Monday, February 29, 2016

சிதம்பரம் நடராஜர் கால் பெருவிரலில்தான் மொத்த பூமியின் காந்த மையப்புள்ளி

சிதம்பரத்திலுள்ள நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் ஆச்சர்யங்கள் பின்வருமாறு.
பல கோடி டாலர்கள் செலவு செய்து எட்டு ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து சிதம்பரம் நடராஜர் கால் பெருவிரலில்தான் மொத்த பூமியின் காந்த மையப்புள்ளி இருப்பதாக உலக நாடுகள் கண்டுபிடித்துள்ளன..Centre Point of World’s Magnetic Equator.எந்த செலவும் செய்யாமல் எந்த டெலஸ்கோப்பும் இல்லாமல் இதனை கண்டறிந்த நமது தமிழன் எப்பேற்பட்ட அறிவுமிக்கவன்..? அதை உணர்ந்து அணுத்துகள் அசைந்துகொண்டே இருக்கும் என்ற உண்மையை ஆடும் நடராஜர் வாயிலாக உணர்த்தும்படி சிலை அமைத்து பூமியின் மையப்புள்ளியில் மறைமுகமாக அமர்த்திய அவன் சாதனை எப்பேற்பட்டது..?
இதனை 5000 வருடங்களுக்கு முன்பே கண்டறிந்து திருமந்திரத்தில் குறிப்பிட்ட திருமூலரின் சக்தி எப்படிப்பட்டது..? புரிகிறதா..? தமிழன் யார் என தெரிகிறதா..? திருமூலரின் திருமந்திரம் மிகப்பெரிய உலகிற்கே வழிகாட்டும் அறிவியல் நூலாகும் இதை உணர்ந்துகொள்ள தற்போதுள்ள அறிவியலுக்கு இன்னும் ஒரு நூற்றாண்டு தேவைப்படலாம்..வாழ்க தமிழ்..வெல்க... தமிழனின் நுண்ணறிவு!!
சிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம் என்று பலரும் பல விசயங்களை கூறிவரும் வேளையில், அந்த கோயிலில் இருக்கும் அறிவியல், பொறியியல், புவியியல், கணிதவியல், மருத்துவவியல் குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள்.
முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது, அப்படி இருக்க அவர்கள் நிர்ணயித்த பிரம்மாண்டமான கற்கோவில்களுக்கு பின் இருக்கும் சில அற்புதங்களை அதனிலடங்கும். அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் இவைகள் தான்.
(1) இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Center Point of World's Magnetic Equator ).
(2) பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUDE ) அமைந்துள்ளது, இன்று Google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல்,புவியியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம்.
(3) மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.
((4) விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது, இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15*60*24 = 21,600).
(5) இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.
(6) திருமந்திரத்தில் " திருமூலர்"
மானுடராக்கை வடிவு சிவலிங்கம்
மானுடராக்கை வடிவு சிதம்பரம்
மானுடராக்கை வடிவு சதாசிவம்
மானுடராக்கை வடிவு திருக்கூத்தே
என்று கூறுகிறார், அதாவது " மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்". என்ற பொருளைக் குறிகின்றது.
(7) "பொன்னம்பலம்" சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும்.இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை "பஞ்சாட்சர படி" என்று அழைக்கப்படுகின்றது, அதாவது "சி,வா,ய,ந,ம" என்ற ஐந்து எழுத்தே அது. "கனகசபை" பிற கோயில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை குறிக்கின்றது,
(8)பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது.
(9) பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது.அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.
(10) சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் "cosmic dance" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது.
விஞ்ஞானம் இன்று சொல்வதை இந்துமதம் அன்றே
கூறிவிட்டது
அறிவியல் உண்மை ( ஆன்மீகம் )
முற்காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்தது. என்ன காரணம்?!
கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள்.
அதன் பின் ஒளிந்திருக்கும் ஆன்மிக உண்மை தெரியவில்லை. ஆனால் அதன் பின் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போதுதான் தெரிகிறது.
கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி செம்பு(அ) ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும்.
இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின் காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியை கலசங்களுக்குக் கொடுக்கின்றன.
நெல், உப்பு, கேழ்வரகு, தினை, வரகு, சோளம், மக்கா சோளம், சலமை, எள் ஆகியவற்றைக் கொட்டினார்கள்.
குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாகக் கொட்டினார்கள்.
காரணத்தைத் தேடிப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது.
வரகு மின்னலைத் தாங்கும் அதிக ஆற்றலைப் பெற்றிருப்பது என இப்போதைய அறிவியல் கூறுகிறது.
இவ்வளவுதானா?
இல்லை,
பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் கலசங்களில் இருக்கும் பழைய தானியங்கள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பப்படுகிறது.
அதை இன்றைக்கு சம்பிரதாயமாகவே மட்டும் கடைபிடிக்கிறார்கள்.
காரணத்தைத் தேடினால், அந்த தானியங்களுக்குப் பன்னிரெண்டு வருடங்களுக்குத்தான் அந்த
சக்தி இருக்கிறது.
அதன் பின் அது செயல் இழந்து விடுகிறது!!
இதை எப்படி அப்போது அறிந்திருந்தார்கள்..?!
ஆச்சர்யம்தான்.
அவ்வளவுதானா அதுவும் இல்லை. இன்றைக்குப் பெய்வதைப் போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று?
தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது.
ஒரு வேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்துப் பயிர் செய்வது?
இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பில்லை. இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!
ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அதுதான் முதலில் 'எர்த்' ஆகும்.
மேலும் அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள்.
உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் வரைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாங்காமல் காக்கப்படுவார்கள்.
அதாவது சுமார் 75008 மீட்டர் பரப்பளவிலிருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள்!
சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன.
அது நாலாபுறமும் 75000சதுர
மீட்டர் பரப்பளவைக் காத்து நிற்கிறது!
இது ஒரு தோராயமான கணக்கு தான்.
இதைவிட உயரமான கோபுரங்கள் இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றன.
"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க
வேண்டாம்"
என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது..

சூரியனில் இருந்து வெளிவரும் ஒளி

சூரியனில் இருந்து வெளிவரும் ஒளியானது 8
நிமிடத்தில் பூமியை அடைகிறது.
நமது 2
கண்களுக்குள் உள்ள கண்ணின் பாவை வழியாக
( அதிகாலை சூரிய ஒளியில் அடங்கியுள்ள
நீலநிற ஒளிக்கதிரின் 470nm ஒளி
அலையானது ) ஊடுருவிச் செல்கிறது.
அதிகாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை
வருகின்ற சூரிய ஒளிக் கதிர்கள்
மூலையின் நடுப்பகுதியில் உள்ள பீனியல்
சுரப்பியை இயங்கச் செய்கிறது. சூரிய ஒளிக்
கதிர்கள் உடல்மீது படும்படியும், கண்களுக்கு
நீலநிற வானத்தின் ஒளிக்கதிர்கள்
தெரியும்படியான நடைப்பயிற்சி
செய்யும்போதுதான் பீனியல் சுரப்பி
இயங்குகிறது. பீனியல் சுரப்பியிலிருந்து
மெலடினின் என்ற திரவம் சுரக்கிறது. காலை
6.00 மணிக்கு பிறகு பீனியல் சுரப்பியிலிருந்து
மெலடினின் என்ற திரவம் சுரப்பது நின்று
விடுகிறது.
அதிகாலையில் முதல் முதலாக நமது உடலில்
சுரக்கும் இந்த திரவமே மூலைக்கும்
இருதயத்திற்கும், மூலைக்கும்
தண்டுவடத்திற்கும், மூலைக்கும்
சிறுநீரகத்திற்கும் தொடர்பை ஏற்படுத்துகிறது
. மின்சாரம் மற்றும் மின்காந்த ஆற்றல்களை
உடல் முழுவதும் உள்ள செல்களுக்கும்,
நரம்பு இணைப்புகளுக்கும் கிடைக்கச்
செய்கிறது. மெலடினின் என்ற திரவமே 24
மணி நேரமும் உடலில் நடைபெறும் அனைத்து
செயல்களையும் நடுநிலைப்படுத்துகிறது.
தோலின் நுனிப் பகுதியின் உணர்வு
அலைகளை மூலையானது அறிந்து கொள்ள
காரணமாக உள்ளது. மனிதர்கள் ஓய்வாக
உறங்கும்போது“இரவு 9.00 மணி முதல்
10.00 மணிக்குள்”உடலானது தன்னைத்தானே
சரிசெய்து கொள்ள மெலடினின் என்ற திரவமே
காரணமாக உள்ளது. இந்த நேரத்தில்
(உறங்காமல் கண்கள் திறந்திருப்பதும், 5
WATTS க்கும் அதிகமான வெளிச்சம் உடல்மீது
படும்படியாக இருப்பது) மெலடினின் திரவம்
உடலினை நடுநிலைப்படுத்த
தடையாகின்றது.
தினசரி உடல் ஆரோக்கியம் அனைத்திற்கும்
மெலடினின் திரவ உற்பத்தியே முதல்
காரணமாக உள்ளது. இதனை நமது சித்தர்
பெருமக்கள் உணர்ந்து உருவாக்கியதுதான்
“தினசரி வாழ்க்கை முறைகள்”என்பது மறுக்க
முடியாத உண்மையாகும்.
தனிமனிதர் உடல் ஆரோக்கியம் என்பது
அதிகாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை
சூரிய ஒளியில் நடைப்பயிற்சி
செய்யும்போதும், இரவு 9.00 மணிக்கு
முன்பே உறங்குவதால் 50% அதிகமாக
மெலடினின் திரவத்தினால் உருவாக்கப்படுவதாகும்.
எட்டும் , இரண்டும் பத்தடா என்றால் 8+ 2 =10
இல்லை , தமிழில் இதை
அ + உ = ய இதுவும் இல்லை .
அதாவது
அகாரத்தையும் உகாரத்தையும் கெட்டியாகப்
பிடித்துக் கொள் என்று அர்த்தம் .
சூரிய கலையில் மூச்சு நடக்கும்போது அதிக
ஆற்றல் உண்டாகி சக்தி பெருகும் . எனவே
அறிவு வளரும் . அதே மூச்சு தலையில்
உள்ள புருவ மத்தியில் ஏறிச் சென்று
உச்சியில் நடன மாடினால் ஞானம் பிறக்கும் .
இதில் நாடு நிலை என்று சொல்லப் பட்டது
முதுகுத் தண்டின் மத்தியில் உள்ள
வெற்றிடத்தைக் குறிக்கும் , அதில் பிராண
சக்தி , மின்சார சக்தி இயக்க சக்தி , காந்த சக்தி
, இச்சா சக்தி போன்ற சக்தி ஓட்டங்கள் இதில்
ஓடுகிறது
அண்டத்தையும் பிண்டத்தையும் அன்பு
இணைக்கிறது
அ என்றால் அண்டம் அதாவது சிற்றண்டம்
ன் என்றால் இணைக்கும் சக்தி
பு என்றால் புவி அல்லது பூமி
ன அல்லது நா என்றால் நாதம் இங்கே வாய்வு
அல்லது காற்று ஆகும்
ன் என்ற சப்தத்துடம் அல்லது சக்தியுடன்
காற்று இயங்குகிறது .
இதுவும் ஒரு கல்வி முறையைப் போன்றது
.இந்த மண்ணில் தோன்றிய உயிர்களில் மனித
இனம் உயர்வான ஓன்று .
இறைவனின் சாயல்
கொண்டது நமது உடம்பு , அறியும் திறன்
அதிகம் உள்ள இனம் மனித இனம் .கொஞ்சம்
சீர்தூக்கிப் பாருங்கள் அன்புகளே எது
வேண்டும் என்று .நமது அறிவு எது நோக்கிச்
செல்ல வேண்டும் என்று .
நமது இயக்கங்களுக்கு முக்கிய காரணம்
பிசுட்டரி சுரப்பியும் பீனியல் சுரப்பியும்
ஆகும் .நமது மூச்சு 2 1/2 நாளிகை வலது
நாசியிலும் 2 1/2 நாளிகை இடது நாசியிலும்
ஓடும் .ஒவ்வொரு நாள் துவங்கும்போது எந்த
நாடியில் கலை நடக்க வேண்டும் என்று
உள்ளது , இதை மாற்றிய யோகிகளுக்கு
சித்திக்கும் வல்லமை பெற்றது .
இது ரகசியமாக பிரணவ உச்சியின் வலது
பக்கத்தில் சந்திரனையும் இடது பக்கம்
சூரியனையும் மாற்றி ,தண்டத்தால் செய்யும்
முறை ஆகும் சூரிய சந்திரர்களை மாற்றி
மாற்றி ஒரு வருடம் தொடர்ந்து விடாமல்
செய்து வர வேண்டும் .மரணத்தை வென்றபின்
அழகு பொருந்திய இந்த அணிமாவானது
சித்திக்கும் .
பின்பு இந்த சாதனையுடன் திரிபுர
சக்திகளுடன் சேர்ந்து செய்ய வேண்டும்,ஐந்து
வருட பயிற்சியால் ஞான தத்துவங்கள் தானாக
வந்து சேரும் , தொடர்ந்து இதையே
பரிபாலித்துக் கொண்டு வந்தால் லகிமாவும்
அதன் சக்தியைக் கொடுக்கும் .
பிரகாசத்தைக் கண்ட ஞானிகள் எல்லோராலும்
காணக் கூடிய மணிபூரக ஸ்தானத்தை உந்திக்
கமலத்தில் கண்டு ,அந்த பிரகாச சக்தியை
எல்லா திக்கிற்கும் பரவச் செய்து
பரவசமடைவர் .அந்த ஒளி சதா காலமும்
பிரகாசித்து ஒன்றைக் கலக்கும் வரை சாதனை
தொடர வேண்டும் .அப்பியாசிக்கு ஒரு வருட
காலத்தில் சித்திக்கும் . மகா சக்தியானவள்
வெளிப்பட்டு ஒன்றாய் கலந்து விடுவாள்.இது
அப்பியாசியின் இஷ்டம்போல் நடப்பதற்கு
உதவும் மகிமா ஆகும
ஓம் என்ற பிரணவம் இரு பிரிவாக பிரிந்து இரு
செயல்களாக மாறி
ஓர் நிலையில் உள்ள இரு உடம்பில்
செயல்படுகிறது. கணவன், மனைவி
கூட நினைக்கும் போது. மனது என்ற
விசையின் மூலம் வெளிப்படுகிறது
அதை நாம் காமன் விடும் பானம் என்கிறோம்.
பின் இரு சக்தி ஓட்டங்களாக பிரிந்து
பெண்ணின் சுரோனிதத்திலும், ஆணின்
விந்துவிலும் செயல் படுகிறது. ஆண், பெண்
சேர்கை நாத விந்து சேர்க்கையாக மாறுகிறது
பின்னால் இந்த நாத விந்து சேர்கை
பிரணவமாக மாறி செயல் புரிய ஆரம்பிக்கும்.
அதனால்தான் திருமணத்தை வை போகம்
என்கிறோம். கல்யாணத்தை எல்லோரும்
ஆசிர்வதிக்க அழைக்கிறோம். கலவியின் போது
கருவறைக்குள் செல்ல
அவ்விடத்தில் உள்ள பூத கணங்கள்
உதவுகின்றன, அதன் பொருட்டு நாம் பூத
கணங்களை வணங்குகிறோம். நாத, விந்து
சக்தி பெற்று மரு
என்ற புள்ளியாக அல்லது செல்களாக மாறும்.
பெண்ணின் மாதவிடாய்
வெளியேறாமல் பிண்டமாக உருவெடுக்கும்,
பின்னர் செல்ல்களாக மாறும் பின் ஒவ்வொரு
வாய்வாக உள்ளை செல்லும் பூத
கணங்கள்உதவி புரியும் முதலில் சென்ற
வாய்வு பிராணன் என்ற
நிலையில் உயிராக மாறும். இந்த வாய்வுதான்
இறக்கும் போது கடைசியில் வெளியேறும்.
மூலாதாரத்தை முதலில் உருவாக்கி மற்ற
வாய்வுக்கள் செயல் பட கணங்கள் உதவி
செய்யும். கணங்களின்
அதிபதி கணபதி என்ற விநாயகர்
மூலாதாரத்தில் இருந்து செயல்
படுகிறார். பிள்ளை யார் என்று அவர்
தீர்மானிக்கிறார். ஆணா பெண்ணா
என்று மூலாதாரக் கணபதி தீர்மானிக்கிறார்.
அவரை பிள்ளையார்
என்றும் மூலக் கடவுள் என்றும், சிவனின்
முதல் மகன் என்றும் பார்க்கிறோம். பிரபஞ்ச
அணுவின் சக்தியை எடுத்து பிள்ளையாக
உருவகம் பிடித்து கொடுக்கிறார். தாயின்
பத்து
மாத வெளியேற்றப்படாத மாதவிடாய் என்ற
தூய்மை தான் நம் உடல்.
பிள்ளை யார் என்ற வினாவிற்கு தாய்மையான
பெண் தனது படுக்கும் முறை கையை
வைத்து எழும் முறை போன்ற செயல்களால்
வெளிப்
படுத்துவாள் பத்து மாதம் வரை
மூலாதாரத்தில் இருந்து தொப்பிள்
கொடி மூலம் சக்தியை கொடுத்து
குழந்தையை காக்கிறார்.
கருவறையில்
இருந்து
வெளிவந்த குழந்தையை பச்சை மண்
என்கிறோம். காரணம் குயவன் களி மண்ணை
கொண்டு பானை செய்து வைத்தவுடன்
தொட்டுப் பார்த்தல் விரல் பதியும் அதே போல்
பிறந்த குழந்தையும் மிக மென்மையாக
இருக்கும். சிசு இந்த உலகில்
பிறக்கும்போது வானில் அதற்குரிய
நட்சத்திரம் தோன்றும
பிரம ஸ்தானத்தில் ஒளியை சாதகர்கள்
அனைவரும் காணலாம் .
வித்தியார்த்தி
முதற்கொண்டு சதா பயிர்ச்சி எடுக்கும்
சாதகன் வரை ஒளியை காண்கின்றனர் , பல
வண்ணங்களில் தோன்றும் ஒளியானது
ஒவ்வொரு பயிற்சியிலும் மாறும் ,கரு
வண்ணம் முதல் கரு நீலம், நீலம்
வெளிர் நீலம் ,கரும் பச்சை , அடர்பச்சை ,
பச்சை , வெளிர் பச்சை வரும் பின்பு பச்சை
கலந்த அடர் மஞ்சள் , சிகப்பு கலந்த மஞ்சள் ,
மஞ்சள் நிறங்கள் காணும் , அதன் பிறகே
வெள்ளை நிறம் காணும் . இவை வருவதற்குள்
உடம்பில் நிறைய மாற்றங்கள் வரும் ,அதற்க்கு
அறிகுறியாக ஒவ்வொரு நோய்கள் தோன்றி
சாதகனை சோதிக்கும் , இறைவனே கதி என்று
இருப்போரன்றி மற்றவர்கள் பின் வாங்கிச்
செல்வர் ,அதற்குள் சில சக்திகள்
கிடைத்திருக்கும் அதை வைத்துக் கொண்டு
உலகியலில் இருந்து மாண்டு போவர் ,
இருப்பினும் அவர் செய்த சாதனை மட்டும்
அடுத்த பிறவிக்கும் வந்து அவரை கரை
சேர்க்கும் ,
இப்போ கிரிமா அடைவதைப் பாப்போம்
பிரம ஸ்தானத்தில் உண்டாகும் ஒளி தோன்றி
மறையும் தன்மை உடையது
வைராக்கியத்தால் அதைப் பிடித்து வைத்து
சதா காலமும் அங்கே நிலைத்து இருக்கும்படி
செய்ய வேண்டும் . உலகத் தோற்றத்தை
இருந்த படியே காணலாம் .வெளி சக்திகள்
எல்லாம் ஓன்று கூடி பூத சக்தியாக மாறி
சரீரத்தில் நிலை கொண்டு இருக்கும்
சாவை வென்ற பின் இது கிடைக்கும் இதை
கிரிமா என்றனர
பிரிதிவி , சரீரத்தில் உள்ள மாமிசம் எலும்பு
நரம்பு, குடல் வயிறு இவற்றிலும் . நீர் , வாய்
இரத்தம் குடலின் உட்பகுதிலும் ,அக்கினி இரு
நேந்திரங்களையும் மார்பின் இடப் பக்கம் இதய
கமலத்திற்கு மேல் இருந்து எல்லா
இடங்களிலும் வியாபித்து இருக்கும் , வாய்வு
சிரசு நுரையீரல் பெருங்குடல் போன்ற
இடங்களிலும் ஆகாயம் இரு காதுகளிலும்
கண்ணுக்கு ஒளியை கொடுத்ததும் சிரசின்
தென் மூலையில் அடியில் பொய் , மெய் வாய்
கண் மூக்கு செவிகளை இயக்கும்.
உருண்டை வடிவமான இப்புவியில் மண்ணின்
உள்ளேயும் ( உட்புறம் ) வெளியே யும் இந்த
ஐம் பூதங்களும் இயங்கிக் கொண்டு இருக்கும்
வெளி உலகில் கோடான கோடி பரம அணுக்கள்
வாழ்ந்து கொண்டு இருக்கின்றன ,உடலுக்கும்
உலகுக்கும் பாலமாக இருப்பது காற்று
மண்டலத்தில் உள்ள வாய்வு ஆகும் .இதுவே
சங்கு சக்கரம் எனப்படும் .
அக்கினியில் சம்பந்தப் பட்ட பரமணுவானது
சக்கரத்தின் உருவைப் பெற்றும்,ஆகாயத்தில்
கலந்து சக்தி பீடமாக வெளிப்படும் .
வாயுவில் சம்பந்தப் பட்ட அணுவானது
தட்டையான பூமியில் பட்டு உருண்டு மேல்
எழும்பி சங்காக வெளிப்பட்டு ,சங்கின்
நாதத்தை வெளிப்படுத்தும் ..
மனிதர்களில்
மூக்கின் வழியே சந்திர சூரியர்களாகவும்
பரத்தில் சூரியனும் சந்திரனுமாக இருந்து
பிரவர்த்திக் கொண்டு வருகிறார்கள
ஒதாக் கல்வியா ஓதும் கல்வியா என்று
ஓடும் கல்வியா உதவும் கல்வியா என்று
சித்தர்கள் சொல்லும் 8, 2 இதற்கு பல
விளக்கங்கள் உள்ளது .

பணம் , வாழ்க்கை , நாளை

பணம்  , வாழ்க்கை , நாளை „heart“-Emoticon
வாழ்வதற்கு பணம் தேவையாக இருக்கிறது:
பணம் சம்பாதிக்கவோ, நீ, உன் வாழ்ககையையே தொலைக்க வேண்டியிருக்கிறது.
இது ஒரு பொல்லாத வளையம்.
நீ வாழ வேண்டுமென்றால் உனக்கு பணம் தேவை,பணம் வேண்டுமென்றால் பலதோடும் ஒத்துப்போக வேண்டியுள்ளது.
அதன் பிறகு வாழ்வதற்கு உன்னிடம் வாழ்க்கை இருக்காது.
பணம் இருக்கும் : வாழ்க்கை இருக்காது.
பிரச்சனை இவ்வளவு குழப்பமாக இருப்பதால், சில வருடங்கள் இந்த வேலையைச் செய்தபின்,ஓய்வூதியம் பெற்றுக்கொண்டு ஓய்வாக நாம் நம் வழியை பார்த்துக் கொண்டு இருக்கலாம். என்று மக்கள் நினைக்கிறார்கள்.
இதில் பல பிரச்சனைகள் உள்ளன....
முதலாவதாக, ஒருவன் தொடர்ந்து வாழ்வதை தள்ளிப்போட்டுக் கொண்டே இருக்க வேண்டும். நீ முப்பது, இருபது வருடங்கள் வாழ்வதை தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தால்
அந்த தள்ளிப்போடும் தன்மையே உன் மனதின் பாகமாகி, உன் அமைப்பாகி விடும். நீ அதை கற்றுக்கொள்வாய்.
'ஓய்வுக்குப் பிறகு காட்டுக்குச் சென்று, நான் வாழ்வேன் ' என்று இருபது வருடங்கள் தள்ளிப்போட்டபின் தள்ளிப்போடுதல் ஒரு தன்மையாகிவிடும்.
"நாளை -நாளை -நாளை என்று முப்பதாண்டுகள் தள்ளியபின்,முப்பது வருடங்களுக்குப் பிறகு பென்சன் ஒருநாள் கிடைக்கும் : ஆனால் முப்பது வருடப் பழக்கமான 'நாளை 'யும் உன் கூடவே இருக்கும்."
திடீரென அதைவிட முடியாது. அது உன்னுடனே தங்கி இருக்கும்.
இப்போது நீ சிக்கிக் கொண்டாய்.
இதுவரைக்கும் ஒரு நம்பிக்கையாவது இருந்தது. இனி, அந்த நம்பிக்கைக்கும் வழியில்லை. இவ்வளவு நாளும் நாம் ஓய்வூதியம் பெற்று ஓய்வாக இருப்போம் என்ற நம்பிக்கையாவது இருந்தது.
பணப்பிரச்சனை தீர்ந்து விடும். சொந்த விஷயங்களை இனி செய்யலாம்.ஆடலாம்,பாடலாம் செய்ய விரும்பியதை எல்லாம் செய்யலாம்,ஏனெனில் இனி பணம் ஒரு பிரச்சனை இல்லை.
"ஆனால்,ஓய்வுக்குப் பிறகு, ஒருவன் வெறுமையையே உணர்வான். ஏனெனில்,அவனுக்கு,ஒரே மாதிரிதான் வாழத்தெரியும்...'நாளைக்கு வாழ்ந்து கொள்ளலாம் ' என்பதே அது"
ஓய்வு பெற்றவர்கள் சீக்கிரம் இறந்து விடுகிறார்கள். வேலையில் இருந்திருந்தால் இன்னும் பத்து வருடங்கள் வாழ்ந்திருப்பார்கள். எந்த வேலையில் எப்போதும் துன்பத்துடன் இருந்தார்களோ அதே வேலையை தொடர்ந்திருந்தால் இன்னும் பத்து ஆண்டுகள் வாழ்ந்திருப்பார்கள்.
ஓய்வினால் வாழ்வில் பத்தாண்டுகள் குறைந்து விட்டது. தொண்ணூறு வருடம் வரை வாழவேண்டிய மனிதன் எண்பது வரைதான் வாழ்வான்.
"ஓய்வுபெற்ற மனிதனின் வாழ்க்கை ஒரு பயங்கர கனவுபோல ஆகிவிடுகிறது. யாருக்கும்,எதற்கும், அவன் தேவையற்றவன் ஆகிவிடுகிறான். அவன் அநேகமாக 'பயனற்ற' பொருள்களோடு எறியப்பட்டவனாகிறான்."
யார் கவலைப்படுகிறார்கள் அவனைப் பற்றி?
'நாம் பயனற்றவனாகி விட்டோம் ' என்று எண்ண ஆரம்பிக்கிறான்.
"இந்த எண்ணம் வந்த நாள் முதலே, நீ, தற்கொலை செய்துகொள்ள துவங்கிவிட்டாய் என்று அர்த்தம் "
இந்த எண்ணம் ஒரு விஷம்.
எனவே....
காலத்தை வீணாக்காதே.
பணம் ஒரு தேவை . அதுவே வாழ்வல்ல ..
இப்போதே ஆனந்த்தித்திரு நாளை அல்ல .
நாளை என்றுமே வருவது அல்ல . நாளை வந்தால் கூட
அதுவும் இன்றாகி விடும் . வாழ்க்கை இங்கு
இப்பொழுது மட்டுமே .
--- ஓஷோ ---

‪‎உறுப்புக்களின்‬ ‪#‎செயலை‬ ‪‎தற்காலிகமாக‬ ‪‎நிறுத்தினால்‬ ‪‎நமக்கு‬ ‪சக்தி‬ ‪‎கிடைக்குமா‬

* மஹாபாரதத்தில் கெளரவர்களின் தாய்
காந்தாரி. திருத்ராஷ்டிரனை திருமணம்
செய்தபின் தன் கணவன் காணாத இவ்வுலகை
நானும் காணமாட்டேன் என தனது கண்களை
கட்டிக்கொண்ட பதிவிரதை. அவள் எடுத்த
வைராகியமான முடிவு அவளின் சக்தியை
நாளாக நாளாக கூட்டி அவளுக்குள் மாபெரும்
சக்தியாக அமைந்துவிட்டது.
* பாரத போர் சமயத்தில் தனது கண்கள் மூலம்
சேமித்த ஆற்றல் அனைத்தும் தனது மகனுக்கு
வழங்கி அவனை மாபெரும் சக்தி உள்ளவனாக
மாற்ற எண்ணுகிறாள் துரியோதனனின்
அன்புத்தாய் காந்தாரி. துரியோதனனை
குளித்துவிட்டு நிர்வாணமாக தன்முன் வர
சொல்லுகிறார்.
* துரியோதனன் குளிக்க செல்லுகையில் ஸ்ரீ
கிருஷ்ணர் எதிர்ப்பட்டு, ”என்னப்பா இந்த
சமயத்தில் குளிக்கபோகிறாயா?” என
கேட்கிறார். தனது தாயின் நோக்கத்தை
கூறுகிறான் துரியோதனன். ஸ்ரீ கிருஷ்ணர்
புன்னகைத்துவிட்டு நீ வளர்ந்த மனிதன்
தாயின் முன் நிர்வாணமாக நிற்கலாமா என
கேட்கிறார். குளித்தபின் வாழை இலையை
இடுப்பில் தொடை வரை அணிந்து
காந்தாரியின் முன் செல்லுகிறான்
துரியோதனன். கண்களை திறந்து தனது
சக்தியை வழங்கிய காந்தரிக்கு தன்மகன்
இடுப்பு பகுதியில் ஆடையுடன் இருப்பதை
கண்டு கலங்கினாள். ஸ்ரீ கிருஷ்ணரின் மாய
விளையாட்டை புரிந்துகொண்டாள்.
* பாரத போரின் இறுதியில் பீமனுக்கும்,
துரியோதனனுக்கும் கடும் மோதல் ஏற்படும்
பொழுது எந்த உறுப்பில் தாக்கினாலும்
இறக்காமல் இருந்த துரியோதனன் கடைசியில்
தொடைப்பகுதியில் தாக்கியதும் இறந்தான்.
காரணம் காந்தாரி வழங்கிய சக்தி
தொடைபகுதியில் இல்லை. பீமன் உடல்
வலிமையில் சிறந்தவன் அவனால் காந்தாரியின்
கண் மூலம் பெற்ற ஆற்றலை ஒன்றும் செய்ய
முடியவில்லை என்பதே விரத பலனை நமக்கு
உணர்த்தும்.
* விரதம் இருக்கும் பொழுது மட்டுமே நம்
உடலில் இருக்கும் சக்தியையும் நாம் தினமும்
வீணாக்கும் சக்தியின் அளவையும்
புரிந்துகொள்ள முடியும். விரதம் இருத்தலில்
உணர்வு உறுப்புக்களில் முக்கியத்துவம்
பெருவது வாய் எனும் உறுப்பு. பிற உணர்வு
உறுப்புக்கள் ஒரு செயலை மட்டுமே
செய்யும். ஆனால் வாய் மட்டும் இரு செயலை
செய்யும். சுவைத்தல் மட்டும் பேசுதல் என
இரு செயல்களை தவிர்ப்பதை அனேக
விரதங்களின் அடிப்படையாக இருக்கிறது.
* ஆன்மீகம் என்றும் உள்ளும் புறமும்
தூய்மைப்படுத்தும் கருவியாகவே இருக்கிறது.
நாம் பயன்படுத்தும் சம்பிரதாயங்கள்
சடங்குகளுக்கு பின்புலத்தில் இருக்கும்
காரணம் தெரியாமல் பயன்படுத்துவதால்
நாளடைவில் அதன் மேல் ஒரு சலிப்பு
ஏற்படுகிறது. பக்தியுடனோ அல்லது
ஈடுபாட்டுடனோ செய்யாத ஆன்மீக
காரியங்கள் பலன்கொடுக்காது. ஒருவர் தான்
செய்யும் ஆன்மீக காரியங்களின் தாத்பரியம்
தெரிந்தால் தான் அதில் முழுமனதுடன்
செய்யமுடியும். மேலும் அடுத்த
சந்ததியினருக்கு எடுத்துசொல்ல முடியும்.
* நமது கலாச்சாரத்தில் சைவம், வைணவம்
மற்றும் சாக்தம் என ஏனைய சித்தாத்தங்கள்
இருந்தாலும், அனைத்து முறையிலும் சில
சம்பிரதாயங்கள் ஒன்றாவே இருக்கிறது.
அத்தகைய சம்பிரதாயங்களில் முக்கியமானது
விரதம் இருத்தல் என்பதாகும்.
* விரதம் இருப்பது என்றவுடன் உண்ணாமல்
இருப்பது என்று மட்டுமே நினைத்துவிடுகிற
ோம். ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் தனது
அவயங்களை செயல்படாமல் வைப்பது விரதம்
இருத்தல் என விளக்கலாம்.
* பஞ்சபூதங்களின் வடிவமான நமது
ஐந்துவிதமான உணர்வு உறுப்புக்களை
செயல்படுத்தாமல் இருக்கும் பட்சத்தில்
அபரீதமான சக்தி நமக்குள் சுரக்கும். ப்ராணா
என அழைக்கப்படும் இந்த சக்தியை கொண்டு
நமது ஆன்மீக வாழ்க்கையில் எளிதில்
மேம்படலாம்.
* உணர்வு உறுப்புக்கள் ஒவ்வொன்றும்
பஞ்சபூதத்தின் அடிப்படையாக இருப்பது
பஞ்சபூதம் குறிக்கும் உறுப்புகள் என்ன என
காண்போம்.
கண் - நெருப்பு
வாய் - நீர்
காது - ஆகாயம்
மூக்கு - மண்
தொடு உணர்வு - காற்று
* நமது உணர்வு உறுப்புக்களின் செயலை ஒரு
நோக்கத்துடன் தற்காலிகமாக நிறுத்தும்
பொழுது அது விரதம் என கூறலாம். நம் உடல்
சக்தி அதிகமாக உணர்வு உறுப்புக்கள் மூலம்
வீணக்கப்படுகிறது. நாம் அந்த உணர்வு
உறுப்புக்களை செயல்பட்டாமல் இருக்கச்
செய்தால் அதில் வீணாகும் சக்தி நம்முள்ளே
சேமிக்கப்பட்டு ஆன்மீக ஆற்றலா மாற்றம்
அடையும்.
* காது மற்றும் மூக்கு பகுதிகளின்
செயல்பாட்டில் ஆகாயமும் மண்ணும்
இருக்கிறது. ஆகாயம் மற்றும் மண்ணின்
தொடர்பில்லாமல் நம்மால் ஒரு கணமும்
வாழமுடியாது. அதை போலவே இந்த இரு
அவயங்களின் செயல்களை நாம்மால்
செயற்கையாக நிறுத்த முடியாது.
* உறுப்புக்களின் செயலை தற்காலிகமாக
நிறுத்தினால் நமக்கு சக்தி கிடைக்குமா
எப்படி?
* சதுர்த்தி, சஷ்டி, ஏகாதசி, பிரதோஷம் ஆகிய
திதிகளும், திங்கள் (சோம வாரம்), வியாழன்
(குருவாரம்) கிழமைகளில் விரதமும் நமக்கு
நன்மையை ஏற்படுத்தும். அன்றைய
கோள்களின் நிலை நமது உடலின் சக்தியை
மேலும் வலுசேர்க்கும்.
* சாப்பிடாமல் விரதம் இருக்கும் முறையை
உண்ணாவிரதம் என்றழைத்தோம், தற்சமயம்
உண்ணாவிரதம் இருத்தல் என்பது ஏதோ
அரசியல் செயலாக மாறிவிட்டது. ஒரு
குறிப்பிட்ட நோகத்திற்காக வைராக்கியத்துடன்
உணவு சாப்பிடாமல் இருக்கும் தன்மையை
இவ்விரதம் சுட்டிகாட்டுகிறது. மஹாத்மா
காந்தி வெள்ளையருக்கு எதிர்ப்பு காட்ட நமது
சம்பிரதாயத்தை ஒரு ஆயுதமாக்
பயன்படுத்தினார். தற்சமயம் அது
அரசியலாகிவிட்டது.
* நாமும் ஒரு வாழ்க்கையில் மேன்மை அடைய
ஒரு லட்சியம் மற்றும் வைராக்கியத்துடன்
மாதம் இரு நாளிலோ அல்லது வாரம் ஒரு
நாளோ விரதம் இருப்போம் ஆனால் அவை
கைகூடும் என்பது சான்றோர்களின் வாழ்க்கை
மூலம் அறியலாம.
** நமது உடலின் சக்தியை அதிகமாக
செலவிடும் உணர்வு உறுப்பு கண். கண்களை
காட்டிலும் அதிகமாக் சக்தியை செலவு
செய்யும் உறுப்பு ஜீரண உறுப்புகள்.
உண்ணாமல் இருந்தால் மயங்கி
விழுந்துவிடுவோம் என்ற தவறான எண்ணம்
பலருக்கு உண்டு. உண்மையின் சராசரி மனிதன்
உண்ணாமல் குறைந்தபட்சம் அறுபது முதல்
தொன்னூறு நாள் வாழமுடியும். உங்கள்
உடல்வாகுக்கு ஏற்ப மருத்துவரை
கலந்துகொண்டு உண்ணா நோன்பு இருங்கள்.
உலக மதங்கள் எத்தனையோ இருந்தாலும்
அதில் ஓர் அடிப்படை ஒற்றுமை உண்டு.
அதற்கு சிறந்த உதாரணம் விரதம் எனும்
தன்மை. உலகின் அனேக மதங்களில் விரதம்
ஒரு புனித சடங்காக கொண்டாடப்படுகிறது.
* விரதம் இருக்கும் பொழுது ஏற்படும்
முக்கியமான பயன் மனது தனது செயலை
மிகவும் குறைவாக செய்து தன்னில்
அடங்கிவிடும். மனமற்ற தூய நிலையில்
ஆன்மீக முன்னேற்றம் விரைவாக நடக்கும்.
பால், பழங்களை உண்டு விரதம் இருத்தல் ஒரு
வகை. நீர் கூட குடிக்காமல் விரதம் இருப்பது
மற்றொரு வகை. நமது உடலின் தன்மை
வாழ்க்கை சூழல் பொருத்து விரதம் இருக்க
வேண்டும்.
* சந்திராம்ச விரதம் என ஒரு வகை விரதம்
உண்டு. சந்திரனின் பிறைக்கு ஏற்க சாப்பிடும்
விரதம் சந்திராம்ச விரதம். பெளர்ணமி அன்று
முழுமைகாக சாப்பிட ஆரம்பித்து படிப்படியாக
குறைப்பார்கள். அமாவாசை அன்று ஒன்றும்
சாப்பிடாமல் இருப்பார்கள். அமாவாசைக்கு
அடுத்தநாள் ஒரு கவளம் என படிப்படியாக
உணவை கூட்டுவார்கள். சந்திராம்ச விரதத்தை
பொருத்தவாரை மாதம் முழுவதும் விரத
தினங்கள்தான்.
** யார் எல்லாம் உண்ணா விரதம் இருக்க
கூடாது?
• சஷ்டியப்த பூர்த்தி முடித்த முதியவர்கள்
• வியாதியினால் மருந்து உண்பவர்கள்
• கர்ப்பிணிகள்
• பிரம்மச்சாரிகள்
• சன்யாசிகள்
* இவர்களை தவிர பிறர் உண்ணா நோன்பு
இருக்கலாம் என்கிறது தர்ம சாஸ்திரம். மேலும்
சன்யாசிகளுக்கு என்று தனி விரதங்களும்
பிரம்மச்சாரிகளுக்கு தனி விரதமும்
சாஸ்திரத்தில் உண்டு.
* மெளனவிரதம் இருப்பது வாய் எனும்
உறுப்பின் மற்றொரு விரதமாகும்.
மெளவிரதத்தால் நமது உடல் மற்றும் மனது
தூய்மை ஆகிறது. மெளனவிரதம் அனைவரும்
இருக்க தகுந்த ஒரு விரதம். இதில் யாருக்கும்
தடையில்லை. உலகின் சிறந்த மொழி
மெளனம். தக்ஷ்ணாமூர்த்தி உலகுக்கு அளித்த
வேதம். மெளனமாக இருப்பதால் நம்மில்
இருக்கும் சக்தியை மிகவும் துல்லியமாக
அறியலாம். மெளனவிரதம் இருந்துவந்தால்
உங்கள் உள்ளுணர்வு மிகவும்
கூர்மையானதாக மாறி உங்களை
விழிப்புணர்வாளர்களாக மாற்றும்.
* மெளனவிரதம் இருக்கும் பொழுது சிலர்
காகிதத்தில் எழுதி காட்டுவார்கள். மனதை
ஒருநிலைப்படுத்தும் நோக்கில் இருக்கும்
விரதத்திற்கு இது எதிரான செயல்.
மெளனவிரதம் இருக்கும் காலத்தில் உங்களை
ஒரு ஜடப்பொருளாக பாவித்துக்கொள்ளுங்கள்.
உங்கள் உடல் செயல்படலாம் ஆனால் சைகை
மூலமோ, எழுத்து மூலமோ பேசாதீர்கள்.
அப்பொழுது தான் மெளனவிரதத்தின் பயனை
முழுமையாக உணரமுடியும்
விரதம் என்ற ஒன்றை நம் முன்னோர்
உருவாக்கியது ஆன்மிக நன்மைகள் கருதி
மட்டுமல்ல. உடல் ரீதியாகவும் விரதங்கள்
நமக்கு நன்மை செய்கின்றன.
விரதம் என்பது மனம் அலையாமல் இருக்க,
கண்ட கூத்துக்கள் ஆடாதிருக்க,
ஆவேசப்படாதிருக்க, அசூயையோ ஆத்திரமோ
ஏற்படாதிருக்க செய்யும் விஷயம். இவை
ஏற்படின் விரதம் முடிந்து போனதாகவே
அர்த்தம். ஆவேசப்படுகிற மனதை, அலைகிற
மனதை அடக்கி நிறுத்தவே விரதம் என்கிற
வைராக்கியம்..
அன்னத்தை அடக்கியவன் ஐந்தும் அடக்குவான்
என்று ஒரு பழமொழி உண்டு. ஐந்து என்பது
கண், காது, மூக்கு, வாய், உடல் ஆகிய
ஐந்தையும் குறிக்கும். இந்த உறுப்புகள்
ஒடுங்கும் போது, மனம் மோட்சத்தைத் தேடி,
ஞானத்தை தேடி புறப்படுகிறது.வ
றுமையால்உணவு இல்லை, சூழ்நிலை
காரணமாக உணவில்லை என்ற நிலை வரும்
போது கிடக்கும் பட்டினி விரதம் ஆகாது. நம்
கண்முன் பாலும், பழமும், இனிப்பும்,
சித்ரான்னங்களும், பிற வகை உணவுகளும்
குவிந்து கிடக்கும்போது, மனதை அடக்கி
பசித்திருக்கிறோமோ, அது தான் உண்மையான
விரதம்.இன்றைய உலகில், உணவுக்கட்டுப்பா
டு பற்றி டாக்டர்களே நமக்கு
அறிவுறுத்துகிறார்கள்.
நமது வயிறு 15 நாட்களுக்கு
ஒருமுறையாவது காலியாக இருக்க வேண்டும்.
அதனால் தான் அமாவாசை, பவுர்ணமி,
வெள்ளி, சஷ்டி என்றெல்லாம் விரதங்களை
வகுத்தார்கள். விரதமிருப்பதால் வயிறு
சுத்தமாகிறது. சுருங்கி விரியும் தன்மை
சீராகிறது. மலஜலம் சரியாக வெளியேறுகிறது.
ஆரோக்கியமாக வாழவே விரதங்களை நம்
முன்னோர் வகுத்தனர

Sunday, February 21, 2016

புத்திர சோகத்தை தீர்க்க 10 நாடிகளை சீர்படுத்த வேண்டும்.

புத்திர சோகத்தை தீர்க்க 10 நாடிகளை
சீர்படுத்த வேண்டும். இது தெய்வ சித்தர்
திருமூலரின் அறிவுறை:
---------------------------------------------
------------------------------------
இவ்வுலகில் பல புத்திர சோகத்தில்
பீடிக்கபட்டு அவதிக்குள்ளாகின்றனர்.
இவர்களுக்கான பிரச்சனை 10 நாடிகளையும்
சீராக வைத்துக் கொள்ளாததே
“நாடிகள் பத்தும் நலந்திகழ் வாயுவும்
ஓடிய காலில் ஒடுங்கி இருந்திடும்
கூடிய காமம் குளிக்கு மிரதமும்
நாடிய நல்ல மனமும் உடலிலே” (திம 2174)
பொருள்:
-------------
பத்து நாடிகளும் நன்மைத் தரும் பிராணன்
முதலிய வாயுக்களும் மூலாதாரம் முதலாக
மேலே செல்லும் சுழுமுனையில் ஒடுங்கி
இருக்கும். காமத்தில் பெறும் இன்பமும்
நன்மையை நாடிய மனமும் இவ்வுடலில்
பொருந்தும்.
பத்து நாடிகள்:
--------------------
1. இடப்பால் நரம்பு(இடது மணிகட்டு). 2.
வலப்பால் நரம்பு(வலது கை மணிகட்டு). 3.
நடுநரம்பு(சுழுமுனை). 4. உள் நாக்கு நரம்பு.
5. வலக்கண் நரம்பு. 6. இடக்கண் நரம்பு. 7.
வலச்செவி நரம்பு. 8. இடச்செவி நரம்பு. 9.
கருவாய் நரம்பு 10. எருவாய் நரம்பு. உடலில்
10 வாயுன்க்களும் சிறப்பாக
செயல்பட்டால்தான் இந்த 10 நாடிகளும்
சிறப்பாக செயல்படும்.
அறிவியல் மருத்துவம் என்ன சொல்கிறது?
---------------------------------------------
-------------------
உடலில் மேல் சொல்லபட்ட 10 நரம்புகளும்
அதி முக்கியமானவை. குழந்தை பேறு
இல்லாதவர்களுக்கு இந்த 10 நரம்புகளையும்
சீர்படுத்தவே மருந்துகள் வழங்கப்படுகின்றன.

நான் யார் ?

நான் யார் ?
நமக்கு மொத்தம் ஐந்து 5 விதமான உடல்கள் கோசங்கள் உள்ளன.அவை அன்னமய,ப்ராணமய,மனோமய,விஞ்ஞானமய,ஆனந்தமயகோசங்கள்
1.அன்னம் மயகோசம்- இது நாம் சாப்பிடும் உனவால் ஆனது.
நல்ல சத்துள்ள உனவுகளை-சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாகவும் ,செழிப்பாகவும் காணப்படும்.
சத்துயில்லாத உனவுகளை சாப்பிட்டால் உடல் மெலிந்து,நோய் உள்ளது போல் தோன்றும்.
நிறைய உன்டால் உடல் மிக பருமனாககாணப்படும்.
அறவே சாப்பிடாமல் இருந்தால் உடல் மிக மெலிந்து எலும்பு தோளுமாக தெரியும்.
இத்தேகத்தை ஐடம் என்று உபநிஷத்கள் சொல்கின்றன.
உதாரணம் ;
1.நாம் நன்றாக தூங்கும்போது நம் அருகில் யார் வந்தாலும் நம்மால் தெரிந்துக்கொள்ள முடியவில்லை .அதற்கு காரணம் உடம்பு ஐடம்.
2.நாம் எதையாவது ஆழ்ந்து கதைபுத்தகத்தை ,வேலை அல்லது ஆழ்ந்த சிந்தனையில் இருக்கும்போது நம்மை சுற்றி என்ன எப்படி சூழ்நிலைகள் இருப்பதுகூட நமக்கு தெரியாது.சிலநேரங்களில் பசியைகூட மறந்த நிலையில் இருப்போம் இதற்கு அடிப்படை காரணம் உடம்பு ஐடம் .
…………………………………………………
பஞ்சப்ராணன்
1.ப்ராணன்…….. சுவாசம்
2.அபாணன்……. வெளிக்காற்று
3.வியாணன்……. சாப்பிடும் சாப்பாட்டை ஜீரணப்படுத்துதல்.
4.உதாணன்…….. இரத்த சுத்தி
5.ஸமானன்……….உடற்சுத்தி
ஒரே ப்ராணன் தான் தன் செயலுக்யேற்றார் போல் பெயர்,வடிவம் மாறுகிறது.
கொட்டாவி..பசி..தும்மல்..தாகம்..விக்கல்..
இந்தப் ப்ராணன் நான் இல்லை
———————————————
அஹங்காரம்
மனம் ,சித்தம், புத்தி,அந்தக்கரணம் .ஒரே ஒரு மனம் வெவ்வேறு நிலைகளில் மறுதல் அடைகிறது.
1.மனம்- நமது எல்லா எண்ணங்களின் மொத்த உருவமே மனம் எனப்படும்.
2.சித்தம்- எண்ணங்களின் பதிவுகள்,ஆசைகளின் பதிவு அல்லது ஆசைகளின் மொத்த உருவம்.
3.புத்தி- எண்ணங்களின் தெளிவு பெறும் இடம்.சிந்தனை செய்யும் இடம்.
பிரச்சனைகளை எதிர்நோக்கி முடிவு செய்யும் இடம்.
4.அந்தக்கரணம்- எண்ணங்களை செயல் வடிவமாக்கும் இடம்.
1.மனம்- ஆசைகளை உற்பத்தி ஆகும் இடம் மனம்
-கவலை, இன்பம், கோபம்,சிரிப்பு,ஆனந்தம்,துக்கம்,சோம்பல்,விருப்பு,வெருப்பு,தேவை,தூற்றுதல்,
போற்றுதல், பார்த்தல்,ருசித்தல்,உணர்தல், பேசுதல் இதுபோன்ற இன்னும் பல உணர்ச்சிகளுக்கு காரணம் நம் மனம்.
இந்த மனம் நான் இல்லை
நான் யார்?
………………………………………………
2.சித்தம்- மோகம்,ஆசை,பேரசை,ஏக்கம்,தீராஏக்கம்,தீராதஆசைகள் .
எந்த எண்ணங்கள் மனதில் மிக ஆழமாக பதிகிறதோ அதுவே சித்தம் எனப்படும்.
இந்த சித்தமும் நான் அல்ல?
நான் யார்?
……………………………………………………
3.புத்தி
அறிவு,விடைகாணும் இடம், தெளிவு பெறும் இடம்,சமாதாணம் செய்யும் இடம்,அறிவுரை கூறும் இடம்,அறியவகை கண்டுபிடிப்புக்கள் கண்டு பிடிக்கும் இடம்,
இந்த புத்தியும் நான் இல்லை.
அப்படியென்றால் நான் யார்?
…………………………………………………
அந்தக்கரனம்
ஐந்து கர்ம இந்திரியங்களையும் ஐந்து ஞானயிந்திரியங்களையும் செயல் செய்ய வைப்பது இந்தக் அந்தக்கரணம்.
மனமே மனம் புத்தி சித்தம் அஹங்காரமாக தன் செயலுக்கேற்ப மா£றுகிறது.
மனம் ஒன்றுதான் எண்ணங்களுக்கு ஏற்ப தகுந்தார்ப்போல் மாறுகிறது.
இந்தக் அந்தக்கரணம் நான் இல்லை.
நான் யார்?
……………………………………
மனம்
மனத்தற்கு மூன்று குணங்கள் உண்டு
1.தமோகுணம்
2.ரஜோகுணம்
3.ஸத்வகுணம்
எண்ணங்களுக்கு ,குணத்திற்கு ஏற்ப பெயர் வழங்கப்படுகிறது.
1.தமோகுணம்-தன்மேல் தனக்கு நம்பிக்கை இல்லாமை,சோம்பல்,தூக்கம்,
கலக்கம்,புத்திமந்தம்,பிடிவாதம் ,பொய்யைத் உண்மையென்று நினைத்தல்
அறியாமை,கர்வம்,திமிர்,ஒருப்பொரு¬ஐ வேருரொன்றாக கருதுதல்(விசேப,ஆவரணசக்தி)யோசிக்க முடியாத குணம்.இல்லாததை இருப்பது
போல் காண்பித்தல்.
உதாரணம்; கயிரை பாம்பாக பார்த்தல் .
இந்த தமோகுணமே பிறப்பிறப்புக்கு காரணம் ஆதிகாரணம் ஆகிறது
புனரபி ஜனணம் புனரபி மரனம்
இந்த தமோகுணம் நான் இல்லை
அப்படியானால் நான் யார்?
2 ரஜோகுணம்
இல்லாததை தோற்றுவிக்கும் குணம் கொண்டது.
விருப்பு, வெறுப்பு,துன்பம்,ஆசை,கோபம்,லோபம்(பற்று),இடம்பம்(பெருமைபடுதல்)
அஹங்காரம்(தேகத்தை நான் என்று ஆன்மாவாக நினைத்தல்).பொறமை,
வெளிநாட்ட செயலில் ஈடுபடுதல்.
முயற்சி ,பற்று,பேராசை,இந்திரியங்களின் சேட்டை,அமைதியின்மை இவையாவும்
இரஜோகுணத்தால் உண்டாகும். ஸம்ஸாரத்திற்கு இந்த இரஜோகுணம் தான்
மூலகாரணம்.
இந்த இரஜோகுணம் நான் இல்லை.
பிறகு நான் யார்?
………………………………………
3 ஸத்வகுணம்
மனத்தெளிவு,அமைதி சந்தோஸம்,போதும் என்ற மனம்,ஸதா இன்பத்தில் இருத்தல்,
சாந்தி,கருனை,அன்பு,பரிவு,உயர்ந்த எண்ணம்,நல்லவர்களாக இருத்தல்
பரமாத்விடம் பக்தி,மனத்தை நல்வழியில் செலுத்துதல்,கர்வமின்மை,சிரத்தை
முக்தியின்மேல் நட்டம்,தெய்வஸம்பத்து,பொய்யானதில் இருந்து விலகுதல்
இந்த உலகம் ,இந்த உடம்பு பொய்யெனப் தெரிந்துக்கொள்ளுதல்,எது நித்தியம்
எது அநித்தியம் என்று விவேகத்தால் விசாரித்துக்கொள்ளுதல்.

Saturday, February 20, 2016

கெட்ட சக்திகளால் ஏற்படும் பாதிப்புகளை நீங்க பரிகாரம் !

கெட்ட சக்திகளால் ஏற்படும் பாதிப்புகளை நீங்க பரிகாரம் !
அடிக்கடி பயந்து அல்லது கெட்ட கனவு கண்டு திடுக்கிட்டு எழுதல், உறக்கத்தில் ஏதோ ஒன்று அமுக்குவது போல் சிலருக்கு இருக்கும் அப்படிபட்டவர்கள்
ஓம் நமோ ஹனுமதே ருத்ராவதாராய |
தேவ தானவ யக்ஷ ராக்ஷஸ பூத ப்ரேத பிசாச|
டாகினி சாகினி துஷ்ட க்ரஹ
பந்தனாய ராமதூதாய ஸ்வாஹா ||
இம்மந்திரத்தை மனதுக்குள் ஜெபிக்க அவை உடனே நீங்கும். உங்களுக்கு படுபட்சி இல்லாத நல்ல நாளாகத் தேர்ந்தெடுத்து ஒரு நல்ல வெற்றிலையில் செந்தூரம் கொண்டு “ஹ்ராம்” என்று எழுதி இம்மந்திரத்தை 1008 உரு ஜெபித்து அந்த வெற்றிலையைச் சுருட்டித் தாயத்துக்குள் அடைத்து இடுப்பில் அணிந்து கொள்ள பூத, ப்ரேத, பிசாசு, துர்சக்திகளின் பாதிப்புகள் நிரந்தரமாக நீங்கும்.
தனி நபருக்கு இல்லாமல் ஒரு வீடு, கடை, தொழிற்சாலை போன்றவற்றுக்கு துஷ்ட சக்திகளால் பாதிப்பு என்றால் மேற்கண்ட வெற்றிலையை ஒரு சிகப்புத் துணியில் முடிந்து வீடு, கடை, தொழிற்சாலை வாசலில் கட்டி வைக்கவும்

ஸ்ரீ சக்ர பூர்ண மகா மேரு

அன்பர்களே
இது ஸ்ரீ சக்கர பூரண மகா மேரு ஆகும். ஸ்ரீ சக்ர பூர்ண மகா மேரு
யாகங்களில் உயர்ந்தது அஸ்வமேதம். தேவர்களில் உயாந்தவர் ஹரி. யானைகளில் உயர்ந்தது ஐராவதம். குதிரைகளில் உயர்ந்தது பஞ்சகல்யாணி.
பசுக்களில் உயர்ந்தது காமதேனு. மிருகங்களில் உயர்ந்தது ஸிம்ஹம். பெண்களில் உயர்ந்தவர் ஸீதை. அது போல யந்திரங்களில் உயர்ந்தது சக்ரம் எனப்படும் ;ஸ்ரீ சக்ரபூர்ணமகாமேரு. விநாயகன் உறையுமிடம் ஆனந்தபுரி. முருகன் இருக்கிமிடம் ஸ்கந்தலோகம். ப்ரமன் இருக்குமிடம் ஸத்யலோகம். நாராயணன் இருக்குமிடம் வைகுந்தம.; இந்திரன்இருக்குமிடம் தேவலோகம். சிவபெருமான் இருக்குமிடம் கைலாயம்.
அது போல அன்னை ஜகன் மாதாஅம்பிகை எம்பெருமானுடன் கூடி இன்புற்று உலகத்து உயிர்கள் உய்யும் பொருட்டு அருள்பாலிக்கும் இடம் ஸ்ரீபுரம் எனக்கூறப்படும் ஸ்ரீசக்ர பூர்ணமகாமேரு பீடம் என்னுமிடமாகும். அன்னையுறையும் இந்த யந்திரத்தை கோடுகளாக வரைந்து வைத்தால் அது ஸ்ரீ சக்ரம் எனவும் அதற்கு வடிவம் கொடுத்தால் அதுவே மகாமேரு எனவும் கூறப்படும.; இவவாலயத்தில் காணப்படுவது அதேபோன்ற மகாமேருவாகும்
அன்னை உறையும் இந்த மகாமேரு 9 ஆவரணம் என்னும் கோட்டைகளைக் கொண்டது. அரசர்கள் அரண்மனைகளைச் சுற்றிகோட்டை மதில்களை அமைத்துக் காப்பது போல் தேவியின் ஸ்ரீ சக்ரபுரம் என்னும் கோட்டையைச் சுற்றி 9 கோட்டைகள் உண்டு. ஒவ்வொரு கோட்டையையும் சேனாதிபதிகள் காப்பது போல பெண் சேனாதிபதிகள் காவல் காக்கின்றனர்.ஒவ்வொரு கோட்டையும் ஒவ்வொரு அமைப்பைக் கொண்டது.
1 :முதலில் சதுரக் கோட்டை த்ரைலோக்கிய மோகனசசக்கரம் எனறு பெயர். இதனை ப்ரகடயோகினி முதலான 8 தேவியர் காவல்புரிகின்றனர்.
2 : தாமரை இதழ்போன்ற 16 அமைப்புக்கள் கொண்ட பரிபூரக சக்ரம் என்னும் கோட்டை. இதை குப்தயோகின்p முதலான 16 தேவியர் காவல் புரி;கின்றனர்.
3 தாமரை இதழ் போன்ற அமைப்பபைக் கொண்ட 8 தளங்களைக் கொண்ட கோட்டை இதற்கு ஸர்வரரேஸம்சேஷரபன சக்ரம் என்ற பெயர். இதனை குப்தரயோகினி முதலான 8 தேவியர் காவல் புரிகின்றனர்.
4 14 முக்கோணங்களைக் கொண்ட ஸர்வ ஸொபாக்கியதாயக சக்ரம் என்ற பெயரைக் கொண்டது இதனை ஸம்ப்ரதாய யோகினி முதலான 14 தேவதைகள் காவல் புரிகின்றனர்.
5. 10 முக்கோணங்களைக் கொண்ட ஸர்வார்த்த ஸாதக சக்கரம் என்ற பெயரைக் கொண்டது. இதை குலோத்தீரண யோகினி முதலான 10 தேவதைகள் காவல் புரிகின்றனர்.
6. 10 முக்கோணங்களைக் கொண்ட சர்வரஷாகர சக்ரம் என்ற பெயரினைக் கொண்டது. இதனை நிகர்ப்பயோகினி முதலான பத்து தேவதைகள் காவல் புரிகிpன்றனர்.
7. முக்கோணங்களைக் கொண்ட ஸாவரோககர சக்ரம் என்ற பெயரினைக் கொண்டது. இதனை ரஹஸ்ய யோகினி முதலான 8 தேவதைகள் காவல்புரிகின்றனர்.
8. ஒரே முக்கோணம் ஸாவஸித்தப் பிரதாயக சக்கரம்என்ற பெயரைக் கொண்டது. இதனை அதிரஹஸ்ய யோகினி முதலான தேவதைகள் காக்கின்றனர்.
9. பிந்துஸ்தானம் எனப்படும் ஸர்வானந்தமய சக்கரம் என்ற பெயரைக் கொண்டது. இது ஒரு புள்ளி போன்ற இடமாகும். இதில் பரதேவதையான அம்பிகை ஸ்ரீ லலிதா மகாத்ருபர சுந்தரியாக இருந்து கொண்டு அருள் பாலிக்கின்றாள். லலிதா மஹாத்ருபுர சந்தரியாக இருந்த கொண்டு அருள் பாலிக்கின்றாள்.
இந்த அமைப்பைக்கொண்டஸ்ரீ சக்ரம் உலகம் உய்யும் பொருட்டு, ஆதிசங்கரரால் பாரத தேசத்தில் காஞ்சி. திருவானைக்கா, மற்றம் திருஓற்றியூர் ;போன்ற தலங்களில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. மக்களின் துயரைப் போக்கி அன்னையின் அருளை அளிக்கும். ஒரு சிறந்தமார்க்கம் இந்த மஹாமேரு வழிபாடாகும். அன்னையிடம் நாம் செய்யும் அபசாரத்தினால் உண்டாகும் கோபம் தணிய தேவிக்கு இந்த சக்ரஸ்தாபனம் செய்து வழிபட்டால் எல்லா நன்மையும் பெறுவது திண்ணம்.

Friday, February 19, 2016

பிறந்த குழந்தைக்கு முதல் மொட்டை போடுவதற்கான உண்மையான காரணம் தெரியுமா?

பிறந்த குழந்தைக்கு முதல் மொட்டை போடுவதற்கான உண்மையான காரணம் தெரியுமா?
நம் நாட்டில் நிறைய பழக்கவழக்கங்கள் காரணம் தெரியாமலேயே மக்களால் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் அப்படி பின்பற்றப்படும் பழக்கவழக்கங்களுக்கு பின்னணியில் நிச்சயம் ஓர் உண்மை மறைந்திருக்கும்.
முறையாக சொன்னால் யாரும் பின்பற்றமாட்டார்கள் என்று நம் முன்னோர்கள் செய்த வேலை தான் இது. அதில் குழந்தை பிறந்த ஒரு வருடத்திற்குள் மொட்டை போடுவது என்பது ஒன்று.
பலரும் இது ஓர் குடும்ப வழக்கம், நேர்த்திக்கடன் என்று நினைத்து பின்பற்றி வருகிறார்கள். ஆனால் இதற்கு பின்னணியில் உள்ள உண்மையான காரணம் என்னவென்று யாருக்காவது தெரியுமா?
தெரியாதெனில், உங்களது எண்ணத்தை மாற்றி, இனிமேலாவது உண்மையான காரணத்தைத் தெரிந்து கொண்டு பின்பற்றுங்கள்.
கருவறையில் 10 மாதம்
பிறக்கும் முன் தாயின் கருவறையில் இருக்கிறோம். இந்த கருவறையில் என்ன சந்தனமும், பன்னீருமா நம்மைச் சுற்றி இருக்கும். இரத்தம், சிறுநீர், மலம் போன்றவை நிறைந்த சூழலில் நாம் இருப்போம்.
கடல் நீர்
சாதாரணமாக கடல் நீரில் கை விரல்களை 5 நிமிடம் ஊற வைத்து, பின் அவற்றை நன்கு துடைத்துவிட்டு வாயில் வைத்தால் எப்படி உப்பு அப்படியே இருக்கிறது. 5 நிமிடம் ஊற வைத்த கை விரல்களிலேயே உப்பு இருக்கையில், 10 மாதம் இரத்தம், சிறுநீர், மலம் போன்றவை நிறைந்த சூழலில் இருந்த நம் உடலில் அவை எவ்வளவு ஊறியிருக்கும்.
வெளியேறும் வழி
உடலினுள் சேரும் இந்த கழிவுகள் நம்மை விட்டு எளிதில் வெளியே வந்துவிட்டாலும், நம் தலையில் சேரும் கழிவுகள் மயிர் கால்கள் வழியாகத் தான் வெளியேற முடியும். ஆனால் அதற்கான வழிகள் குறைவு. அதற்காகத் தான் குழந்தை பிறந்த சில மாதங்களுக்குள் மொட்டைப் போடுகின்றனர்.
மொட்டை போடாவிட்டால்?
ஒருவேளை அப்படி மொட்டை போடாவிட்டால், அக்கழிவுகள் தலையில் அப்படியே தங்கி, பிற்காலத்தில் அதுவே பல நோய்கள் வருவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.
நேர்த்திக்கடன்
இப்படி உண்மைக் காரணத்தைச் சொன்னால், பலரும் அலட்சியப்படுத்தி பின்பற்றமாட்டார்கள். எனவே தான் நேர்த்திக்கடன் என்ற பெயரில் நம் முன்னோர்களால் அது பரப்பப்பட்டது.
மூன்று வயதில் ஓர் மொட்டை
சிலர் தங்கள் குழந்தைக்கு மூன்று வயதில் ஒரு மொட்டையைப் போடுவார்கள். இதற்கு காரணம், முதல் மொட்டையின் போது சில கிருமிகள் விடுபட்டிருந்தால், இரண்டாவது மொட்டையின் போது வெளியேறிவிடும் என்பதற்காகத் தான்.
ஆன்மீக ரீதிக்கே மரியாதை
நம் மக்களிடையே அறிவியல் ரீதியாக சொல்வதை விட, ஆன்மீக ரீதியாக சொன்னால், கட்டாயம் செய்வார்கள் என்பதை நம் முன்னோர்கள் நன்கு அறிந்துள்ளனர். எப்படியோ, இப்போதாவது உண்மையான காரணத்தை தெரிந்து கொண்டோமே. அதுவே போதும்.
இனிமேலாவது ஒரு செயலைப் பின்பற்றும் முன் அதற்கான உண்மையான காரணத்தை தெரிந்து கொள்ள முயற்சித்து, அந்த காரணத்தை மற்றவர்களுக்கும் சொல்லி பின்பற்ற வையுங்கள்.

Monday, February 15, 2016

கண் துடிப்பது நல்லதா?...


கண் துடிப்பது நல்லதா?...



கண்கள் துடிப்பது, ஏதோ நமக்கு நடக்கப்போகிறது என்பதன் அறிகுறி என, பரவலான நம்பிக்கை உள்ளது. இடது கண் துடித்தால் வெளியூர் பயணம்.

வலது கண் துடித்தால், வீட்டுக்கு விருந்தினர் வருவார்கள் என்று பொதுவாக நம்பப்படுகிறது. கண் இமைகள் துடிப்பதையே கண் துடிக்கிறது என்கிறோம். இதன் காரணம் என்ன? விளக்குகிறார் பொது மருத்துவர் முருகேஷ்.

கண் இமைகள் ஏன் துடிக்கின்றன?

கண்ளின் இமைப்பகுதி, வெளிப்புற நரம்பு மண்டலம், உடலில் செல்லும் மின்னோட்டம், மின்னணுக்கள் ஆகியவை ஒன்றோடு ஒன்று இணைந்துள்ளன. இந்த இணைப்பில் மிக நுண்ணிய மாற்றங்கள் ஏற்படுவது சகஜம். ரத்த ஓட்டம் எப்படிச் சீராகச் செல்லுமோ அதுபோல, உடலுக்குத் தேவையான மின்னோட்டமும் அனைத்து உறுப்புகளுக்கும் சீராகச் சென்றுகொண்டிருக்கும்.

இதில் வெளிப்புற நரம்பு மண்டலத்தில் செல்லும் நரம்புகளுக்குச் செல்ல வேண்டிய மின்னணுக்களில் (Electrons) மிக நுண்ணிய மாற்றம் ஏற்படும்போது, கண் இமைகள் துடிக்கும். சில சமயங்களில், ஐந்து நிமிடங்களோ, பத்து நிமிடங்களோ கண் இமைகள் துடித்துவிட்டு நின்றுவிடும். சிலருக்கு இடை இடையே கண் தொடர்ந்து துடித்துக்கொண்டேயிருக்கும். இதற்கு பயப்படத் தேவை இல்லை.

எப்படி மின்சாரத்தில் வோல்டேஜ் குறைந்து உயர்கிறதோ, அதுபோல நரம்புகளுக்கும மின்னணுக்களுக்கும் இடையில் நடக்கும் செயல்பாட்டில் மிக நுண்ணிய மாற்றம் ஏற்படும்போது, கண் இமைகள் துடிக்கின்றன. நாம் கூர்ந்து கவனித்தால், சில சமயங்களில் தொடை, முதுகு, தலை போன்ற இடங்களில்கூட சில தசைகள் துடிப்பதை உணரலாம்.

என்ன காரணம்?

மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள், அதிக மன அழுத்தம், தூக்கமின்மையால் ஏற்படும் சோர்வு, முக்கிய சதை மற்றும் தோல் பகுதியில் ஏற்படும் உயிர் வேதி மாற்றங்கள் (Biochemical changes) ஊட்டச்சத்துக் குறைபாடு, தொடர்ந்து கணினி மற்றும் ஸ்மார்ட்போன் என அதிக கதிர்வீச்சுகள்கொண்ட பொருட்களைப் பார்ப்பது, கண்களில் ஈரப்பதம் குறைவது, சிலருக்குக் கண்களில் நீர் வழிவது, எரிச்சல், வீக்கம், அலர்ஜி போன்ற காரணங்களால் கண் இமைகள் துடிக்கக்கூடும்.

தீர்வு என்ன?

கண்களை எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ளவே நாம் கண்களைச் சிமிட்டுகிறோம். கண் சிமிட்டுதல், இதயம் துடித்தல் போன்றவை நம் உடலில் நடக்கும் இயல்பான செயல்பாடுகள்.

இதற்கு எந்த சிகிச்சையும் தேவை இல்லை. இவற்றைக் கட்டுப்படுத்தவும் கூடாது. ஏனெனில் இது சிகிச்சை செய்யக்கூடிய நோய் அல்ல. கைவைத்தியமோ, மாத்திரை மருந்துகளை உட்கொள்வதோ கூடாது. ஒரு நாளைக்கு கண் இமைகள் 10 முறை துடித்தால்கூட நார்மல்தான். அதுவே விட்டு விட்டு 25 முறைக்கு மேல் துடித்துக்கொண்டிருந்தால், அதாவது நடைமுறை வாழ்க்கைக்கு இடையூறாக துடித்துக்கொண்டே இருந்தால் என்ன பிரச்னை என மருத்துவரிடம் சென்று ஆலோசனை கேட்கலாம். 

Sunday, February 14, 2016

தர்பை பற்றி ஆகமம் சொல்லும் அற்புதம்:

தர்பை பற்றி ஆகமம் சொல்லும் அற்புதம்:
(1) விஸ்வாமித்ர குஸோஸீர ஸாலீ மௌம்ஜீச தர்பகா:|
தூர்வா : ஸ்ரேஸ்டா முநி ப்ரோக்தா: ஸப்த தர்பா: ப்ரகீர்த்திதா :||
விஸ்வாமித்ரம், குசம், உசீரம், ஸாலீ, மௌம்சீ, தர்பை, அருகு என்று தர்பத்தை 7வகையாக சொல்லி இருக்கிறது .
(2) அக்ரஸ்தூளா பவேந்நாரீ மூலஸ்தூலம் ந பும்ஸகம்|
மூலாக்ர ஸமம் வாபி புமா நித்யபி தீயதே ||
நுனி பெருத்ததை ஸ்த்ரீ தர்பம் என்றும்,
அடி பெருத்ததை நபும்ஸகம்( அலி) தர்பம் என்றும்,
அடியும் நுனியும் ஒரே மாதிரி இருப்பதை புருஷ தர்பம்
என்றும் சொல்லுவதுண்டு .
(3) விவாஹே புருஷ தர்பா : ஸ்த்ரீ தர்பா : பும்ஸுவனே ததா |
நபும்ஸகம் த்வந்ய கர்மஸு ஏஷ தர்பஸ்ய நிர்ணய :||
விவாஹத்திற்கு புருஷ தர்பையையும்,
பும்ஸவனத்திற்கு ஸ்த்ரீ தர்பயையும்,
மற்ற கர்மாக்களுக்கு நபும்ஸக தர்பத்தையும் உபயோகிக்க வேண்டும் .
(4).அர்ச்சனம் ஜப ஹோமம்ச, தானம் ச பித்ரு தர்ப்பணம் |
அபவித்ரானு பாணிம்ச தத் ஸர்வம்ச விநஸ்யதி||
அர்ச்சனை, ஜபம், ஹோமம், பித்ரு தர்ப்பணம் ஆகிய காலங்களில் பவித்ரம் அணிந்து கொண்டுதான் காரியங்களைச் செய்ய வேண்டும். பவித்ரம் அணியாமல் அச்செயல்களை செய்தால் அவை பயனற்றதாகி விடும் என்று பாரமேஸ்வர ஸம்ஹிதை கூறுகின்றது .
(5)பவித்ரம் ஏக தர்பேன ப்ரேத கர்மணி தாரயேத்|
நித்ய கர்மணி தர்பாப்யாம் த்வாப்யாமேவ சதுர்முக ||
பித்ரு கார்யம் த்ரிபிர் தர்பை: சதுர்பிர் தேவ பூஜனே |||
பஞ்சபி: பௌஷ்டிகே தர்பை: ஷட்பிஸ் ஸாந்த்யாம் பவித்ரகம் ||
போஜனே வளயம் குர்யாது ஸப்தபி: ஸர்வ கர்மஸு||
ப்ரேத காரியங்களில் ஒரு தர்பத்தாலும், சுப காரியங்களில் இரண்டு தர்பங்களாலும், பித்ரு காரியங்களில் மூன்று தர்பங்களாலும், தேவ காரியங்களில் நான்கு தர்பங்களாலும், யாகங்களில் ஐந்து தர்பங்களாலும், சாந்தி கர்மாக்களில் ஆறு தர்பங்களாலும் பவித்ரம் அணிந்து கொள்ள வேண்டும். போஜன காலத்தில் ஏழு தர்பங்களை வளையமாகச் செய்து போட்டுக் கொள்ள வேண்டும் .
(6) த்வியங்குலம் வளயம் ப்ரஹ்மநு க்ரம்தி ரேகாம் குலா மதா|
சதுரங்குலமாயாம : பஞ்சமுஷ்டி ஸ்ம்ருதா குஸா:||
ஐந்து முஷ்டி உள்ள தர்பத்தால் வளையம் இரண்டு அங்குலம் உள்ளதாகவும், உயரம் நான்கு அங்குலம் உள்ளதாகவும் பவித்ரம் பண்ண வேண்டும் .
(7) விஸீர்ணா விகளா ஹ்ரஸ்வா வக்ரா ஸ்தூளா க்ருஸா த்விதா |
க்ருமி தஷ்டாஸ்ச தீர்காஸ்ச வர்ஜயேத் ஸமிதோ புத:||
பிளந்தது, ஒடிந்தது, சிறியது, கோணலானது, பருமனானது, மெலிந்தது, விரிந்தது, புழு அரித்தது, மிக நீளமானது ஆகிய ஸமித்துக்களை உபயோகிக்க கூடாது .
(8) ஏதே வித்த விநாஸிந: ஸ்தூளா ராஜ பயங்கரீ|
த்விதா சோர பயங்கரீ விஸீர்ணா ஸுக மாஹரேத்||
அக்னிதாஹம் பவேத்தீர்கம் க்ருஸா காந்தா ஸுகம் ஹன்யாது ||
இவைகள் பொருளை அழிக்கும்.
1) மிகப் பருமனாயுள்ளது ராஜ தண்டனையை அழிக்கும்; 2) பிளவு பட்டது திருடர் பயத்தையும்;
3) பிளந்தது சுகத்தையும் போக்கும்;
4) மிக நீளம் அக்னி பயத்தையும்;
5) மெல்லியது உடல் நலக் குறைவையும் உண்டாக்கும்.
(9) அஸ்வத்த வட பாலாஸ ப்லக்ஷோ தும்பர ஸம்பவா :|
ஸம்யபாமார்க கதிரா : குசேன ஸமிதோ நவ :||


அரசு, ஆல், புரசு, ப்லக்ஷம், அத்தி, வன்னி, நாயுருவி, கருங்காலி, தர்பை இந்த ஒன்பதும் ஸமித்துக்களாகும்.

எருக்க இலை குளியல்.🌵

எருக்க இலை குளியல்.🌵🌴🌵
மகாபாரத பாேரில் பாேர்க்களத்தில் வீழ்த்த பட்ட பீஷ்மர்அம்பு படுக்கையில் படுத்து இருந்தார். நினைத்த நேரத்தில் உயிர் விடலாம் என்று அவர் வரம் பெற்று 
இருந்ததால் அவர் ஜீவன்
பிரியவே இல்லை. காலம்
சென்று காெண்டே இருந்தது. பலர் வந்து
பார்த்தவண்ணம் சென்றனர். அப்பாேது அங்கு வந்த வியாசரிடம் நான் என்ன பாவம் செய்தேன். என் உயிர் பாேகவில்லையே என்று மனம் வருந்தினார். அதற்கு
வியாசர் ஒருவர் தன் மனம் மாெழி மெய்யால் தீமை செய்யாவிட்டாலும் பிறர் செய்யும் தீமைகளை தடுக்காமல் இருந்தாலும்
பாவம் தான் என்றார்.
உடனே பீஷ்மருக்கு சபை
நடுவே பாஞ்சாலியின்
உடைகளை துச்சாதனன்
துகில் உரித்தபாேது அதை தடுக்காமல் இருந்த தவறு நினைவுக்கு வந்தது. இதற்கு விமாேசனம் இல்லயா? என்று கேட்டார். அதற்கு வியாசர் எப்பாெழுது நீ உன் பாவத்தை உணர்ந்தாயாே
அப்பாேதே அது அகன்று
விட்டது. இருந்தாலும்
கண்டும் காணாமல்
இருந்த கண்கள், செவி,
வாய், தாேள் கைகள்,
புத்தி உள்ள தலை
ஆகியவை தண்டனை
அனுபவிக்க வேண்டும்
என்பது விதி என்றார்
வியாசர். பின்னர் எருக்க
இலை ஒன்றை காட்டி
எருக்க இலை சூரியனுக்கு
உகந்தது. சூரியனின்
சாரம்உள்ளது. ஆகவே
அந்த இலைகளால் உன் அங்கங்களை அலங்கரிக்கிறேன் என்று கூறி பீஷ்மரின் அங்கங்களை எருக்க இலையால் அலங்கரித்தார். இதனால்
அமைதியாக இருந்த
பீஷ்மர் தியானத்தில்
மூழ்கி ஏகாதசியன்று
உயிர் நீத்தார். பீஷ்மருக்கு நீத்தார் கடன் செய்ய யாரும் இல்லாததால் தர்மர் வருத்தப்பட்டார். இது
குறித்து அவர் வியாசரிடம்
கூற அதற்கு அவர்
சூரியனுக்காக எருக்க இலை சூடி விரதம்
இருக்கும் ரத சப்தமி
நாளில் நாடு முழுவதும்
மக்கள் பீஷ்மருக்காக
நீர்க்கடன் அளிப்பார்கள்.
ரத சப்தமி நாளில் எருக்க
இலைகளை வைத்துக்காெண்டு குளிக்கும் மக்கள் தங்கள் பாவங்களில் இருந்து
விடுபடுவார்கள். பீஷ்மருக்கும் நீர்கடன் அளித்த புண்ணியம் கிடை க்கும் என்று கூறினார். அதனால் தான் ரதசப்தமி அன்று விரதம் இருப்பதும் எருக்க இலையை உடலில் பல அங்கங்களிலும் வைத்துகாெண்டு குளிப்பதும் ஏற்பட்டது.

Friday, February 12, 2016

வேள்வி, ஹோமம், யாகம் - ஓர் அறிமுகம்!

வேள்வி, ஹோமம், யாகம் - ஓர் அறிமுகம்!

வேள்வி, யாகம், ஹோமம், ஓமம் என பல்வேறு பெயர்களில் வழங்கப்படும் சடங்கு முறைகளைப் பற்றியே பார்க்க இருக்கிறோம். நெருப்பினை ஏற்றி அதில் பலவேறு பொருட்களை இட்டு எரிப்பதன் மூலமாக இறைவனை வழிபடும் முறையே ஹோமம் என பொதுமைப் படுத்திவிடலாம். இந்து மரபியலில் வேதகாலத்தில் இருந்தே இத்தகைய சடங்கு முறைகள் வழக்கில் இருந்து வருகிறது. வேறு சில மதங்களிலும் இத்தகைய வழிபாட்டு முறைகள்வழக்கத்தில் இருக்கின்றன.

ஆதி மனிதனின் வாழ்வில் சூரிய வழிபாடு பிரதானமாய் இருந்தது.நெருப்பின் பயன்பாடு அறியப்பட்ட பின்னர், நெருப்பினை சக்திவாய்ந்த சூரிய கடவுளின் பிரதிநிதியாக கருதினர். இதன் தொடர்ச்சியாக தங்களை காத்துக் கொள்ளவும், தங்களது வேண்டுகோள்களை சூரிய கடவுளின் கவனத்திற்கு கொண்டு செல்லும் ஊடகமாய் நெருப்பு விளங்கத் துவங்கியது. இந்த புள்ளியில்தான் வேள்வி அல்லது ஹோமங்களின் ஆரம்பப் புள்ளி இருந்திருக்க வேண்டும். கடவுளுக்கு அர்பணிப்பதாக கருதி பொருட்கள், விலங்குகள் சமயங்களில் மனிதர்களைக் கூட யாகத்தில் இட்டு வழி பட்டிருக்கின்றனர்.

யஜுர்வேதத்தில் முப்பது வகையான யாகங்களைப் பற்றிய குறிப்புகள் காணப் படுகின்றன. இந்த யாகங்களை குறிப்பிட்ட இனத்தவரே செய்திட வேண்டும் என்கிற மரபு காலம் காலமாய் இருந்து வருகிறது. ஒவ்வொரு கடவுளுக்கும், ஒவ்வொரு தேவதைக்கும் என தனித் தனியான யாக முறைகள் கூறப் பட்டிருக்கிறது. யாகத்தில் இட வேண்டிய பொருட்களும் ஒவ்வொரு தெய்வத்திற்கும் மாறுபடும். யாகங்களின் மூலம் அந்தந்த தெய்வங்களை திருப்தி செய்து அதன் மூலம் நற் பலன்களைப் பெறலாம்; என்கிற கருதுகோளே காலம் காலமாய் இந்த பழக்கம் தழைத்திருக்க காரணம்.

மத நம்பிக்கைகள் ஒரு புறம் இருந்தாலும் இந்த யாகங்களின் பின்னனியில் அறிவியல் வாதங்கள் இருந்திருக்க வேண்டும் என்பதை நிறுவும் வகையில் பலர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.அந்த ஆய்வுகளின் தெளிவுகள் அறிக்கைகளாய் பகிரப் பட்டிருக்கின்றன.

சித்தர் பாடல்களில் ஹோமம்!
---------------------------------------------
தமிழர்கள் வாழ்வில் ஹோமச் சடங்குகள் எப்போது துவங்கியது என்பது குறித்த சரியான தகவல்கள் இல்லை.ஆனால் அகத்தியர் துவங்கி பல சித்தர் பெருமக்கள் தங்களின் பாடல்களில் இந்த சடங்குகள் குறித்த தகவல்களை அளித்திருக்கின்றனர். அகத்தியர்,திருமூலர், போகர், அகத்தியர், புலிப்பாணி, கருவூரார், கோரக்கர் போன்ற பல சித்தர்களின் பாடல்களில் ஹோமம் பற்றிய தகவல்கள் விரவிக் கிடக்கிறது.

அகத்தியர் தனத் “ஏமதத்துவம்” என்கிற நூலில் ஹோமம் பற்றி பின்வருமாறு கூறுகிறார்.

பாரப்பா பார்தனிலே யிருக்குமட்டும்
பத்திகொண்டு டிசைந்துநீ ஓமஞ்செய்தால்
நேரப்பா பருதிமதி யுள்ளம் மட்டும்
நீமகனே பூரணமாய் வாழ்வாயப்பா
காரப்பா நித்தியகர்ம அனுஷ்டானங்கள்
கருணையடன் செய்துகொண்டு கனிவாய்மைந்தா
தேரப்பா சிறப்புடனே ஓமஞ்செய்து
சிவசிவா விசயோகத் திறத்தைகாணே.
- அகத்தியர் -

ஹோமம் செய்வதனால் உண்டாகும் சிறப்புகளை அகத்தியர் இந்த பாடலில் கூறியிருக்கிறார். திருமூலர் அருளிய திருமந்திரத்தில் பல இடங்களில் ஹோமம் பற்றிய வரிகள் காணக் கிடைக்கின்றன. அவை பின்வருமாறு...

"ஓமத்திலேயும் ஒருத்தி பொருந்தினாள்"

"வின்னா விளம்பிரை மேவிய குண்டத்துச்"

"நாடறிமண்டலம் நலவிக் நலவிக் குண்டத்தும்"

"நின்ற குண்டம் நிலையாறு கோணமாய்"

பழந் தமிழகத்தில் அறுவடை முடிந்த பின்னர் வயலில் எஞ்சியிருக்கும் பயிர்களை கொளுத்தி விடும் பழக்கம் இருந்தது.இன்றும் கூட சில இடங்களில் இதனைக் காணலாம். இதன் பின்னர் மதம் சார்ந்த நம்பிக்கைகள் இருந்தனவா என்பது தெரியவில்லை.

ஆனால் அறிவியல் ரீதியாக இத்தகைய செயல்கள் நிலத்திற்குத் தேவையான சத்துக்களை தரும்.இதை இங்கே குறிப்பிட காரணம் வரப்புகள் சூழ்ந்த வயல்வெளியில் வளர்த்த தீயின் சுருங்கிய அல்லது சுருக்கிய வடிவமே ஹோம குண்டங்களாயிருக்க வேண்டும். ஏனெனில் ஹோமங்கள் பூமியின் மீதுதான் வளர்த்திட வேண்டுமெனவும் கூறப்பட்டிருக்கிறது.

இந்த ஹோம குண்டங்களின் வடிவங்கள் என்ன?, அவற்றின் வகைகள் யாவை?,

ஹோமங்களின் அறிவியல்!
-----------------------------------------
யாகம் ஹோமம் அல்லது யாகம் என்கிற சடங்குமுறை மதரீதியான ஒன்று என்றாலும், ஒலியும், ஒளியும் இல்லாத ஒரு வாழ்க்கையை நாம் நினைத்தே பார்க்கமுடியாது. இந்த இரண்டு சக்திகள் நமது வாழ்வில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை கண்ணிழந்த, செவித்திறனற்ற நமது சகோதர, சகோதரிகளை பார்க்கும் போது எவரும் உணரமுடியும்.

ஒலியின் மூலம் அதிர்வுகள், ஒளியின் மூலம் வெப்பம். யாகம் என்பது இந்த இரண்டு சக்திகளை ஒருங்கினைக்கும் ஒரு நிகழ்வு. இந்த ஒருங்கினைப்பு மனித உடலுக்கும், உள்ளத்துக்கும் நன்மை விளைவிப்பதோடு, யாகம் செய்யும் இடத்தின் சுற்றுப்புற சூழலிலும் பாதிப்புகளை உண்டாக்குவதாகவே இந்த அறிவியல் வாதங்கள் முன்வைக்கப் படுகின்றன.

அமெரிக்க அறிவியலார் Dr.Howard steingull என்பவர் காயத்ரி மந்திரங்களை உச்சரிக்கும் பொழுது ஒரு நொடிக்கு 1,10,000 ஒலி அலைகள் உருவாவதாக கூறுகிறார். இந்த அதிர்வானது உச்சரிப்பவரின் உடலில் ஏற்படுத்தும் விளைவுகளையும் கூறியிருக்கிறார். இது மாதிரி ஒவ்வொரு மந்திரமும் தனித்துவமான அதிர்வுகளை உருவாக்கக் கூடியவை. இம் மாதிரியான மந்திரங்களை ஒத்திசைவுடன் குழுவாக சொல்லும்போது அவை உருவாக்கும் உணர்வுகளையும், அதிர்வுகளை அந்த சூழலில் இருப்பவர்கள் அனுபவித்தே அறியமுடியும்.

யாக தீயினால் உருவாகும் புகையானது மனிதர்களுக்கும் அவர்கள் வாழும் சுற்றுப் புற சூழலிலும் பாதிப்புகளை உண்டாக்குவதாக பல தெளிவுகள் முன்வைக்கப் பட்டிருக்கின்றன. மும்பை மாநகரில் இயங்கிவரும் மருத்துவ ஆய்வு நிறுவனமான Haffkine Institute for Training, Research and Testing நிறுவனத்தை நிறுவிய Dr. Waldemar Mordecai Haffkine இது தொடபான பல தெளிவுகளை ஆதாரப் பூர்வமாய் முன்வைத்திருக்கிறார்.

சித்தர்கள் அருளிய ஹோமங்கள் பற்றிய தொடர் திசை மாறுவதாய் கருதிட வேண்டாம். பழமையின் அற்புதங்களை முன் வைக்கும் போது அவை தொடர்பான சமகால தெளிவுகளை இனையாக பகிர்ந்து கொள்வதனால் வாசிப்பனுபவம் மேலும் சுவாரசியமாகும் அல்லவா!. ஹோமங்கள் பொதுவாக ஏதேனும் ஒருவகையான எதிர்பார்ப்புகளை முன்வைத்தே செய்யப் படுகிறது. எண்ணிய எண்ணங்கள் ஈடேறிட, நோய் நொடிகளில் இருந்து காத்துக் கொள்ள, சமூக நன்மைகளை முன்வைத்து என எதிர்பார்ப்புகளே முன்னிலை வகிக்கின்றன.

ஹோமம் செய்வதன் மூலம் தெய்வங்களை திருப்தி படுத்தி பலன்களை அடைந்திடலாம் என்கிற நம்பிக்கை ஒரு புறம் இருந்தாலும், சமீபத்தையை ஆய்வறிக்கைகள் ஹோமத்தின் பலன்களை அறிவியல் ரீதியாகவும் நிறுவிக் கொண்டிருக்கிறது. ஹோமத்தில் இடும் பொருட்கள் எரிவதனால் உண்டாகும் வேதிவினைகளின் பலன்களாக பின்வரும் பயன்கள் பட்டியலிடப் படுகின்றன.

ஹோமத் தீயினால் உருவாகும் புகையானது மனிதர்கள், விலங்குகள் மற்றும் தாவரங்களில் நோய் உண்டாக்கும் கிருமிகளை அழிப்பதாகவும், மனித உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாகவும், ஹோமம் நடக்கும் இடத்தை சுற்றியிருக்கும் நீர்நிலைகள், உண்வுப் பொருட்கள் ஆகியவை நச்சுத் தன்மை அடையாதவாறு பாதுகாப்பதாகவும், காற்றில் பரவியிருக்கும் கரியமிலவாயுவினை சிதைத்து ஆக்சிஜனை அதிகரிப்பதாகவும், ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஹோமத்தில் உருவாகும் புகையானது சூரிய ஒளியோடு கலந்து உருவாகும் ஒளிவேதி சேர்க்கையினால் கதிர் வீச்சுகளில் இருந்து பாதுகாப்பு கிடைப்பதாகவும் பட்டியல் தொடர்கிறது. இது தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன, எதிர்காலத்தில் மேலும் பல புதிய தகவல்கள் நமக்கு வந்து சேரலாம் அவை ஆச்சர்யமாகவுமிருக்கலாம்.

இறுதியாக ஒரு தகவல், யாகம் செய்வதனால் மழை வருமா?, இந்த கேள்வியும் அது தொடர்பான வாத விவாதங்களும் முடிவில்லாதவை. நவீன அறிவியலில் செயற்கை மழை எவ்வாறு உருவாக்கப் படுகிறது என பார்த்தால் விமானங்கள் மூலம் மேகக் கூட்டத்தினிடையே சில்வர் அயோடைட் அல்லது உலர் பனிக் கட்டிகள் தூவப் படுகின்றன. இதன் பொருட்டு மேகங்கள் குளிர்ந்து மழை பெய்கிறது. இந்த உலர் பனிக் கட்டி(dryice) என்பது திண்ம கரியமில வாயுதான். வருணயாகம் என சொல்லப் படும் ஹோமத்தின் மூலம் இத்தகைய ஒரு அறிவியல் நிகழ்வே செயல்படுத்தப் படுகிறது என்கின்றனர். இது தொடர்பாக பகிர்ந்து கொள்ள நிறைய தகவல்களை சேகரித்து வைத்திருக்கிறேன். தனியே மின் நூல் ஒன்று எழுதிடும் உத்தேசமிருக்கிறது. அப்போது இந்த ஹோமங்களின் அறிவியலை விரிவாக பகிர முயற்சிக்கிறேன்.

ஹோமம் செய்ய என்னவெல்லாம் வேண்டும்?

யஜுர்வேதத்தில் முப்பது வகையான ஹோமங்கள் குறிப்பிடப் பட்டிருக்கிறது என்று முன்னர் பார்த்தோம். இவை ஒவ்வொன்றும் தனித்துவமான நோக்கத்தை முன்னிறுத்தி செய்யப் படுபவை. எனவே இவற்றில் பயன்படுத்தும் பொருட்களும் வெவ்வேறானவை. பொதுவில் ஹோமங்களில் பயன்படுத்தப் படும் பொருட்களின் வகைகளை யஜுர்வேதம் பின்வருமாறு கூறுகிறது.

பலவகையான மர குச்சிகள் அல்லது விறகு, மூலிகைகள், பல வகையான தானியங்கள், பழங்கள், உலர்பழங்கள், திரவபொருட்களான நெய், பால், உண்வுப்பண்டங்கள், வாசனை திரவியங்கள், ஆடைகள், உலோகங்கள், நகைகள், கால்நடைகள் என பட்டியல் நீள்கிறது. இன்றைய பதிவில் ஹோமங்களில் பயன்படுத்தப் படும் பொருட்களைப் பற்றி நமது சித்தர் பெருமக்கள் கூறியுள்ளதை மட்டும் பார்ப்போம்.

அகத்தியர் மற்றும் புலிப்பாணி சித்தர் தங்களின் பாடலில் பின்வருமாறு பட்டியலிடுகின்றனர்.

"நாளப்பா சமுத்துவகை சொல்லக் கேளு
நலமான அரசினொடு மாவின் சுப்பி
சுப்பென்ற மாவினோடு அத்திக் கொம்பு
சொல்வெட்டி வேர் விளாமிச்சியோடு
ஆப்பென்ற ஆலுடன்மல்லிகையின் சுப்பி
அப்பனே நெல்லிசுப்பி நாவல் சுப்பி
சுப்பென்ர அத்தி சுப்பி யிலுப்பை சுப்பி
கண்மணியே பேயத்திச் சுப்பியோடு
நப்பென்ற கடுகுரோ கணியும் கூட
நலமான எருக்கினோடு கள்ளிக்கொம்பே"
- புலிப்பாணிச் சித்தர் -

"கேளப்பா மாவிலங்கு விளாஅத்தி நொச்சி
கெடியான அரசுடனே வில்வம் யெட்டி
வாளப்பா மாச்சுப்பி இதுவெட்டும்
வளமான எரிதுரும்பாம் அசுராளண்டர்
நாளப்பா துட்டகண பூதமெல்லாம்
நாடாது ஓமத்தில் வலுத்த சித்தி
மூளப்பா செபஞ்செய்து ஓம்சாந்தியென்றே
தீர்க்கமாம் ஓமத்தில் போடு போடே"
- அகத்தியர் -

இந்த ஓமத் தீவளர்க்க தேவையான மூலிகைகளை சமித்துக்கள் என்கின்றனர். இனி இந்த சமித்துகள் விவரம் பின்வருமாறு...

ஆல், அத்தி, அரசு, அகில், கருங்காலி, புரசு, அருகு, பூவரசு, நெல்லி, நாவல், எருக்கு, கடுகு ரோகிணி, வன்னி, வெட்டிவேர், மூஞ்சுப்புல், தர்ப்பைப் புல், நாயுருவி, விளாமிச்சி வேர், சந்தனம், நொச்சி, தேவதாரி, மா, போன்ற பல மூலிகைத்தாவரங்களும், விலங்குக் கழிவுகளாய் பெறப்படும் வாசனை திரவியங்களும் அடங்கும். இது தொடர்பான முந்தைய பதிவை இந்த இணைப்பில் காணலாம்.

மேலும் இவற்றுடன், பசுப்பால், பசுத்தயிர், பசுநெய், கோசலம், மற்றும் கோமயம் பயன் படுத்தப்படுமாம். மேலும் இதில் அனைத்துவகை மூலிகை தாவரங்களும் பயன்படுத்தலாமாம். அத்துடன் தானிய வகைகளும், அனனம், எலுமிச்சை, பருத்தி ஆடைகள் மற்றும் நூல்களும் மேலும் பல பொருட்களும் வழிப்பாட்டின் தேவையைப் பொறுத்துப் பயன் படுத்தபடுகிறது என்கின்றனர்.

ஹோம குண்டத்தின் அமைப்பும், வகைகளும்..

சித்தர்கள் ஹோம குண்டங்களை ஆறு வகையாக கூறியிருக்கின்றனர். ஒவ்வொரு தேவைக்கேற்ப இந்த ஹோமகுண்டங்களின் அமைப்புகள் மாறுபடுமாம்.

ஹோமங்கள் பூமியின் மீதுதான் செய்யப் படவேண்டும் என்கின்றனர். இந்த ஹோம கிரிகைகளில் வழிபடுபவர் கிழக்கு முகமாய் பார்த்து உட்காரவேண்டுமாம். மிக முக்கியமாக இந்த ஹோமங்களை எவரும் செய்திடலாம் என்கின்றனர். குறிப்பிட்ட இனத்தவர் மட்டுமே செய்திட வேண்டும் என்கிற இந்து மரபியலை சித்தர்கள் முழுமையாக நிராகரிக்கின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.

ஹோம குண்டங்களின் ஐந்து படிநிலைகளை கொண்டதாக அமைத்திட வேண்டுமாம். நடுவில் வட்டவடிவமான குழி அமையுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்கின்றனர். ஹோம குண்டத்தின் மகத்துவத்தினை அகத்தியர் பின்வருமாறு கூறுகிறார்.

"தானான தீபமடா மந்திரபீடம்
சராசரத்துக் குயிரான மந்திரபீடம்
வானான அண்டமடா மந்திரபீடம்
மகத்தான ரவிமதியு மந்திரபீடம்
சிவாயகுரு பீடமென்ற பீடங்கள்போடே"
- அகத்தியர் -

ஹோம குண்டங்களை ஆறு வகையாக பார்த்தோம்.

அவையாவன...வேள்வி, யாகம், ஹோமம், ஓமம் என பல்வேறு பெயர்களில் வழங்கப்படும் சடங்கு முறைகளைப் பற்றியே இனிவரும் நாட்களில் பார்க்க இருக்கிறோம். நெருப்பினை ஏற்றி அதில் பலவேறு பொருட்களை இட்டு எரிப்பதன் மூலமாக இறைவனை வழிபடும் முறையே ஹோமம் என பொதுமைப் படுத்திவிடலாம். இந்து மரபியலில் வேதகாலத்தில் இருந்தே இத்தகைய சடங்கு முறைகள் வழக்கில் இருந்து வருகிறது. வேறு சில மதங்களிலும் இத்தகைய வழிபாட்டு முறைகள் வழக்கத்தில் இருக்கின்றன.

ஆதி மனிதனின் வாழ்வில் சூரிய வழிபாடு பிரதானமாய் இருந்தது.நெருப்பின் பயன்பாடு அறியப்பட்ட பின்னர், நெருப்பினை சக்திவாய்ந்த சூரிய கடவுளின் பிரதிநிதியாக கருதினர். இதன் தொடர்ச்சியாக தங்களை காத்துக் கொள்ளவும், தங்களது வேண்டுகோள்களை சூரிய கடவுளின் கவனத்திற்கு கொண்டு செல்லும் ஊடகமாய் நெருப்பு விளங்கத் துவங்கியது. இந்த புள்ளியில்தான் வேள்வி அல்லது ஹோமங்களின் ஆரம்பப் புள்ளி இருந்திருக்க வேண்டும். கடவுளுக்கு அர்பணிப்பதாக கருதி பொருட்கள், விலங்குகள் சமயங்களில் மனிதர்களைக் கூட யாகத்தில் இட்டு வழி பட்டிருக்கின்றனர்.

யஜுர்வேதத்தில் முப்பது வகையான யாகங்களைப் பற்றிய குறிப்புகள் காணப் படுகின்றன. இந்த யாகங்களை குறிப்பிட்ட இனத்தவரே செய்திட வேண்டும் என்கிற மரபு காலம் காலமாய் இருந்து வருகிறது. ஒவ்வொரு கடவுளுக்கும், ஒவ்வொரு தேவதைக்கும் என தனித் தனியான யாக முறைகள் கூறப் பட்டிருக்கிறது. யாகத்தில் இட வேண்டிய பொருட்களும் ஒவ்வொரு தெய்வத்திற்கும் மாறுபடும். யாகங்களின் மூலம் அந்தந்த தெய்வங்களை திருப்தி செய்து அதன் மூலம் நற் பலன்களைப் பெறலாம்; என்கிற கருதுகோளே காலம் காலமாய் இந்த பழக்கம் தழைத்திருக்க காரணம்.

மத நம்பிக்கைகள் ஒரு புறம் இருந்தாலும் இந்த யாகங்களின் பின்னனியில் அறிவியல் வாதங்கள் இருந்திருக்க வேண்டும் என்பதை நிறுவும் வகையில் பலர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.அந்த ஆய்வுகளின் தெளிவுகள் அறிக்கைகளாய் பகிரப் பட்டிருக்கின்றன.

ஹோமம் - நிறைவாய் சில விளக்கங்கள்!

இந்து மரபியலில் ஹோமங்கள் ஒரு குறிப்பிட்ட உயர் பிரிவினரால் மட்டுமே நடத்தப்பட வேண்டும். மற்றவர்களுக்காக அவர்களே ஹோமங்களைச் செய்து பலனை வழங்கி வந்தனர். இதனை சித்தர் மரபியல் உடைத்தெறிகிறது. அவசியமும், ஆர்வமும் உள்ள எவரும் ஹோமத்தினை செய்திடலாம் என்கின்றனர். இடைத் தரகர்கள் இல்லாத ஒரு நிலையினை சித்தரியல் வலியுறுத்துகிறது.

இந்த கருத்தியலின் இன்னொரு அம்சத்தினையும் நாம் அவதானிக்க வேண்டும். சித்தர்கள் தங்களின் தெளிவுகளை தங்களின் சீடர்களின் பயன்பாட்டுக்கெனவே பாடல்களாய் அருளியிருக்கின்றனர்.இந்த ஹோம முறைகளும் கூட சீடர்களின் நலன் விரும்பியே அருளப் பட்டிருக்கின்றன.எனவே பிறர் நலம் கருதி நாம் ஹோமம் செய்வதைப் பற்றிய குறிப்புகள் ஏதும் இல்லை. எனவே இயன்றவரையில் நம்முடைய தேவைகளுக்கு நாமே ஹோமம் செய்து கொள்வது சிறப்பு.

ஹோம குண்டங்கள் பூமியின் மீதுதான் அமைக்கப் பட வேண்டும் என வலியுறுத்திக் கூறப்பட்டிருக்கிறது. இன்றைக்கு வீடுகளில் கூட தரையில் மணல் பரப்பி அதன்மீது ஹோம குண்டம் அமைப்பதன் பின்னனி இதுவாகவே இருக்க வேண்டும் என கருதுகிறேன். மேலும் இந்த ஹோம குண்டங்கள் களி மண்ணினால் செய்து பயன்படுத்த வேண்டுமாம். ஹோம குண்டங்கள் ஐந்து அடுக்கு உள்ளவையாக அமைய வேண்டுமென்பதும் வலியுறுத்தப் பட்டிருக்கிறது.ஹோம குண்டத்தின் உட்புறம் வட்ட வடிவமாக இருத்தல் அவசியம்.

ஹோமம் செய்பவர் ஹோம குண்டத்தின் முன்னர் கிழக்கு முகமாய் அமர்ந்தே செய்திட வேண்டும் என வலியுறுத்தப் படுகிறது. ஹோம குண்டத்தில் எழுதப் படும் எழுத்துக்கள் சுத்தமான அரிசி மாவினால் மட்டுமே எழுதப்பட வேண்டுமாம்.ஹோமத்தினை துவங்கும் முன்னரும், ஹோமம் முழுமையடைந்த பின்னரும் குருவினை மனதில் நினைத்து வணங்கிட வேண்டும்.இவ்வாறு செய்வதன் மூலமே ஹோமம் முழுமையடைவதாக கூறப்படுகிறது.

ஹோமங்கள் என்பவற்றை ஒருவகையான அறிவியல் நிகழ்வாகவே கருதுகிறேன். இவற்றின் பின்னால் பொதிந்திருக்கும் நுட்பங்களை தேடுவதன் மூலம் பல அரிய உண்மைகள் நமக்குப் புலப்படும் வாய்ப்புகள் நிறையவே இருக்கின்றன