ஒருபோதும் கடவுளை மறவாமல் இருக்கவேண்டும். ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்தி!!!

Thursday, January 14, 2016

10 000 தகவல்களுடன் உங்கள் aanmikam.blogspot.com

உங்கள் aanmikam.blogspot.com 10 000  தகவல்களுடன் காலடிபதித்து பயனித்துக்கொண்டிருக்கிறது.உங்கள் கருத்துக்களையும், வாழ்த்துக்களையும் தெரியப்படுத்துங்கள்.

 aanmikam .blogspot .com   வலைப்பதிவானது  10 000

ஆன்மிக தகவல்களுடன்  வீறு நடை போடுகிறது.என்னுடைய நோக்கம்
இந்துமத  உண்மைகளை அனைவரும் அறிய வேண்டும் என்பது ஆகும்.
தொடர்ந்தும் இச்சேவை எத்தனை தடைகள் வந்தாலும் இறைவன் அருளால்தொடரும்.
இதை உங்களது நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
உங்களது ஆக்கப்பூர்வமான கருத்துக்களை தெரியப்படுத்துங்கள்.
உங்களது ஆக்கப்பூர்வமான கருத்துக்கள் இச்சேவையை பலப்படுத்தும்.
இதில் என் ஆக்கங்களும்  நான் ஏனையஇணையதளத்தில் படித்தவிடையங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் .
நன்றிகள் பல
 N.R.S.Sarma
 .

சூலாயுதங்களில் எலுமிச்சை ஏன் குத்தப்படுகிறது?

சூலாயுதங்களில் எலுமிச்சை ஏன் குத்தப்படுகிறது?
---------------------------------------------------------------
சூலாயுதங்களில் எலுமிச்சை குத்தப்படுவதற்கு காரணம் லுமிச்சை தேவ கனி என்பதால் ஆகும்.
முக்கனிகளான மாம்பழத்தில் வண்டு குற்றம் உண்டு. பலாவில் வியர்வை குற்றம் உண்டு. வாழையில் புள்ளி குற்றம் உண்டு. ...
ஆனால் எலுமிச்சையில் மட்டும் இவ்வித குற்றங்கள் இல்லை.

மனிதனுடைய எண்ணங்களை ஈர்க்கும் சக்தி மற்ற கனிகளைக் காட்டிலும் எலுமிச்சைக்கு அதிகம் உண்டு.அதனால்தான் சூலாயுதத்தில் எலுமிச்சை குத்தப்படுகிறது.

எளிய கடன் நிவர்த்தி முறை :-

எளிய கடன் நிவர்த்தி முறை :-
கடன் பெற்றான் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்பதை போல கடன் என்பது கொடிய விஷமே தவிர வேறில்லை. இதில் எல்லோரும் அவதிப்பட்டு ொண்டு தான் இருக்கின்றார்கள். நாம் கண்ட பலருக்கு கொடுத்து பயன் பெற்ற கடன் நிவர்த்தி முறைகளை கீழே கொடுத்துள்ளேன். பயன்படுத்தி பலன் பெறுவீர்களேயானால் மகிழ்ச்சியுருவேன்.
(1) புளிய மரத்தின் சிறு கிளையை வீட்டில் பணம் வைக்கும் இடத்தில், வியாபார இடத்தில், பண பெட்டியில் வைத்து வரவும்.
(2) வெல்லத்தால் பாயசம் செய்து தொடர்ந்து 5 நாட்களுக்கு உங்களின் கையால் பசுவிற்கு வழங்கி வரவும்.
(3) தொடர்ந்து 5 நாட்களுக்கு பசியால் வாடும் ஒருவருக்கேனும் உணவு உங்கள் கையால் வாங்கி கொடுக்கவும்.
(4) வியாழக்கிழமை அன்று கொஞ்சம் குங்குமம் வாங்கி அதை வெள்ளிக்கிழமைகளில் அம்பாள் அல்லது தாயார் சன்னதியில் கொடுத்து வரவும். தொடர்ந்து 11 வாரங்கள் செய்ய வேண்டும்.
(5) கோதுமையை அரைக்க கொடுக்கும் பொழுது அதில் 7 துளசி இலைகள் மற்றும் சிறிது குங்குமப்பூ சேர்த்து அரைக்க கொடுத்து வாங்கவும். அந்த மாவு வீட்டில் உள்ளவரை பண பிரச்சனைகள் குறைந்து இருப்பதை அனுபவத்தில் காணலாம். (கோதுமையாக வாங்கி செய்யவும்)

(6) தொடர்ந்து 5 வெள்ளிக்கிழமைகள் மஹாலக்ஷ்மி சன்னதியில் மல்லிகை மாலை சாற்றி வழிபடவும்.